திருமலை ஷண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறதா?

வை. எல். எஸ். ஹமீட் இந்த விவகாரம் கடந்த பல மாதங்களாக தீர்க்கமுடியாத ஒரு பிரச்சினையாக நீடிக்கின்றது. இது தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது. தற்போதை இவர்களின் இடமாற்றத்திற்கு யார் பொறுப்பு? குறித்த பாடசாலை ஒரு தேசிய பாடசாலை. ஒரு மாகாண கல்விப் பணிப்பாளரைப் பொறுத்தவரை அவருக்கு இரண்டு தொழிற்பாடுகள் இருக்கின்றன. ஒன்று: மாகாண பாடசாலைகளை பொறுத்தவரை அதிகாரம் பொருந்திய பணிப்பாளர், தேசிய பாடசாலைகளைப் பொறுத்தவரை மத்திய கல்வியமைச்சின் பிரதிநிதி. இங்கு அவருக்கு சொந்த அதிகாரமில்லை. இசுறுபாயவின் உத்தரவுகளைத்தான்…

பலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.நா.சபை ஆழ்ந்த இரங்கல்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் அல்-முக்ஹைர் கிராமத்தில் பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை நோக்கம் கொண்ட தாக்குதல் தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அடே அட் என்ற பலஸ்தீன கிரமத்திற்கு அண்மையில் அமைந்துள்ள சட்டவிரோத குடியேற்றப் பகுதியி்ல் இஸ்ரேலியக் குடியேற்றவாசிகள் பலஸ்தீன கிரமவாசிகளுக்கு எதிராக  நடத்திய தாக்குதலில் ஹம்தி நஸ்ஸான் என்ற 38 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தை முதுகுப் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். சுமார் 30…

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்: அவசரப்படாது ஆறுதலாக திருத்தம் செய்வது சிறந்தது

‘முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் சமூகத்துக்கு நன்மை பயக்கும் திருத்தங்களே மேற்கொள்ளப்பட வேண்டும். அதனால் அவசரப்படாது ஆறுதலாகத் திருத்தங்களைச் செய்வதே சிறந்ததாகும். இச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் பல சிவில் சமூக அமைப்புகள் தொடர்ந்தும் தங்களது ஆலோசனைகளை முன்வைத்து வருகின்றன’ என முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தெரிவித்தார். நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்…

பிலிப்பைன்ஸ் பள்ளிவாசல் ஒன்றில் கொலைவெறி கைக்குண்டுத் தாக்குதல்

தெற்கு பிலிப்பைன்ஸில் அமைந்துள்ள பள்ளிவாசலொன்றில் மேற்கொள்ளப்பட்ட கொலைவெறி கைக்குண்டுத் தாக்குதல் காரணமாக குறைந்தது இருவர் பலியாகியுள்ளதோடு  4 பேர் காயமடைந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிவாசலினுள் கைக்குண்டு வீசப்பட்டுள்ளதன் காரணமாக இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதோடு நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என பிராந்திய இராணுவப் பேச்சாளர் லெப்டினென்ட் கேர்ணல் ஜெர்ரி பெசானா ஏ.எப்.பி. செய்தி முகவரகத்திடம்  தெரிவித்தார். மின்டானோவில் நிலைமகளைச் சீர்செய்து சமாதானத்திற்காக அரசாங்கம் செயற்பட்டு வரும் நிலையில் இவ்வாறான…