மீண்டும் பேசுபொருளாகும் தேசிய அரசாங்க யோசனை
தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்து வருகின்ற நிலையில், இது தொடர்பான யோசனை கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருந்தது. எனினும் பல கட்சிகளின் எதிர்ப்புக் காரணமாக குறித்த தினம் பிரேரணை முன்வைக்கப்படவில்லை. இந் நிலையில் மீண்டும் எதிர்வரும் 20 ஆம் திகதி இதே பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தேசிய அரசாங்கம் அமைக்கும் யோசனையில் பிரதான பேசுபொருளாகியிருப்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸாகும்.…