மின்சார தடையில் அரசாங்கம் நாடகம்
நாட்டில் மழையின்மையால் ஏற்பட்டுள்ள வரட்சியின் காரணமாகவே இவ்வாறு மின்னுற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. அரச நிறுவனமொன்றான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சாரசபை மீது தொடுத்துள்ள வழக்கிற்கமைய , எதிர்வரும் 9 ஆம் திகதி மின்சார சபை நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளமை இது பொய் என்பதை தெளிவுபடுத்துகின்றது என ம.வி.மு.வின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.…