முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்

முஸ்லிம் அமைச்­சர்கள் கூட்­டாகப் பதவி வில­கி­யமை ஏற்றுக் கொள்ள முடி­யாது. அதே­வேளை மீண்டும் அமைச்சுப் பத­வி­களை ஏற்றுக் கொள்­ளு­மாறு வற்­பு­றுத்­தவும் முடி­யாது. ஆனால் பதவி விலகிப் பிரிந்து செல்­வதால் தீர்­வி­னைக்­காண முடி­யாது என்­பதால் முஸ்லிம் உறுப்­பி­னர்கள் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும் என்று அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்­து­பீட மகா­நா­யக்க தேரர்கள் பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்­க­ளிடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்கள் மற்றும் அஸ்­கி­ரிய , மல்­வத்து பீட மகா­நா­யக்க தேரர்கள்…

இராஜினாமாவைத் தவிர வேறு வழி இருக்கவில்லை

அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­வதால் அர­சியல் ரீதி­யாக ஏற்­ப­டப்­போகும் பாதிப்பை பற்றி அர­சாங்­கத்தின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் உங்­க­ளைப்­போ­லவே எம்மை வலி­யு­றுத்­தி­னாலும் இரா­ஜி­னாமா செய்­வதை தவிர வேறு வழி எமக்கு இருக்­க­வில்லை என மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடங்­களின் மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விளக்­க­ம­ளித்­துள்­ளனர். அத்­துடன், மோச­மா­கிக்­கொண்­டி­ருந்த சூழ்­நி­லையில் அதனை பார்த்­துக்­கொண்­டு வெறு­மனே இருக்க முடி­ய­வில்லை. எனவே, எல்­லோரும் ஆலோ­சித்து…

முஸ்லிம் பாடசாலைகள் நேற்று ஆரம்பம் மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர்

இரண்டாம் தவ­ணைக்­காக முஸ்லிம் பாட­சா­லைகள் நேற்று திங்­கட்­கி­ழமை காலை ஆரம்­ப­மா­கின. கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம் பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னர் ஏற்­பட்ட அசா­த­ரண சூழ்நிலை­யி­னாலும் பின்னர் புனித ரமழான் நோன்பு விடு­மு­றைக்­கா­கவும் மூடப்­பட்­டி­ருந்த முஸ்லிம் பாட­சா­லைகள் சுமார் இரண்டு மாதங்­களின் பின்னர் நேற்று மீண்டும் ஆரம்­ப­மா­கின. மட்­டக்­க­ளப்பு மத்தி கல்வி வல­யத்­தி­லுள்ள காத்­தான்­குடி கல்விக் கோட்­டத்தில் நேற்று 70 வீத­மான மாண­வர்கள் சமு­க­ம­ளித்­த­தாக பாட­சாலை…

புலமை பரிசில் பரீட்­சையும் சமூ­கத்தின் நிலைப்­பாடும்

எம்.எம்.எம். ரம்ஸீன் தெற்­கா­சி­யாவில் இலங்­கை­யர்கள்  உயர்ந்த எழுத்­த­றிவு வீதத்தைக் கொண்­டி­ருப்­ப­தற்கு இல­வச கல்வி முறையும் ஒரு கார­ண­மாகும். இத­னால நமது மாண­வர்­க­ளுக்கு முதலாம் தரம் முதல் பல்­க­லைக்­க­ழகம் வரை இல­வ­ச­மாகப் கல்வி பயிலும் வசதி வாயப்­புக்கள் கிடைக்­கின்­றன. நாட்­டிற்குப் பய­னுள்ள  நற்­பி­ர­ஜைகள், பய­னுள்ள மனித வளம் என்­ப­தாக இதன் எதிர்­பார்ப்­புக்கள் அமைந்­துள்­ளன. இம்­ம­னி­த­வளம் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கும் பங்­க­ளிப்புச் செய்­யத்­தக்­க­தாகும்.…