ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு முஸ்லிம் சமூகத்துக்குள் கிளம்பும் எதிர்ப்பை வரவேற்கிறார் சபாநாயகர்
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அண்மையில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து வெளிக்காட்டப்படும் எதிர்ப்பை வரவேற்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியிருக்கிறார்.
இலங்கையில் ஒவ்வொருவரும் முதலில் தங்களை இலங்கையர் என்றே அடையாளப்படுத்தவேண்டும். அவ்வாறு எவராவது சிந்திக்கவில்லை என்றால், அவர்கள் தீர்வின் ஒரு அங்கமல்ல, மாறாக பிரச்சினையின் ஓர் அங்கமே என்று ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் இலங்கையில்…