முஸ்லிம் அரசியல் தலைவர்களே!
இன்று வரை எமது நாட்டில் எதிர்கொண்ட பிரச்சினைகளையும், சவால்களையும் ஆழமாக உற்று நோக்கினால் மூன்று விடயங்கள் தெளிவாகும்.
எமது முஸ்லிம் சமூகம் கன கச்சிதமாக துண்டாடப்பட்டிருக்கிறது.
எமக்கென்று தூரநோக்கு சிந்தனையும், தூய்மையும், ஆளுமையும் கொண்ட ஒரு தேசியத் தலைமையில்லை.
எமக்கும், பிற மதத்தவர்களுக்குமிடையிலான ஆழமான புரிந்துணர்வும், உறவும் போதிய அளவு இல்லை. அதை கட்டியெழுப்புவதற்கான தேசிய பொறிமுறைகள் பரந்த அளவில் உருவாக்கப்படவும் இல்லை.