அமைச்சுப் பதவிகளை மீள் ஏற்பதா? இல்லையா?

‘அர­சாங்­கத்தில் முஸ்லிம் அமைச்­சர்கள் பதவி வகிக்­கா­மையின் பாதகம் இப்­போது உண­ரப்­ப­டு­கி­றது. எதிர்­கா­லத்தில் அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்தும் முஸ்­லிம்கள் ஒதுக்­கப்­படும் நிலை ஏற்­ப­டலாம். இவ்­வா­றான நிலையில் பத­வி­களை இரா­ஜி­னாமா  செய்து கொண்ட முன்னாள் முஸ்லிம் அமைச்­சர்களாகிய நாம் தீர்­மா­ன­மொன்­றினை மேற்­கொள்ள வேண்­டிய நிலை­யி­லுள்ளோம். அதற்­காக இறுதித் தீர்­மானம் ஒன்­றினை எட்­டு­வ­தற்­காக பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்­களும் மற்றும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் நாளை செவ்­வாய்க்­கி­ழமை ஒன்­று­கூடி…

சஹ்ரான் கொல்லப்பட்டதால் உலகில் அதிகம் மகிழ்ச்சியடைந்தது நானே

ஆர். யசி 21 ஆம் திகதி தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தும் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்ட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ்  நேற்று சாட்­சி­ய­ம­ளித்தார். அவ­ரது சாட்­சியம் வரு­மாறு: கேள்வி:- உங்­களின் அர­சியல் பயணம் குறித்து கூறுங்கள்? பதில் :- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மூல­மாக எனது அர­சியல் வாழ்க்கை ஆரம்­பிக்­கப்­பட்­டது. 1994ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மூல­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரி­வானேன். பின்னர் பல வெற்றி தோல்­விகள்…

ரிஷாட், அசாத், ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக மொத்தம் 27 முறைப்­பா­டுகள்

பதவி துறந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் ஆகிய மூவ­ருக்கும் எதி­ராக பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு மொத்­த­மாக  27 முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­ற­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கூறினார். கடந்த நான்காம் திகதி முதல் நேற்று மாலை நான்கு மணி வரை குறித்த மூவ­ருக்கும் எதி­ராக முறைப்­பா­டு­களை பதிவு செய்ய பொலிஸ் தலை­மை­ய­கத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ஒரு­வரின் கீழ் இரு பொலிஸ் அத்­தி­யட்­சகர்கள்…

சிலைகளை உடைக்குமாறு உத்தரவிட்டது சஹ்ரானே

மாவ­னெல்லை நகரை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில்  நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் அடித்து சேத­மாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளா­னது, உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக கரு­தப்­படும் பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாஷிமின் உத்­த­ர­வுக்­க­மை­யவே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக சி.ஐ.டி. நேற்று மாவ­னெல்லை நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தது. இந்த விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று முற்­பகல்  மாவ­னெல்லை நீதிவான் உப்புல் ராஜ­க­ருணா முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்த போதே, குறித்த…