1064 சட்டவிரோத துப்பாக்கிகளுடன் 865 பேர் கடந்த ஆண்டில் மட்டும் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் 1064 சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பில் 865 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு சட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்ற சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே, கடந்தாண்டு பொலிஸார் கைப்பற்றிய சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இவ்வறிவிப்பை விடுத்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு 781 சட்டவிரோத…

சவூதி சிறையிலுள்ள பெண்ணுரிமை செயற்பாட்டாளர்களை பார்வையிட அனுமதிக்குமாறு வேண்டுகோள்

அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள் சவூதியில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பெண்ணுரிமை செயற்பாட்டாளர்களை பார்வையிட்டு, அவர்கள் சித்திரவதை செய்யப்படுகின்றமை, சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகினறமை மற்றும் குடும்பத்தினர் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படாமை போன்ற குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய இராச்சியத்திலுள்ள சவூதி அரேபிய தூதரகத்திற்கு, தடுப்புக்காவல் மீளாய்வுக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்…

ஊடக சுதந்திர சுட்டியில் இலங்கை முன்னேற்றம்

வேர்ல்ட் ப்ரெஸ் ப்ரீடம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, 2017ஆம் ஆண்டில் 141வது இடத்தில் இருந்து இலங்கை 2018ஆம் ஆண்டில் 131வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த சுட்டியின்படி, உலகில் ஊடக சுதந்திரம் கூடுதலாக உள்ள நாடு நோர்வேயாகும். ஊடக சுதந்திரம் மிகவும் குறைவாக உள்ள நாடு எரித்திரியாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் இலங்கை ஆகிய நாடுகள் மிகவும் கீழ் மட்டத்தில் இருக்கும் அதேவேளை, மாலைதீவு, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் இலங்கையையும் விட மேலிடத்தில் உள்ளன. இந்த சுட்டியில் 94…

இந்தோனேசியாவில் கடும் மழை, மண்சரிவு உயிரிழப்புகள் அதிகரிப்பு மீட்புப் பணிகள் துரிதம்

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ள நிலையில் கூரை வரை புதையுண்டுள்ள டசின் கணக்கான வீடுகளை மூடியுள்ள களி மண்ணைத் தோண்டி மேலும் உடல்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டு வருகின்றனர். மோசமான காலநிலை காரணமாக ஒரு நாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீட்புப் பணிகள் கடந்த சுகாபூமி மாவட்டத்தில் அமைந்துள்ள சேர்னாரெஸ்மி கிராமத்தில் புதன்கிழமை மீண்டும் ஆரம்பமானது. கடந்த திங்கட்கிழமை மாலை வேளையில் 30 வீடுகளைத் தாக்கிய மண்சரிவினால் புதையுண்டதாக…