1064 சட்டவிரோத துப்பாக்கிகளுடன் 865 பேர் கடந்த ஆண்டில் மட்டும் கைது
நாடளாவிய ரீதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் 1064 சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பில் 865 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு சட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்ற சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே, கடந்தாண்டு பொலிஸார் கைப்பற்றிய சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இவ்வறிவிப்பை விடுத்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு 781 சட்டவிரோத…