மாகா­ண­சபை தேர்தல் தாம­த­மாக பிர­தான 2 கட்­சி­க­ளுமே காரணம்

மாகா­ண­சபை தேர்தல் தாம­த­மா­வ­தற்குப் பிர­தான இரண்டு கட்­சி­க­ளுமே கார­ண­மாகும். எல்லை நிர்­ணய அறிக்­கையை காரணம் காட்டி பிர­தான கட்­சிகள் இரண்டும் மாகாண சபைகள் தேர்­தலை பிற்­போடும் சூழ்ச்­சி­களில் ஈடு­பட்டு வந்­துள்­ளன என மக்கள் விடு­தலை முன்­னணி தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க சபையில் குற்­றஞ்­சாட்­டினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை மாகாண  சபை எல்லை நிர்­ணய அறிக்கை தொடர்­பான மீளாய்வுக் குழுவின் அறிக்கை தாம­த­மா­கி­யுள்­ளமை தொடர்­பாக எதிர்க்­கட்­சி­யி­னரால் எழுப்­பப்­பட்ட கேள்­வி­களை தொடர்ந்து சபையில்…

வளைகுடா நெருக்கடிக்கு தீர்வுகாண நியமிக்கப்பட்ட அமெரிக்கத் தூதுவர் இராஜினாமா

பிராந்­தியத் தலை­வர்கள் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டு­வ­தற்கு விரும்­ப­வில்லை எனத் தெரி­வித்து கட்­டா­ருக்கும் அதன் வளை­குடா அரபு அயல்­நா­டு­க­ளுக்கும் இடை­யே­யான இரா­ஜ­தந்­திர நெருக்­க­டியைத் தீர்த்து வைப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த அமெ­ரிக்கத் தூதுவர் தனது பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­துள்ளார். பயங்­க­ர­வா­தத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாகத் தெரி­வித்து கட்­டா­ரு­ட­னான இரா­ஜ­தந்­திர மற்றும் போக்­கு­வ­ரத்துத் தொடர்­பு­களை நான்கு அரபு நாடுகள் துண்­டித்த நிகழ்வு இடம்­பெற்று 18 மாதங்கள் கடந்­துள்ள நிலையில் தன்னால்…

மனிதக் கடத்தலை முற்றாக ஒழிப்போம்

தேவைகளுக்காக மனிதர்களைக் கடத்தும் செயல் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மனிதக் கடத்தல்கள் தொடர்பில்  2018 ஆம் ஆண்டிற்கான அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. அதில், ''மனிதக் கடத்தல்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகள் அவர்களது பொருளாதாரத் தேவைகளுக்காக பெண்களையும், குழந்தைகளையும் கடத்துகின்றனர். மேலும் உடல் உறுப்புகளைத் திருடுவதற்காகவும் கடத்தல் சம்பவங்கள்…

அரசியலமைப்பே தெரியாத ஜனாதிபதி இனியும் அதிகாரத்தில் இருக்க வேண்டுமா?

அர­சி­ய­ல­மைப்பே தெரி­யாத ஜனா­தி­பதி இனியும் அந்த அதி­கா­ரத்தில் இருக்க வேண்­டுமா என்­பதை பாரா­ளு­மன்றம் தீர்­மா­னிக்க வேண்டும். இந்த அர­சாங்­கத்­திற்கு முது­கெ­லும்­புள்­ள­தெனில் அர­சி­ய­ல­மைப்­பினை மீறி அர­சியல் சூழ்ச்­சியில் ஈடு­பட்ட அனை­வ­ரையும் தண்­டித்­துக்­காட்­டுங்கள் என மக்கள் விடு­தலை முன்­னணி சபையில் சவால் விடுத்­தது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இர­சா­யன ஆயு­தங்கள் சம­வாய திருத்த சட்­ட­மூலம் மீதான விவா­தத்­தின்­போது உரை­யாற்­றிய ஜே.வி.பியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நலிந்த ஜய­திஸ்ஸ இதனைக்…