மாடறுப்புத்தடை சிங்கள-முஸ்லிம் பிளவை மேலும் ஆழமாக்கும்

இந்திய வெளிவிவகாரத்துறை முன்னாள் சிரேஷ்ட அதிகாரி ஆச்சல் மல்ஹோத்ரா

0 9,110

இலங்­கையில் மாட­றுப்புத் தடை அமுல்­ப­டுத்­தப்­ப­டு­மானால் அது சிங்­கள- முஸ்லிம் பிளவை மேலும் ஆழ­மாக்கும் என இந்­திய வெளி­வி­வ­கா­ரத்­து­றையின் முன்னாள் சிரேஷ்ட அதி­காரி ஆச்சல் மல்­ஹோத்ரா தெரி­வித்­துள்ளார். இலங்­கையில் பிர­த­மரால் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள மாட­றுப்புத் தடைச் சட்டம் தொடர்பில் பிர­பல இந்­திய இணை­யத்­தளம் ஒன்றில் எழு­தி­யுள்ள விரி­வான கட்­டு­ரை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அக் கட்­டு­ரையில் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது, இலங்­கையின் ஆளும் கட்­சி­யான பொது ஜன பெர­முன நாட­ளா­விய ரீதியில் மாட­றுப்­பதை தடை செய்யும் சட்­டத்தை கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. இதற்கு அக் கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுவும் ஒப்­புதல் அளித்­துள்­ளது. இதனை பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மாக நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கான முயற்­சி­களை அக்­கட்சி முன்­னெ­டுத்து வரு­கி­றது. எனினும் மாட்­டி­றைச்சி உண்­ப­வர்­க­ளுக்­காக, அதனை இறக்­கு­மதி செய்ய அனு­ம­திக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இலங்­கையில் அதி­க­மானோர் இறைச்சி உண்­ப­வர்­க­ளாவர். எனினும் மதம் மற்றும் கலா­சார கார­ணங்­களால் பௌத்­தர்­களும் பசு­வினை வணங்கும் இந்­துக்­களும் மாட்­டி­றைச்­சிக்கும் மாட­றுப்­புக்கும் எதிர்ப்புத் தெரி­விக்­கின்­றனர். எனினும் முஸ்­லிம்­க­ளி­னதும் கிறிஸ்­த­வர்­க­ளினும் (குறிப்­பாக ஐரோப்­பிய வம்­சா­வ­ளி­யினர்) உணவுப் பழக்­கத்தில் மாட்­டி­றைச்சி பிர­தான இடம்­வ­கிக்­கி­றது.

இலங்­கையில் வரு­ட­மொன்­றுக்கு ஒரு­வ­ருக்கு தலா 7.9 கிலோ கோழி இறைச்­சியும் 1.8 கிலோ மாட்­டி­றைச்­சியும் 0.32 கிலோ பன்­றி­யி­றைச்­சியும் 0.1 கிலோ ஆட்­டி­றைச்­சியும் சந்­தையில் கிடைக்கப் பெறு­வ­தாக இலங்கை விலங்கு உற்­பத்தி மற்றும் சுகா­தார திணைக்­க­ளத்தின் 2013 ஆம் ஆண்­டைய அறிக்கை குறிப்­பி­டு­கி­றது.

செல்­வாக்­கு­மிக்க பௌத்த தேரர்­களும் குறிப்­பாக பௌத்த மத தலை­வர்­களும் இலங்­கையில் மாட­றுப்பைத் தடை செய்­யு­மாறு பத­விக்கு வரு­கின்ற அர­சாங்­கங்­க­ளிடம் விடுத்து வந்த கோரிக்­கைகள் இது­வரை வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

மாட­றுப்புத் தடைக்­கான புதிய யோச­னையின் பின்­னா­லுள்ள காரணம்

அதி­கா­ரத்­துக்கு வந்து ஒரு மாத காலத்­தினுள் இவ்­வ­றி­வித்­தலை விடுத்­த­மைக்­கான இரு சாத்­தி­ய­மான கார­ணங்­களைக் குறிப்­பிட முடியும். முத­லா­வது, பொது ஜன பெர­மு­னவின் வெற்­றிக்கு பாரிய பங்­க­ளிப்பைச் செய்த பெரும்­பான்மை பௌத்த மக்­க­ளுக்கு ‘நன்றி’ சொல்­கின்ற ஒரு வழி­மு­றை­யாக இதனை கருத முடியும். அடுத்­தது, வாக்­க­ளித்த மக்­களின் (மாட­றுப்புத் தடைக்­கான) கோரிக்­கை­க­ளுக்கு இந்த அர­சாங்கம் முன்­னு­ரிமை வழங்­கு­கின்­றது என்ற செய்­தியை இத­னூ­டாகச் சொல்ல விளை­வ­தா­க­வு­மி­ருக்­கலாம்.

இதை­விட மிக முக்­கி­ய­மாக, முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­தி­னூ­டாக நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்கு மீளவும் அதி­கா­ரங்­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக சிங்­கள பௌத்த மக்­களின் ஆத­ரவைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான ஒரு முயற்­சி­யா­கவும் இதனைக் கருத முடியும்.

இதற்கு மேல­தி­க­மாக, வடக்கில் வாழும் தமிழ் இந்­துக்­களின் மனதில் இடம்­பி­டிப்­ப­தற்­கான ஒரு நகர்­வா­கவும் இதனைப் பார்க்­கலாம்.

அடுத்­தது என்ன?

மாட­றுப்புத் தடை அமுல்­ப­டுத்­தப்­பட்டால் தேசி­ய­வாத சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டை­யி­லான பிளவு மேலும் ஆழ­மாக்­கப்­படும். இலங்கை நீண்ட கால இன முரண்­பாட்டு வர­லாற்றைக் கொண்­டுள்­ளது.

சர்­வ­தேச  சமூகம் இலங்கை அர­சாங்­கத்­திற்கும் விடு­தலைப் புலி­க­ளுக்­கு­மி­டை­யி­லான போர் குறித்தே அதிகம் கவனம் செலுத்­திய போதிலும், இலங்­கையில் பௌத்­தர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டை­யி­லான மோதல் சம்­ப­வங்கள் பல பதி­வா­கி­யுள்­ளன.

இலங்­கை­யிலும் குறிப்­பிட்­ட­ளவு ‘இஸ்­லா­மோ­போ­பியா’ நில­வு­கி­றது. இஸ்­லா­மிய மத சடங்­குகள், ஹலால் இறைச்சி மற்றும் புர்கா போன்ற கலா­சார நடை­மு­றைகள் குறித்து பௌத்­தர்கள் விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். முஸ்­லிம்­களின் ஹலால் முறை­மை­யா­னது வேத­னை­மிக்­கது என்றும் கருணை தொடர்­பான தமது நெறி­மு­றை­க­ளுக்கு முர­ணா­னது என்றும் பௌத்­தர்கள் கரு­து­கின்­றனர்.

பொரு­ளா­தா­ரத்­திற்கு பாதிப்­பின்றி இத்­த­டையை அமுல்­ப­டுத்த முடி­யாது. மாட்­டி­றைச்­சியை இறக்­கு­மதி செய்­வ­தா­னது அந்­நியச் செலா­வணி இருப்பை மேலும் பாதிக்கும். மாட்­டி­றைச்­சியின் விலை அதி­க­ரிப்­ப­துடன் அது நுகர்­வோ­ருக்கு பெரும் சுமை­யாக மாறும்.

மாட­றுப்புத் தடையை ஆத­ரிப்போர், பால்­பண்ணைத் தொழில் மூலம் புதிய வேலை­வாய்ப்­புகள் உரு­வாகும் என வாதிட்­டாலும் இத் தடை மூலம் பலர் தொழில்களை இழக்க வேண்டிவரும்.

அதேபோன்று பால் தராத, பொருளாதார ரீதியாக பயன் தராத பசுக்களை கையாள்வதற்கான போதிய உட்கட்டமைப்பு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த பசுக்களை ஏற்றுமதி செய்வதை அல்லது கொல்வதை பௌத்தர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

இந்த விடயத்தில் அரசாங்கம் சமூக – பொருளாதார தாக்கங்களை கருத்திற் கொண்டு முன்னகருமா? இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள மாடறுப்புத் தடை பற்றிய முன்மொழிவை எவ்வாறு சட்டமாக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.