வஸீம் தாஜுதீன் விவகாரம்: சந்தேக நபர்களில் ஒருவர் மரணம் ; ஒருவர் சுகயீனம்

0 673

பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை வழக்கில் சந்தேக நபர்களாக பெயர்குறிக்கப்பட்டிருந்த இருவரில் ஒருவர் மரணித்துவிட்டதாகவும் மற்றொருவர் கடும் சுகவீனமுற்றுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் நேற்றைய தினம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

இவ் வழக்கில் சாட்சியங்களை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர உயிரிழந்துவிட்டதாகவும் மற்றொரு சந்தேக நபரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க கடும் சுகவீனமுற்றுள்ளதாகவும் இதன்போது மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.