இந்தோனேசியாவில் பழைமைவாத முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

0 758

நகரின் கிறிஸ்­தவ ஆளு­நரை பதவி நீக்கம் செய்­யு­மாறு கோரி கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கடும்­போக்­கு­வாத குழுக்­களின் தலை­மையில் ஆயி­ரக்­க­ணக்­கான இந்­தே­னோ­சிய முஸ்­லிம்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். 2019 ஆம் ஆண்டு இடம்­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­த­லுக்கு முன்­ன­தாக இஸ்­லா­மியக் குழுக்­களின் செல்­வாக்கு அதி­க­ரித்து வரு­வதை இந்த நிகழ்வு உணர்த்­து­கின்­றது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­தலில் கடு­மை­யான போட்­டியின் பின்னர் மயி­ரி­ழையில் தோல்­வியைத் தழு­வி­யதைத் தொடர்ந்து அடுத்த வருடத் தேர்­தலில் ஜனா­தி­பதி ஜோகோ விடோ­டேவை பதவி கவிழ்க்க வேண்டும் என கங்­கணம் கட்டிச் செயற்­பட்டு வரு­கின்ற இஸ்­லா­மி­ய­வா­தி­க­ளுடன் நெருங்­கிய தொடர்­பினைக் கொண்­டுள்ள தேசி­ய­வா­தி­யான முன்னாள் ஜெனரல் பிரா­பாவோ சுபை­யான்­டோவின் பங்­கு­பற்­று­த­லுடன் இந்த ஆர்ப்­பாட்டம் இடம்­பெற்­றது.

பெரும்­பா­லா­ன­வர்கள் வெள்ளை நிற ஆடை­யு­டனும், இஸ்­லா­மியக் கொடி­யு­டனும் காணப்­பட்ட இவ்­வார்ப்­பாட்டம் அதி­காலை சுமார் மூன்று மணிக்கு அதி­காலைத் தொழு­கை­யினை நிறை­வேற்றும் வித­மாக ஜகார்த்­தாவின் தேசிய நினை­வி­டத்தில் ஆரம்­ப­மா­னது.

இஸ்லாம் அனை­வ­ரையும் இணைப்­ப­தோடு ஒற்­று­மைப்­ப­டுத்­தவும் செய்­கின்­றது. அத்­துடன் அனைவர் மத்­தி­யிலும் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்துகின்­றது என்­பதை கூறிக் கொள்­வதில் மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம் என சுபை­யான்டோ தனது உரையில் தெரி­வித்தார்.

ஒழுங்­க­மைப்­பா­ளர்கள் இதனை மீளி­ணைப்பு என தெரி­விக்­கின்­றனர். அல்-­குர்­ஆனைக் கொச்­சைப்­ப­டுத்­திய சீன கிறிஸ்­த­வ­ரான ஜகார்த்தா ஆளுநர் பசுக்கி திஜாஹஜ்ஜா பூர்னாமாவை இலக்கு வைத்து 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியென இதனை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
-vidivelli

Leave A Reply

Your email address will not be published.