பள்ளிவாசல் சுவரில் உருவ ஓவியங்கள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

0 604

இலங்­கையில் புதிய அர­சாங்­க­ம் பத­விக்கு வந்து ஒரு மாத­காலம் கடந்­துள்ள நிலையில் பல்­வேறு மாற்­றங்கள் நிகழ்ந்து வரு­கின்­றன. இவற்றில் நாடெங்கும் வெற்­றுச்­சு­வர்கள் மற்றும் மதில்­களில் சுவ­ரோ­வி­யங்கள் தீட்­டப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

தேர்தல் பிர­சார சுவ­ரொட்­டிகள், டியூசன் வகுப்­பு­க­ளுக்­கான சுவ­ரொட்­டிகள் நிறைந்து கவ­னிப்­பாற்றுக் கிடந்த பொதுச்­சு­வர்கள், மதில்கள் மற்றும் மதத் தலங்­க­ளுக்குச் சொந்­த­மான சுவர்கள் இன்று புதுப்­பொ­லிவு பெற்­றுள்­ளன. சுவர்­க­ளிலும் மதில்­க­ளிலும் ஓவி­யங்கள் வரை­யப்­பட்­டுள்­ளன. இந்த மாற்­றங்கள் மக்கள் மத்­தியில் வர­வேற்­பினைப் பெற்­றுள்ள அதே நேரம் எதிர்ப்­பி­னையும் பெற்­றுக்­கொண்­டுள்­ளன.

”புதிய மாற்­றங்கள் கண்­களைக் கவர்­கின்­றன. சுவர் ஓவி­யங்­களை நான் பயணம் மேற்­கொண்ட ஏனைய நாடு­க­ளிலும் கண்­டு­க­ளித்­தி­ருக்­கிறேன். இந்த அனு­பவம் எனக்கு மிகவும் மகிழ்ச்­சி­யா­ன­தாகும். நாங்கள் இலங்­கையின் வர­லாற்­றையும் கலா­சா­ரத்­தையும் காண­வேண்டும். நான் இலங்­கையில் மேலும் பல ஓவி­யங்­களை எதிர்­கா­லத்தில் காணு­வ­தற்கு விரும்­பு­கிறேன்” என கிரீஸ் நாட்­டி­லி­ருந்து இலங்­கைக்கு வந்­தி­ருந்த உல்­லாசப் பயணி இல்யாஸ் தெரி­வித்திருக்கிறார்.

நாடெங்­கு­முள்ள வெற்­றுச்­சு­வர்­க­ளிலும் மதில்­க­ளிலும் அவ்வப் பிர­தேச அமைப்­பு­க­ளி­னாலும் மக்­க­ளி­னாலும் இந்த சுவர் ஓவி­யங்கள் தீட்­டப்­பட்டு வரு­கின்­றன. பல்­வேறு சுவ­ரொட்­டி­களைத் தாங்கி அவ­லட்­ச­ண­மாகக் காட்சி தரும் சுவர்கள் மெரு­கூட்டப் பட்டு சித்­தி­ரங்கள் தீட்­டப்­ப­டு­வது வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

என்­றாலும் மதத் தலங்கள் குறிப்­பாக பள்­ளி­வா­சல்­களின் மதில்­களில் உரு­வப்­ப­டங்கள் தீட்­டப்­ப­டு­வதே இன்று சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. முஸ்­லிம்கள் பள்­ளி­வாசல் சுவர்­க­ளிலும் மதில்­க­ளிலும் சித்­தி­ரங்கள் வரை­யப்­ப­டு­வதை ஒரு­போதும் எதிர்க்கவில்லை. நாடும் நாட்­டி­லுள்ள வெற்­றுச்­சு­வர்­களும் புதுப்­பொ­லிவு பெறு­வதில் பங்­கு­தா­ரர்­க­ளாக இருப்­ப­தற்கே அவர்கள் விரும்­பு­கி­றார்கள்.

ரதா­வ­டுன்ன பள்­ளி­வாசல் மதிலில் வரை­யப்­பட்ட சித்­தி­ரங்கள்

கொழும்பு– கண்டி வீதி­யோ­ரத்தில் வேவல்­தெ­னிய, ரதா­வ­டுன்­னயில் அமைந்­துள்ள பள்­ளி­வா­ச­லுடன் இணைந்­துள்ள மதிலில் சில தினங்­க­ளுக்கு முன்பு சித்­தி­ரங்கள் வரை­யப்­பட்­டன. சித்­தி­ரங்கள் வரை­வ­தற்கு வருகை தந்த பிர­தே­சத்தைச் சேர்ந்த பெரும்­பான்மை இனத்­த­வர்கள் ரதா­வ­டுன்ன சபீலுல் ஹுதா பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­திடம் அனு­மதி பெற்­றுக்­கொண்ட பின்பே சித்­தி­ரங்­களை வரைந்­தனர். பள்­ளி­வாசல் சுவரில் உரு­வப்­ப­டங்கள் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு சம­யத்தில் அனு­ம­தி­யில்லை. அதனால் உரு­வப்­ப­டங்கள் வரை­ய­வேண்டாம் எனக் கூறியே பள்­ளி­வாசல் நிர்­வாகம் அனு­மதி வழங்­கி­யது என்­றாலும் உரு­வப்­ப­டங்­களு­ட­னான சித்­தி­ரங்­களும் தீட்­டப்­பட்­டுள்­ளன.

இச் சம்­பவம் சிவில் சமூக அமைப்­புக்­களால் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ, பிர­த­மரும் கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பிரதி பொலிஸ் மா அதி­பரின் கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ வின் ஆலோ­சகர் நகீப் மெள­லானா இவ்­வி­வ­காரம் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பிர­த­மரின் கீழ் இயங்கும் கலா­சார அமைச்சின் செய­லாளர் ஆகி­யோரின் கவ­னத்­திற்குக் கொண்­டு­வந்தார்.
இத­னை­ய­டுத்து சுவர் ஓவி­யங்கள் வரை­யப்­ப­டும்­போது மதத் தலங்­களின் நிர்­வாக சபையின் அனு­ம­தி­பெற்று அவர்­களின் ஆலோ­ச­னைக்­க­மை­யவே செயற்­பட வேண்டும் என கலா­சார அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது. இதற்­கான அறி­வு­றுத்­தல்கள் விரைவில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக நகீப் மெள­லானா தெரி­வித்தார்.

ரதா­வ­டுன்ன சபீலுல் ஹுதா பள்­ளி­வாசல் தலைவர் இவ்­வி­வ­காரம் தொடர்பில்,
ரதா­வ­டுன்ன சபீலுல் ஹுதா பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபைத்­த­லைவர் எம்.வை.எம். ராஸீக் விளக்­க­ம­ளிக்­கையில்;

‘பள்­ளி­வாசல் சுவரில் சித்­தி­ரங்கள் வரை­வ­தற்கு நிர்­வா­க­சபை அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது‘ என்றார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்;

வரை­யப்­பட்­டுள்ள சித்­தி­ரங்­களில் ஒன்று இன ஒற்­று­மையை வலி­யு­றுத்­தியும் வரை­யப்­பட்­டுள்­ளது. உரு­வப்­ப­டங்கள் வரை­யப்­பட்­டுள்­ள­மையை நாம் பெரி­து­ப­டுத்­திக்­கொள்ள விரும்­ப­வில்லை. இப் பிரச்­சி­னை­யினால் ஒற்­று­மை­யாக இருக்கும் பெரும்­பான்மை மக்­க­ளுக்கும் எமக்­கு­மி­டையில் முரண்­பா­டு­கள் உரு­வா­கு­வதை நாம் விரும்­ப­வில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து எமது பள்­ளி­வாசல் கண்­ணா­டி­களும் உடைக்­கப்பட்­டன. ஆனால் எம்­மோடு ஒற்­று­மை­யாக வாழும் பெரும்­பான்மை மக்­களே அதைத் திருத்தித் தந்­தார்கள். எமக்குத் தேவை­யான பல உத­விகள் அம்­மக்­களால் கிடைத்­துள்­ளன.

எமது மதிற் சுவரில் உரு­வப்­ப­டங்கள் வரைந்­துள்­ள­மைக்கு எதிர்ப்பு வெளி­யிடும் எம்­ம­வர்கள் எமது பள்­ளி­வா­சலின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கு முன் வரு­வ­தில்லை. வுளூ செய்­வ­தற்கு எமக்கு ஹவுழ் இல்லை. இப்­ப­கு­தியில் நாம் சிறு தொகை­யி­னரே வாழ்­கிறோம் என்றார். பள்­ளி­வாசல் சுவர்­களில், மதில்­களில் சுவர் ஓவி­யங்கள் வரை­வதை நாம் எதிர்க்க வில்லை. உரு­வப்­ப­டங்கள் அல்­லாது பொது­வான மக்­க­ளுக்கு விழிப்­புணர் வினை ஊட்­டக்­கூ­டிய ஓவி­யங்­களே வரை­யப்­பட வேண்டும் என்­பதில் நாம் உறு­தி­யாக இருக்­கிறோம் என்றார்.

அகில இலங்கை  ஜம்­இய்­யத்துல் உலமா சபை

வெற்­றுச்­சு­வர்­களில் ஓவியம் வரை­வது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை முஸ்­லிம்­க­ளுக்கு அறி­வு­ரைகள் வழங்­கி­யுள்­ளது. வெற்­றுச்­சு­வர்­களை அலங்­க­ரித்து ஓவி­யங்கள் வரை­யும்­போது முஸ்­லிம்கள் இஸ்­லா­மிய வரை­ய­றை­களைப் பேணி நடந்­து­கொள்­ளு­மாறு உல­மா­சபை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. சுவர் ஒவி­யங்கள் வரை­யும்­போது உரிய அதி­கா­ரி­க­ளுடன் தொடர்பு கொள்­ளு­மாறும் கோரி­யுள்­ளது. ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கிளை­களும் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களும் ஊர்த்­த­லை­வர்­களும் இவ்­வி­வ­கா­ரத்தில் கரி­சனை கொள்ள வேண்­டு­மெ­னவும் தெரி­வித்­துள்­ளது.

மேலும் நாட்டின் ஜனா­தி­பதி உட்­பட பல­ரது பாராட்­டு­க­ளுக்கு மத்­தியில் நாட்டில் ஆங்­காங்கே காணப்­படும் வெற்­றுச்­சு­வர்­களை அலங்­க­ரிக்கும் பணி­களை அரச மற்றும் தனியார் நிறு­வ­னங்கள், சிவில் அமைப்­புகள் உட்­பட தனி­ந­பர்­களும் ஒன்­றி­ணைந்து திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் சித்­தி­ரங்­களை வரைந்து மெரு­கூட்டி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இவ்­வா­றான செயற்­றிட்­டங்­களை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வர­வேற்­கி­றது. இச் சித்­திர வேலைப்­பா­டுகள் நாட்டின் அபி­வி­ருத்தி, நன்­ந­டத்­தைக்­கான வழி­காட்­டல்கள் போன்ற விட­யங்­களை உள்­ள­டக்கும் வகையில் அமை­வதே இன்­றைய தேவை­யாகும்.

நம் நாட்டு ஓவி­யர்­களின் கலைத்­தி­றன்­களை வெளிப்­ப­டுத்­து­வதில் சகல இன மக்­களும் ஒத்­து­ழைப்­பதன் மூலம் நம்­நாட்டில் ஒரு சுபீட்­ச­மான எதிர்­கா­லத்தைக் கண்­டு­கொள்ள முடியும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும் என்று அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை தெரி­வித்­துள்­ளது.

தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி

நக­ரத்தை அழ­கு­ப­டுத்­து­வ­தென்ற போர்­வையில் பள்­ளி­வாசல் மதில்­களில் உருவப் படங்­களை வரை­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இஸ்­லா­மிய கலா­சா­ரத்­துக்கு இது விரோ­த­மா­ன­தாகும். அதனால் ஜனா­தி­பதி இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்­டு­மென தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி தெரி­வித்­துள்ளார்.

பள்­ளி­வாசல் மதில்­களில் சித்­தி­ரங்கள் வரை­வதை அசாத் சாலி எதிர்க்­க­வில்லை. நகர்ப்­புற மதில்கள் சுவ­ரொட்­டிகள் நிறைந்து அவ­லட்­ச­ண­மாகக் காணப்­ப­டு­கின்­றன. நக­ரங்­களை அழ­கு­ப­டுத்தும் நோக்கில் வீதி­யோ­ரங்­களின் மதில்கள் மற்றும் மேம்­பா­டல்­களின் சுவர்­களில் இளை­ஞர்கள் சித்­தி­ரங்­களை வரைந்து வரு­கின்­றனர். இது­வ­ர­வேற்­கத்­தக்­கது.

ஆனால், சித்­திரம் வரை­வ­தென்ற பெயரில் பள்­ளி­வா­சல்­களின் மதில்­களில் உரு­வப்­ப­டங்­களை வரை­வதை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. இஸ்­லா­மிய கலா­சா­ரத்தின் பிர­காரம் உரு­வப்­ப­டங்கள் வரை­வ­தில்லை. முஸ்­லிம்கள் வீடு­க­ளிலும் உருவப் படங்­களை வைத்­துக்­கொள்­வ­தில்லை. இது மார்க்­கத்தின் வழி­மு­றை­யாகும். இதற்கு நாங்கள் மதிப்­ப­ளிக்க வேண்டும்.

ஆனால், சில தினங்­க­ளுக்கு முன்னர் ரதா­வ­டுன்ன பள்­ளி­வாசல் மதிலில் இவ்­வாறு உரு­வப்­ப­டங்கள் வரை­யப்­பட்­டுள்­ளன. அந்தப் பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் குறைந்த எண்­ணிக்­கை­யி­லேயே வாழ்­கின்­றனர். அதனால் இதற்கு அவர்­களால் பகி­ரங்­க­மாக எதிர்ப்புத் தெரி­விக்க முடி­யாமற் போயுள்­ளது. அவர்கள் அச்­சத்­திலே இருந்­துள்­ளனர். இவ்­வாறு பள்­ளி­வாசல் மதில்­களில் உரு­வப்­ப­டங்கள் வரைய முடி­யாது என்­பதைச் சுட்­டிக்­காட்டி ஜனா­தி­ப­திக்கு கடிதம் அனுப்பி வைத்­துள்ளோம். இவ்­வா­றான சம்­ப­வங்கள் தொடர்பில் ஜனா­தி­பதி கவனம் செலுத்­த­வேண்­டு­மெனக் கோரி­யிருக்கிறேன். ஜனா­தி­பதி சிறு­பான்மை மக்கள் மீதான இன­வாத பிர­சா­ரங்­க­ளுக்கும் இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கும் தடை­வி­திக்க வேண்டும் என அவர் தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி இவ்­வி­வ­கா­ரத்தில் தலை­யிட்டு உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்­பதே சமூ­கத்­தி­னதும் கோரிக்­கை­யாகும்.

உலமா சபையின் தெளி­வான அறி­வு­றுத்­தல்கள் தேவை

வெற்றுச் சுவர்­களில் ஓவியம் வரையும் போது இஸ்­லா­மிய வரை­ய­றைகள் பேணப்­பட வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா கோரி­யி­ருப்­பது வர­வேற்கத்தக்­கது. ஆனால் வெற்றுப் பள்­ளி­வாசல் மதில்­க­ளிலும் முஸ்­லிம்கள் பெரும்­பான்மையாக வாழும் ஊர்­க­ளிலும் நகர்ப்­பு­றங்­க­ளிலும் முஸ்­லிம்­களே ஒன்­றி­ணைந்து ஓவிங்­களை வரை­வ­தற்­கான அறி­வு­றுத்­தல்­களை அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை வழங்­க­வேண்டும்.

ஏனைய சமூ­கத்­தினர் எமது பள்­ளி­வாசல் மதில்­க­ளிலும் ஊர்­களின் வெற்றுச் சுவர்­க­ளிலும் ஓவி­யங்­களை வரை­வ­தற்கு முன்­வ­ரு­வ­தற்கு முன்பு நாங்கள் முந்திக் கொள்ள வேண்டும். அவ்­வாறு முந்­திக்­கொண்டால் எமது கலா­சாரம் மற்றும் நல்­லி­ணக்­கத்தைப் பலப்­ப­டுத்தும் வகை­யி­லான ஓவி­யங்­களை எம்மால் வரைந்து கொள்­ள­மு­டியும். ரதா­வ­டுன்ன பகுதி முஸ்­லிம்கள் பள்­ளி­வாசல் மதிலை சுத்­தம்­செய்து ஓவியம் வரைந்­து­கொள்­வ­தற்கு தாம­தித்­த­த­னா­லேயே மாற்று இனத்­த­வரால் அங்கு உரு­வப்­ப­டங்கள் வரை­யப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த நிலை­மையை இலங்­கை­யெங்கும் உள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை தெளிவுபடுத்த வேண்டும். இது விட­யத்தில் நாம் தாம­திக்­கக்­கூ­டாது. எமது ஊர், எமது பள்­ளி­வாசல் மதில்கள் எம்­க­ரங்­க­ளி­னா­லேயே தீட்­டப்­ப­ட­வேண்டும்.

இந்­த­வ­கையில் யாழ்ப்­பாண தமிழ் சகோ­த­ரர்கள் திட்­ட­மிட்டு செயற்­பட்­டு­வ­ரு­வது பாராட்­டத்­தக்­க­தாகும். யாழ்ப்­பா­ணத்தின் பொது­ம­தில்கள், பொதுச்­சு­வர்கள் அம்­மக்­க­ளாலே அழ­கு­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. அவர்­க­ளது வர­லாறு, கலை, கலா­சார பண்­பா­டு­களைப் பிர­தி­ப­லிக்கும் வகை­யி­லான சித்­தி­ரங்கள் அங்கு வரை­யப்­பட்­டுள்­ளன.

அர­சாங்கம் முன­னெ­டுக்கும் சிறந்த திட்­டங்­க­ளுக்கு நாம் ஒத்­து­ழைக்­க­வேண்டும். திட்­டங்­களை விமர்­சித்­துக்­கொண்­டி­ருந்தால் நாமே தோல்­வி­களை எதிர்­நோக்க வேண்­டி­யேற்­படும்.

சுவ­ரோ­வி­யங்கள் மக்­க­ளுடன்  உரை­யா­டு­கின்­றன

சுவ­ரோ­வி­யங்கள் எமது நாட்­டுக்குப் புதி­யவை அல்ல. வர­லாற்றுப் புகழ்­மிக்க சீகி­ரிய சுவ­ரோ­வி­யங்கள் பல நூற்­றாண்டு காலத்­துக்­கு­ரி­யவை என்­றாலும் இன்னும் அவை எம்­முடன் உரை­யா­டு­கின்­றன. எமக்கு எமது நாட்டின் வர­லாற்­றினைச் சொல்­கின்­றன. இதனை எவ­ரா­லும மறுக்­க­மு­டி­யாது. எமது நாட்டில் மாத்­தி­ர­மல்ல லண்டன், பாரிஸ், ரோம் உட்­பட பல நாடு­களில் சுவ­ரோ­வி­யங்கள் மக்­களை ஈர்க்­கின்­றன.

எமது நாட்டின் சீகி­ரிய ஓவி­யங்­களைப் பார்­வை­யி­டு­வ­தற்­காக உலக நாடு­க­ளி­லி­ருந்து பெரும் எண்­ணிக்­கை­யி­லான சுற்­றுலாப் பய­ணிகள் வந்து செல்­கி­றார்கள்.

ஆர்ட் வே களரி (Artway Gallery) நிர்­வாகப் பணிப்­பாளர்

ஆர்ட்வே கள­ரியின் நிர்­வாகப் பணிப்­பாளர் சுதத் அபே­சே­கர ஓவி­யங்கள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்;

இலங்­கையின் தேசிய கலை காட்சிக் கூடம் கடந்த 5 வருட கால­மாக மூடப் பட்­டுள்­ளது. நவீன சித்­தி­ரங்­களைப் பார்­வை­யி­டு­வ­தற்கு மக்­க­ளுக்கு சந்­தர்ப்பம் இல்லை. இலங்­கையின் ஓவி­யங்­களின் வர­லாற்­றினை மக்கள் அறி­யா­த­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். இன்று எமது நாட்­டுக்கு அதி­க­ள­வி­லான சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தரு­கி­றார்கள். ஓவி­யங்­களும் சுற்­றுலாத் துறையும் பின்னிப் பிணைந்­துள்­ள­தா­கவே நான் கரு­து­கிறேன். நாங்கள் ஹோட்டல் ஒன்­றுக்குச் சென்றால் ஹோட்டல் சுவர்­களில் சில ஓவி­யங்கள் தொங்­க­வி­டப்­பட்­டி­ருப்­பதை நாம் காணு­கிறோம். ஹோட்டல் அறை­க­ளி­னுள்ளும் ஓவி­யங்கள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. எமது நாட்டில் ஓவி­யங்கள் வரை­யப்­ப­டு­வதில் எந்தப் பிரச்­சி­னை­யு­மில்லை. ஆனால் ஓவி­யங்கள் வரை­யப்­ப­டு­வ­தற்­கென்று சில விதி­மு­றைகள் இருக்­க­வேண்டும். சிலர் மின் கம்­பங்­களில் ஓவியம் வரைந்தால் அது நல்­ல­தல்ல. பாது­காப்பு எப்­போதும் முதன்­நிலை பெற­வேண்டும்.

தற்­போது ஓவி­யங்கள் வரை­யப்­ப­டு­வது அவ­தானம் மிக்­க­தாகும். மக்கள் சில­வேளை விரும்­பாமல் இருக்­கலாம். என்­றாலும் இந்தத் திட்டம் தொடர்ந்தால் எதிர்­கா­லத்தில் அனை­வரும் இதனை ஏற்­றுக்­கொள்­வார்கள் என்றார்.

நகர திட்­ட­மிடல் நிறு­வ­னத்தின் தலைவர்

எந்­த­வொரு செயற்­பாடும் ஓர் எல்­லையை மீறி செய்­யப்­பட்டால் அதற்கு மதிப்பு இல்­லாமற் போகும். தற்­போது நாட்டின் எல்லாப் பகு­தி­க­ளிலும் ஓவி­யங்கள் வரை­யப்­பட்டு வரு­கின்­றன. அது மக்­க­ளுக்கு சலிப்பை ஏற்­பத்­தி­விடும் என நகர திட்­ட­மிடல் நிறு­வ­னத்தின் தலைவர் ஜகத் முன­சிங்க தெரி­வித்­துள்ளார்.
‘மதில்கள், சுவர்கள் அழ­கு­ப­டுத்­தப்­பட்டு ஓவி­யங்கள் வரை­யப்­ப­டு­வதன் மூலம் சுற்­றாடல் ரம்­மி­ய­மா­ன­தாகி விடு­கி­றது என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். சூழ­லி­ய­லா­ளர்கள் இதனை வர­வேற்­பார்கள் என்­றாலும் சில விட­யங்­களை நாம் கவ­னத்­திற்­கொள்ள வேண்டும்.

எந்­த­வொரு செய­ல­லையும் நாம் வரை­ய­றை­யின்றி செய்தால் அதற்கு மதிப்பு இருப்­ப­தில்லை.

நாடெங்கும் ஓவியம் வரை­யப்­ப­டு­கி­றது. இது மக்­க­ளுக்கு சலிப்பை ஏற்­ப­டுத்­தி­விடும். அதனால் சில குறிப்­பிட்ட பகு­தி­க­ளில மாத்­தி­ரமே ஓவி­யங்கள் வரை­யப்­பட வேண்டும். அத்­தோடு இந்த வரை­யப்­பட்ட ஓவி­யங்­களை எந்த நிறு­வனம் பரா­ம­ரிக்கும்? எவ்­வாறு பரா­ம­ரிப்புச் செய்யும்? என்ற கேள்­வி­களும் எழு­கின்­றன.

அத்­தோடு எவ்­வ­கை­யான ஓவி­யங்கள் வரை­யப்­ப­ட­வேண்டும் என்ற வரை­ய­றையும் தேவை. சில வேளை­களில் வரை­யப்­படும் ஓவி­யங்­களால் சார­திகள் ஈர்க்­கப்­பட்டு விபத்­துகள் போன்­றன ஏற்­ப­டலாம். எனவே ஓவி­யங்கள் குறிப்­பிட்ட தரத்தில் அமைய வேண்டும் என முன­சிங்க தெரி­வித்­துள்ளார். சுவர், மதில் ஓவி­யங்கள் தொடர்பில் பொது மக்கள் சிலர் இவ்­வாறு
கருத்து வெளி­யிட்­டுள்­ளார்கள்.

சிசிர அழகக்கோன் வர்த்­தகர்– தம்­புள்ளை

மதில்கள், சுவர்கள் அழ­கு­ப­டுத்­தப்­பட்டு ஓவி­யங்கள் வரை­யப்­ப­டு­வது மிகவும் சிறந்த திட்­ட­மாகும். தம்­புள்­ளையைச் சேர்ந்த இளை­ஞர்கள் மதில்­களில் ஓவி­யங்கள் வரைந்­துள்­ளார்கள். வர­லாற்றுச் சம்­ப­வங்கள் மற்றும் கலா­சார நிகழ்­வுகள் வரை­யப்­பட்­டுள்­ளன. இந்த ஏற்பாட்டினை அனைவரும் பாராட்டுகிறார்கள். ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். எங்கள் நகரம் அழகாக மாறியுள்ளது. இதில் அரசியல் பின்னணியில்லை. அனைத்து கட்சிகளைச் சேர்ந்தோரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறார்கள் என தம்புள்ளையை சேர்ந்த வர்த்தகர் சிசிர அழகக்கோன் தெரிவித்தார்.

எஸ். விதூர்சன் மட்டக்களப்பு

மட்டக்களப்பைச் சேர்ந்த எஸ். விதூசன் தெரிவிக்கையில்;நான் எந்த ஒரு சித்திரத்தையும் பிரதி பண்ணி வரையவில்லை. எனது சொந்த சித்திரங்களே வரையப்பட்டன. இந்தப் பணியில் ஈடுபட எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தமை தொடர்பில் மகிழ்கிறேன் என்றார்.

பாராட்டுகள்

ஜனாதிபதி கோத்தாபயவின் எண்ணக் கருவுக்கு அமைய மேற்கொள்ளப்படும் நாட்டை அழகுபடுத்தும் திட்டம் வரவேற்கத்தக்கது. சுவர் மற்றும் மதில் ஓவியங்கள் அப்பிரதேச மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளால் அவர்களது சொந்த செலவிலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வரையப்படும் சித்திரங்கள் அரச தரப்பினால் அல்லது அரச நிறுவனங்களினால் அவதானிக்கப்படவேண்டும். ஓவியங்கள் வரையப்படுவதை காரணம் காட்டி இனங்களுக்குள் விரிசல்கள் ஏற்பட்டு விடக்கூடாது.

ரதாவடுன்ன பள்ளிவாசல் மதிலில் உருவப்படங்கள் வரையப்பட்டு விட்டாலும் ஏனைய பள்ளிவாசல் மதில்களில் அவ்வாறு இடம்பெறாதிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரதாவடுன்ன பள்ளிவாசல் நிர்வாகம் வரையபப்ட்டுள்ள உருவப்பட ஒவியங்கள் அழிக்கப்பட்டு வேறு ஓவியம் வரையப்பட வேண்டும் என்று கோரவில்லை.
பள்ளிவாசல் மதிலில் அந்த ஓவியங்கள் அப்படியே நிலை பெறுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

முஸ்லிம்கள் உருவப்படங்களை காரணம் காட்டி முறுகல் நிலை உருவாகுவதை விரும்பாதவர்கள் என்பதை பெரும்பான்மை சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பொறுமை காக்கும் ரதாவடுன்ன பள்ளிவாசல் நிர்வாகத்துக்குப் பாராட்டுக்கள்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.