ஜமால் கஷோக்ஜியின் மரணமும் சவூதியின் எதிர்காலமும்

0 763

வித்யார்த்தி –

‘ஜமால் கஷோக்ஜி கொலை செய்­யப்­பட்ட தினத்தில் ஏன் 15 பேர் இஸ்­தான்­புலில் இருந்­தார்கள்’’?

‘அவர்கள் யாரி­ட­மி­ருந்து கட்­ட­ளை­களைப் பெற்றுக் கொண்­டார்கள்”?

‘விசா­ர­ணைக்­காக சவூதி தூத­ரகம் உட­ன­டி­யாகத் திறக்­கப்­ப­டாமல் பல நாட்கள் கழித்தே திறக்­கப்­பட்­டது ஏன்?

‘கொலை செய்­யப்­பட்­ட­வரின் உடம்பு ஏன் இன்னும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை?’

‘ஜமாலின் உடம்பை அகற்றும் பணி துருக்­கியைச் சேர்ந்த ஒரு­வ­ரிடம் கொடுக்­கப்­பட்­டது என்று சவூ­தியின் உயர்­மட்ட உத்­தி­யோ­கத்­தர்கள் கூறி­னார்கள். அப்­ப­டி­யானால் அந்த துருக்­கியைச் சேர்ந்­தவர் யார்’’?

சென்ற செவ்­வாய்க்­கி­ழமை துருக்­கியின் ஜனா­தி­பதி ரஜப் தையிப் அர்­துகான் மிகவும் எதிர்­பார்க்­கப்­பட்ட தனது பாரா­ளு­மன்றப் பேச்சில் கேட்ட கேள்­விகள் இவை. இந்தக் கேள்­வி­க­ளுக்­கான விடை­க­ளையே உலகு இன்று தேடிக்­கொண்­டி­ருக்­கி­றது.

சென்ற ஒக்­டோபர் 2ஆம் திகதி பிற்­பகல் 1.45 மணி­ய­ளவில் துருக்கிப் பெண்­மணி ஹெடிஸ் செஞ்சிஸ் உட­னான தனது திரு­ம­ணத்­திற்கு தேவை­யான ஆவ­ணங்­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக  சவூதி  தூத­ர­கத்­திற்குள் நுழைந்த, அமெ­ரிக்­காவில் வசிக்கும், வொஷிங்டன் போஸ்ட் பத்­தி­ரி­கையின் கட்­டு­ரை­யாளர் ஜமால் கஷோக்ஜி திரும்பி வர­வே­யில்லை. ஜமால் ஒரு சவூதிப் பிரஜை. சவூதி அர­சாங்­கத்­தையும், முடிக்­கு­ரிய இள­வ­ரசர் முஹம்மத் பின் சல்­மா­னையும் பகி­ரங்­க­மாக தனது கட்­டு­ரை­களில் விமர்­சித்­தவர்.

ஜமால் கஷோக்ஜி சவூதி தூத­ர­கத்­திற்குள் காணாமல் போனது முழு உல­கத்­தையும் உலுக்­கி­யது. ஜமால் எங்கே என்று முழு உல­கமும் கேட்­டது. ஆர்ப்­பாட்­டங்கள் பல இடங்­களில்  நடை பெற்­றன. துருக்கி தனது புலன் விசா­ர­ணையை ஆரம்­பித்­தது. இரண்டு வாரங்­க­ளாக முழு உல­கிலும், ஊட­கங்­க­ளிலும் இதுவே பேச்­சா­னது.

ஜமால் கஷோக்ஜி அன்­றைய தினமே பின் கதவு வழி­யாக வெளியே சென்­று­விட்டார் என்று சவூதி கூறிக்­கொண்­டி­ருந்த போது மெது­மெ­து­வாக துருக்­கியின் புல­னாய்­வுத்­துறை துருக்­கியின் அர­சாங்கப் பத்­தி­ரி­கை­யான அஸ் ஸபா­விற்கு தக­வல்­களை தெரிவித்துக் கொண்­டி­ருந்­தது.

சென்ற செப்­டம்பர் 26 ஆம் திகதி சவூதி  தூத­ர­கத்­திற்குச் சென்ற ஜமால் ஒக்­டோபர் இரண்டாம் திகதி மீண்டும் வரு­மாறு சவூதி தூத­ர­கத்­தினால் திருப்பி அனுப்­பப்­பட்­டமை, 15 பேர் கொண்ட ஒரு குழு ஒக்­டோபர் முதலாம் திகதி இஸ்­தான்­புல்­லிற்கு தனியார் ஜெட் ஒன்­றிலும், வர்த்­தக விமா­னத்­திலும் வந்­தி­றங்­கி­யமை, அக்­கு­ழுவில் முடிக்­கு­ரிய இள­வ­ர­ச­ரா­கிய முஹம்மத் பின் சல்­மானின் பாது­கா­வ­லர்­களும், சவூதி புல­னாய்­வுத்­துறை அதி­கா­ரி­களும், சவூ­தியின் பிர­ப­ல­மான தடய­வியல் நிபு­ணரும் இருந்­தமை, துருக்­கிக்­கான சவூதித் தூது­வரை சவூதி உட­ன­டி­யாகத் திருப்பி அழைத்துக் கொண்­டமை, வந்த 15 பேரும் அடுத்த நாளே திரும்பிச் சென்­றமை, துருக்கி அதி­கா­ரிகள் சவூதி தூத­ர­கத்­திற்குள் நுழை­வ­தற்கு ஒரு மணி நேரத்­திற்கு முன்னர் துப்­பு­ரவு குழு ஒன்று உள்ளே நுழைந்­தமை, தூத­ர­கத்­திற்குள் புதி­தாக பெயின்ட் பூசப்­பட்­டி­ருந்­தமை என்று பல தக­வல்­களை ஊட­கங்கள் வெளிப்­ப­டுத்­திய போது சவூதி அர­சாங்கம் வேறு வழி­யின்றி ஜமால் கஷோக்ஜி தூத­ர­கத்­திற்குள் நடந்த ஒரு சிறு கைக­லப்பில் மர­ணித்­து­விட்டார் என்று கூறி­யது.

சவூதி தூத­ர­கத்­திற்குள் சென்ற ஜமால் கஷோக்ஜி எங்கே என்று இது­வ­ரைக்கும் தேடிக்­கொண்­டி­ருந்த உலகு அவர் கொல்­லப்­பட்­டு­விட்டார் என்­பதை சவூதி உறுதி செய்த போது அவர் ஒரு கைக­லப்பில் கொல்­லப்­பட்டார்  என்ற கூற்றை ஏற்றுக் கொள்­ள­வில்லை.

நாட்கள் செல்லச் செல்ல உண்­மைகள் வெளி­வந்த வண்­ணமே இருந்­தன. ஜமால் கஷோக்ஜி கொல்­லப்­பட்ட போது பதிவு செய்­யப்­பட்ட ஓர் ஒலிப்­ப­தி­வி­னைப்­பற்றி துருக்கி ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டன. அந்த ஒலிப்­ப­திவு துருக்கி புல­னாய்வு அதி­கா­ரி­க­ளிடம் இருப்­ப­தா­கவும் அதன் அடிப்­ப­டையில் ஜமால் கஷோக்ஜி கழுத்து நெரிக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டதன் பின்னர் அவ­ரது உடல் ஒரு வாளினால் துண்டு துண்­டாக அறுக்­கப்­பட்டு பெட்­டி­களில் வைத்து தூத­ர­கத்­திற்கு வெளியே கொண்டு செல்­லப்­பட்­ட­தா­கவும் செய்­திகள் வெளி­யா­கின. ஜமாலின் உடம்பைக் கூறு போடு­வ­தற்­கா­கவே தட­வியல் நிபு­ண­ரான டாக்டர் ஸலாஹ் அல் துபைகி அந்த பதி­னைந்து பேர் கொண்ட குழுவில் இருந்­த­தாகச் சொல்­லப்­பட்ட போது சவூதி அரே­பியா வச­மாக மாட்டிக் கொண்­டது.

Leave A Reply

Your email address will not be published.