‘புர்கா’ இலங்கை முஸ்லிம்களுக்கு பொருத்தமான ஆடையல்ல

அமைச்சர் ஹலீம்

0 835

Q தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்கு இஸ்­லா­மிய அமைப்­பொன்று உரிமை கோரி­யுள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள சவால்கள் என்ன?

தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரி­யுள்­ளது. 350 இற்கும் மேற்­பட்ட அப்­பாவி மக்கள் பலி­யா­கி­யி­ருக்­கி­றார்கள். சுமார் 500 பேர் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருக்­கி­றார்கள். இதுவோர் சாதா­ரண விட­ய­மல்ல, பார­தூ­ர­மான விட­ய­மாகும்.

நாட்டில் மீண்டும் இனங்­க­ளுக்­கி­டையில் மோதல்கள் ஏற்­பட்டு விடுமோ என்ற அச்ச உணர்வு எல்லோர் மத்­தி­யிலும் ஏற்­பட்­டுள்­ளது. தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள் இஸ்­லா­மிய தீவி­ர­வா­திகள் என்­பதால் முஸ்­லிம்கள் பல­ச­வால்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர். இந்தத் தாக்­குதல் சமய ரீதியில் நோக்­கப்­பட்டால் எமது பள்­ளி­வா­சல்கள், எமது கலா­சார உடை என்­ப­ன­வற்­றுக்கும் பாரிய அச்­சு­றுத்­தல்கள் ஏற்­ப­டலாம்.

அனைத்துச் சவால்­க­ளையும் பொறுமை, அன்பு, கருணை, நல்­லு­றவு மூலம் வெற்­றி­கொள்ள முடியும். முஸ்­லிம்கள் எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் உணர்ச்சி வசப்­பட்டு விடக்­கூ­டாது. கிரா­மங்­க­ளிலும், நக­ரங்­க­ளிலும் நல்­லி­ணக்கச் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். நாட்டில் மீண்டும் இன ரீதி­யி­லான கல­வ­ரங்கள் ஏற்­படா வண்ணம் அர­சாங்­கமும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களைப் பலப்­ப­டுத்­த­வேண்டும்.

Q பாதிக்­கப்­பட்­டுள்ள சமூ­கத்­தி­ன­ரு­ட­னான நல்­லு­றவை எவ்­வாறு மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பலாம்?

ஆல­யங்கள், ஹோட்­டல்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்கு இலங்­கையின் குறிப்­பிட்ட தீவி­ர­வாத கொள்­கை­யு­டைய சிறு குழு­வி­ன­ருக்கே தொடர்­புள்­ளது. இஸ்லாம் தீவி­ர­வா­தத்­தையும், மனிதப் படு­கொ­லை­க­ளையும் வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது.

முஸ்லிம் சமூ­கத்தில் குறிப்­பட்ட தீவி­ர­வாதக் கொள்­கை­யு­டைய குழு­வி­னரே இதில் ஈடு­பட்­டுள்­ளனர் என்­ப­தையும் முஸ்லிம் சமூகம் இச்­செ­யலை வன்­மை­யாக கண்­டிக்­கி­றது என்­ப­தையும் நாம் மாற்று சமூ­கத்­தி­ன­ருக்குத் தெளி­வு­ப­டுத்­த­வேண்டும்.

முஸ்­லிம்கள் பாதிக்­கப்­பட்ட மக்­களின் துன்­பங்­களில் பங்கு கொள்­வ­துடன் அவர்­க­ளுக்கு உத­வி­களும் செய்­ய­வேண்டும். இந்த கொடூ­ர­மான தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­ப­டுத்தி முஸ்­லிம்­களை சந்­தேகக் கண்­கொண்டு நோக்­கக்­கூ­டாது என பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் கூறி­யுள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இதே கருத்­தி­னையே வெளி­யிட்­டுள்ளார். முஸ்­லிம்­க­ளுக்கும் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் கூறி­யுள்ளார்.

இந்தத் தாக்­குதல் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளையும், பின்­ன­ணியில் இருந்து செயற்­பட்­ட­வர்­க­ளையும், பாது­காப்பு பிரி­வினர் கைது­செய்­வ­தற்கு நாம் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும். இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் எம்­மீது கொண்­டுள்ள சந்­தே­கங்­களைக் களை­வ­தற்கு உத­வி­யாக இருக்கும். கிறிஸ்­தவ மதத்­துக்கும், இஸ்­லாத்­துக்­கு­மி­டையில் இருக்கும் நெருங்­கிய உற­வினைப் பலப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.

Q பள்­ளி­வா­சல்­களின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் இருக்­கி­றதா?

அர­சாங்கம் அனைத்து மதத்­த­லங்­களின் பாது­காப்­பிலும் கவனம் செலுத்­தி­யுள்­ளது. இந்த சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு நாட்டில் குழப்­ப­நி­லையை உரு­வாக்­கு­வ­தற்கு விஷ­மிகள் பள்­ளி­வா­சல்கள் மீது கல்­லெ­றிதல் போன்ற செயல்­களில் ஈடு­ப­டலாம். அதனால் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களும் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்டும். பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வெள்­ளிக்­கி­ழ­மை­களில் பாது­காப்பு வழங்­கு­மாறும் பாது­காப்புச் செய­லா­ள­ரிடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

Q பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆசு மார­சிங்க புர்கா தடை செய்­யப்­ப­ட­வேண்டும் என தனி­நபர் பிரே­ரணை கொண்­டு­வ­ர­வுள்­ளாரே?

ஆம், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆசு மார­சிங்க முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் புர்கா ஆடையை தடை­செய்ய வேண்டும் என்ற தனி­நபர் பிரே­ர­ணை­யொன்­றினை பாரா­ளு­மன்ற செய­லா­ள­ரிடம் சமர்ப்­பித்­துள்ளார். இது­வி­ட­யத்தில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஆராய்ந்து தீர்­மா­ன­மொன்­றினை எடுக்கும். தற்­போது எமது நாட்டின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்ள நிலையில் புர்கா ஆடையைப் பயன்­ப­டுத்தி சில சட்­ட­வி­ரோத செயல்­களும் நடை­பெ­று­கின்­றன. புர்கா ஆடை இலங்கை முஸ்­லிம்­களின் ஆடை­யல்ல. எமக்கும் பொருத்­த­மான கலா­சார ஆடை­யொன்­றினை நாம் தேர்ந்­தெ­டுத்­துக்­கொள்­வது நல்­லது. இக்­கட்­டான இன்­றைய சூழலில் புர்­காவைத் தவிர்த்­தி­ருப்­பது நல்­லது என நான் நினைக்­கிறேன்.

Q இஸ்­லா­மிய மத அமைப்­பு­களை எவ்­வாறு ஒருங்­கி­ணைக்க முடியும்!

இஸ்­லா­மிய மத அமைப்­புகள் கொள்கை ரீதி­யாக வேறு­பட்­டுள்­ளன. இந்தக் காலகட்டத்தில் கொள்கை ரீதியாக பிளவுபட்டுள்ள அவற்றை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நாம் ஒற்றுமைப்படுவதன் மூலமே எமக்கிடையேயுள்ள முரண்பாடுகளைக் களைய முடியும்.

கொள்கை ரீதியில் பிளவுபட்டுள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் வக்பு சட்டத்தின் கீழ் வக்பு சபையில் பதிவு செய்வதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் எனக் கருதுகிறேன்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சம்பவங்களையடுத்து முஸ்லிம்களை சந்தேகிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இந்த சந்தேகங்களைக் களைய வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.