கருமலையூற்று பள்ளிவாசல் காணி விடுவிக்கப்பட வேண்டும்

0 655

நான்கு நூற்­றாண்­டு­க­ளாக முஸ்­லிம்­களின் வழி­பாட்­டுத்­த­ல­மாக விளங்­கிய கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் அரச படை­யி­னரால் இடித்து அழிக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டில் உள்­நாட்டு யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தி­லி­ருந்து இன்­று­வரை ஒரு தசாப்­த­கா­ல­மாக கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் காணி படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டிலே இருக்­கின்­றது.

மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்தும் வணக்­கஸ்­த­ல­மான கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் 2014 ஆம் ஆண்டு படை­யி­னரால் உடைத்து சிதைக்­கப்­பட்­டது. அந்த சிதை­வு­க­ளுக்கு மத்­தி­யிலே இன்று அப்­ப­கு­தியைச் சேர்ந்த சுமார் 300 குடும்­பங்களைச் சேர்­ந­த­வர்கள் கூடாரம் அமைத்து பாய்­வி­ரித்து ஜும்ஆ தொழு­கையை நிறை­வேற்­று­கி­றார்கள்.

அன்று திரு­கோ­ண­மலை பிர­தே­சத்தைச் சேர்ந்த நாச்­சிக்­குடா, வெள்ளை மணல், கரு­ம­லை­யூற்று கிரா­மங்­க­ளைச்­சேர்ந்த சுமார் 1000 குடும்­பங்கள் இப்­பள்­ளி­வா­சலைப் பயன்­ப­டுத்­தின. பள்­ளி­வாசல் 2014 இல் உடைக்­கப்­பட்­டதையடுத்து பல போராட்­டங்­களின் பின்பு 2015 இல் தேர்தல் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் அப்­போ­தைய பாது­காப்புச் செய­லாளர் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வா­சலில் முஸ்­லிம்கள் சமய வழி­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு அனு­மதி வழங்­கினார் என்­றாலும் பள்­ளி­வா­ச­லுக்குச் செல்லும் பிர­தான பாதை படை­யி­னரால் மறிக்­கப்­பட்­டுள்­ளது. மக்கள் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் மாற்று வழியைப் பயன்­ப­டுத்­து­கின்­றனர்.

பள்­ளி­வா­ச­லுக்கு சொந்­த­மான 139 பேர்ச்சஸ் காணியும் தற்­போது தரைப்­படை கவச வாகன 4 ஆம் படைப் பிரிவின் ஆக்­கி­ர­மிப்பின் கீழே இருக்­கி­றது. பள்­ளி­வா­சலை மீள் நிர்­மா­ணிக்க 20 பேர்ச்சஸ் காணி வழங்­கு­வ­தாக படைப்­பி­ரிவு வாய்­மூல உறு­தியே வழங்­கி­யுள்­ளது. சட்ட ரீதி­யான ஆவ­ணங்கள் எதுவும் வழங்­கப்­ப­ட­வில்லை. அதனால் பிர­தேச செய­லகம் பள்­ளி­வாசல் நிர்­மா­ணத்­திற்­கான அனு­ம­தியை வழங்க மறுத்து வரு­கி­றது என பள்­ளி­வாசல் நிர்­வா­க­ச­பையின் தலைவர் எம்.ஐ. ஜவாஹிர் தெரி­வித்­துள்ளார்.

நல்­லி­ணக்கம், தேசிய ஒற்­றுமை, மதச் சுதந்­திரம் பற்றி பேசி­வரும் அர­சாங்கம் முஸ்­லிம்­களின் வழி­பாட்டுத் தல­மான பள்­ளி­வா­ச­லையும் பள்­ளி­வாசல் காணி­யையும் படை­யினர் வசம் ஒப்­ப­டைத்­தி­ருப்­பது எவ்­வ­கை­யிலும் அனு­ம­திக்க முடி­யா­த­தாகும். அர­சுக்­கெ­தி­ராக எவ்­வித போராட்­டங்­க­ளையும் முன்­னெ­டுக்­காத சமா­தான விரும்­பி­க­ளான முஸ்­லிம்­களை இவ்­வாறு தண்­டிப்­பது கண்­டிக்­கத்­தக்­க­தாகும்.

அமைச்­சர்கள், பிர­தி­ய­மைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என இரு­ப­துக்கும் மேற்­பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் நாட்டின் அதி­யுயர் சபை­யான பாரா­ளு­மன்­றத்தைப் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்­து­கி­றார்கள். முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்­கென தனி­யாக ஒரு அமைச்சர் இருக்­கிறார். கிழக்கு மாகா­ணத்தின் ஆளு­நரும் ஒரு முஸ்­லிமே என்­றாலும் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் தொடர்ந்தும் படை­யி­னரின் ஆதிக்­கத்தில் இருக்கிறது.

வடக்கில் ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் மக்­க­ளது சொந்­தக்­கா­ணிகள் படை­யினர் வச­மி­ருந்து விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் கிழக்கில் கருமலையூற்று பள்­ளி­வாசல் காணி ஒரு தசாப்த கால­மா­கியும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் இதில் அக்­கறை செலுத்­தா­மையே இதற்குக் கார­ண­மாகும். அவர்கள் கூடு­த­லான அமைச்சர் பத­விகள் வழங்­கப்­பட்டு வாய­டைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

கல்வி அமைச்சின் கண்­கா­ணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கருமலையூற்று பள்ளிவாசல் விவகாரத்தை பாராளுமன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இது பற்றி வாய்திறக்க வேண்டும். கருமலையூற்று பள்ளிவாசல் காணி மீளப் பெறப்பட்டு அங்கு புதியவொரு பள்ளிவாசல் மீள் நிர்மாணம் பெறவேண்டும். இது இவ்வுலக உழைப்பல்ல மறுமைக்கான உழைப்பு என்பதை மக்கள் பிரதிநிதிகள் உணர வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.