மேல் மாகாண பாடசாலைகளின் கல்வித் தரத்தை உயர்த்த பாரிய வேலைத்திட்டம்

மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி

0 594

மேல் மாகா­ணத்­தி­லுள்ள பாட­சா­லை­களின் கல்­வித்­த­ரத்­தினை உயர்த்­து­வ­தற்கு பாரிய வேலைத்­திட்­ட­மொன்­றினை அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ள­தாகத் தெரி­வித்த மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி அத்­திட்­டத்­திற்­கான ஆலோ­ச­னை­களை வழங்­கு­மாறு முஸ்லிம் பாட­சாலை அதி­பர்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்தார்.

மேல் மாகா­ணத்தைச் சேர்ந்த களுத்­துறை, கம்­பஹா மற்றும் கொழும்பு மாவட்­டங்­களின் 64 முஸ்லிம் பாட­சா­லை­களின் அதி­பர்­களை சந்­தித்து மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கல்­வித்­துறை சார்ந்த விட­யங்­களைக் கலந்­து­ரை­யா­டி­ய­துடன் பாட­சா­லை­களின் பிரச்­சி­னை­க­ளையும் கேட்­ட­றிந்தார்.

மேல் மாகா­ணத்தில் அர­சியல் ரீதி­யி­லான இட­மாற்­றங்கள் இடம்­பெ­று­கின்­றன. அதனால் கல்வி நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­ப­டு­கின்­றன என அதி­பர்கள் ஆளு­ந­ரிடம் முறை­யிட்­டனர். அவ்­வா­றான இட­மாற்­றங்­களை நிறுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஆளுநர் உறு­தி­ய­ளித்தார்.

மேல் மாகா­ணத்தின் பாட­சா­லை­களின் கல்­வித்­தரம் தற்­போது 3 ஆம் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் அதனை முதல் நிலைக்கு கொண்டு வரு­வ­தையே விசேட திட்­டத்தின் மூலம் எதிர்­பார்ப்­ப­தா­கவும் இதற்கு அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டு­மெ­னவும் ஆளுநர் வேண்டிக் கொண்டார்.

அனைத்துப் பாட­சா­லைகளுக்கும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் ஒருவர் வீதம் கட­மை­யாற்ற வேண்டும் எனத் தெரி­வித்த அவர் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் இல்­லாத பாட­சா­லை­க­ளுக்கு அதற்­கான நிய­ம­னங்­களை பெற்றுக் கொள்ள உத­வு­வ­தா­கவும் கூறினார்.

பாட­சா­லைகள் எப்­போதும் சுத்­த­மாக இருக்­க­வேண்டும் எனவும் வேண்­டினார். பாட­சாலை சுத்­தி­க­ரிப்­பா­ள­ருக்கு சம்­பளம் வழங்க முடி­யாத நிலை இருப்­ப­தாக அதி­பர்கள் முறை­யிட்­ட­தை­ய­டுத்து அவர்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வு­களை தான் ஏற்­பாடு செய்­வ­தா­கவும் ஆளுநர் உறு­தி­ய­ளித்தார்.

பாட­சா­லை­களில் உப­யோ­கப்­ப­டுத்த முடி­யாத உடைந்த தள­பா­டங்கள் குவித்­து­வைக்­கப்­பட்­டி­ருப்­பது பாட­சாலை சூழலை அவ­லட்­ச­ணப்­ப­டுத்­து­வ­தனால் அவற்றை பாட­சா­லை­க­ளி­லி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்தி விடு­மாறும் அதி­பர்­களை வேண்டிக் கொண்டார்.

இந்தக் கலந்­து­ரை­யா­டலில் முஸ்லிம் பாடசாலை அதிபர்களும் மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஜயனத் நாணயக்கார மற்றும் மேலதிகப் பணிப்பாளர் விமல் குணரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்தக் கலந்துரையாடல் மேல் மாகாண ஆளுநரின் காரியாலயத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.