புத்தர் சிலைகள் உடைப்பும் வெடி பொருட்கள் மீட்பும்

அது கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி. அதி­காலை நேரத்தில் குரு­நாகல் மாவட்டம் பொது­ஹர பொலிஸ் பிரிவின் கட்­டு­பிட்­டிய வீதியில் கோண்­வல பகு­தியில் அமை­யப்­பெற்­றுள்ள ஆலயம் ஒன்றில் இந்துக் கட­வுள்­களைக் குறிக்கும் உரு­வச்­சி­லைகள் அடை­யாளம் தெரி­யா­தோரால் அடித்து நொறுக்கி சேத­மாக்­கப்­பட்­டன. இந்த சம்­பவம் தொடர்பில் பொது­ஹர பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதா­வது, கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இத­னை­யொத்த ஒரு சம்­பவம் யட்­டி­நு­வர - வெலம்­பட பொலிஸ் பிரிவில் பதி­வா­னது.

0 1,049
  • எம்.எப்.எம்.பஸீர்

அது கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி. அதி­காலை நேரத்தில் குரு­நாகல் மாவட்டம் பொது­ஹர பொலிஸ் பிரிவின் கட்­டு­பிட்­டிய வீதியில் கோண்­வல பகு­தியில் அமை­யப்­பெற்­றுள்ள ஆலயம் ஒன்றில் இந்துக் கட­வுள்­களைக் குறிக்கும் உரு­வச்­சி­லைகள் அடை­யாளம் தெரி­யா­தோரால் அடித்து நொறுக்கி சேத­மாக்­கப்­பட்­டன. இந்த சம்­பவம் தொடர்பில் பொது­ஹர பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதா­வது, கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இத­னை­யொத்த ஒரு சம்­பவம் யட்­டி­நு­வர – வெலம்­பட பொலிஸ் பிரிவில் பதி­வா­னது.

அதி­காலை 3.00 மணி­ய­ளவில் வெலம்­பட பொலிஸ் பிரிவின் லெயம்­க­ஹ­வல பகு­தியில் மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை அடை­யாளம் தெரி­யா­தோரின் தாக்­கு­த­லுக்­குள்­ளா­னது. அத்­துடன் அந்த மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை சேதப்­ப­டுத்­தப்­பட்ட அதே­நேரம் அதனை அண்­டிய பகு­தி­யி­லி­ருந்த மேலும் மூன்று சிறு சிலை­களும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் அதே­தினம் அதி­காலை 4.00 மணி­ய­ளவில் மாவ­னெல்லை – திது­ரு­வத்த சந்­தி­யி­லுள்ள புத்தர் சிலையும் தாக்கி சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­போ­துதான் இந்த சிலை உடைப்பு சம்­ப­வங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க தட­யமும் கிடைத்­தது எனலாம்.

திது­ரு­வத்த சந்­தியில் புத்தர் சிலையை தாக்க மோட்டார் சைக்­கிளில் இருவர் வந்­துள்­ளனர். இவ்­வாறு வந்­த­தாகக் கூறப்­படும் இரு­வரில் ஒரு­வரை பிர­தே­ச­வா­சிகள் துரத்­திப்­பி­டித்து மாவ­னெல்லை பொலி­சா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். இதுவே இந்த சிலை உடைப்பு சம்­ப­வங்கள் குறித்த மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­கான பிர­தான சான்­றா­னது.

இந்­நி­லையில் தான் இது­கு­றித்து சப்­ர­க­முவ மற்றும் தென் மாகா­ணங்­க­ளுக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜே­கு­ண­வர்­த­னவின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் கேகாலை பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த சிறி­வர்­த­னவின் மேற்­பார்­வையில், கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சாமிக்க பிரே­ம­சி­ரியின் ஆலோ­ச­னைக்­க­மைய, கேகாலை உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஓ.பி. அம­ர­பந்­துவின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்ட தீர்க்­கப்­ப­டாத குற்­றங்கள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அபே­ரத்ன மற்றும் மாவ­னெல்லை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் தமித்த திலங்க ஆகியோர் அடங்­கிய சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தன.

இதன்­போது வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்­க­மை­வாக அந்த பொலிஸ் குழு­வினர் பொது­மக்கள் பிடித்­துக்­கொ­டுத்த சந்­தேக நப­ருக்கு மேல­தி­க­மாக மேலும் ஆறு பேரைக் கைது செய்­தனர். விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்கள் மற்றும் அறி­வியல் ரீதி­யி­லான தட­யங்­களை மைய­ப்ப­டுத்தி இந்த கைதுகள் இடம்­பெற்­றி­ருந்­தன. இவ்­வா­றான ஒரு பின்­ன­ணி­யி­லேயே இந்த விட­யத்தின் பின்­னணி உள்­ளிட்­ட­வற்றைக் கண்­ட­றிய விசேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ர­வினால் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

அதன்­படி பொது­ஹர, வெலம்­பட, மாவ­னெல்லை என அனைத்து இடங்­க­ளிலும் இடம்­பெற்ற சிலை உடைப்­புக்கள் குறித்து சி.ஐ.டி. விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது. சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­க­ரவின் ஆலோ­ச­னைக்­க­மைய உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் விக்­ர­ம­சே­க­ரவின் கீழ் விஷேட விசா­ரணைப் பிரிவு – 2 இன் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஜனக மார­சிங்­கவை உள்­ள­டக்­கிய மூன்று சிறப்புக் குழுக்கள் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தன.

அதன்­போதும் மாவ­னெல்லை பொலி­ஸாரும் கேகாலை மாவட்ட தீர்க்­கப்­ப­டாத குற்­றங்­களை விசா­ரிக்கும் பிரிவும் பல்­வேறு தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில், சிலை­யொன்றை உடைக்­கும்­போது பொது­மக்­க­ளிடம் பிடி­பட்­ட­வ­ருடன் வந்த மற்­றைய நபர் இச்­சம்­ப­வங்­களின் பிர­தானி என்­பது கண்­ட­றி­யப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் அவ­ரது சகோ­த­ரரும் இந்த விட­யங்­க­ளுடன் தொடர்­பு­பட்­டுள்­ள­மையும், சகோ­த­ரர்கள் இரு­வ­ருமே இந்த விஷ­மத்­த­ன­மான செயற்­பா­டு­க­ளுக்கு தலைமை வகித்­துள்­ள­மையும் கண்­ட­றி­யப்­பட்­டது.

மொஹம்மட் இப்­ராஹிம் சாதிக் அப்­துல்லா, மொஹம்மட் இப்­ராஹிம் சாஹித் அப்­துல்லா என்ற இந்த சகோ­த­ரர்­களை கண்­டு­பி­டிக்க கேகாலை சிறப்பு பொலிஸ் பிரி­வி­ன­ருக்கு மேல­தி­க­மாக சி.ஐ.டி.யும் களத்தில் குதித்­தது.

எனினும், இச்­சம்­பவம் தொடங்­கி­யது முதல் இன்று வரை ஒரு மாத காலம் நிறை­வ­டைந்­துள்ள நிலை­யிலும் இது­வரை அந்த சகோ­த­ரர்­களைக் கைது செய்ய முடி­யாமல் போயுள்­ளது. அவர்கள் தமது இருப்­பி­டங்­க­ளை­விட்டு வெளி­யேறி தலை­ம­றை­வாக இருந்து வரு­கின்­றனர்.

இந் நிலையில் அவர்­களைக் கைது செய்ய பல்­வேறு விசா­ர­ணைகள் மற்றும் திட்­டங்­களை வகுத்த பொலிஸார் அதன் ஊடாக செயற்­பட்டு வரு­கின்­றனர்.

இப்­படி இருக்­கை­யில்தான் கடந்த 16 ஆம் திகதி குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு ஒரு தகவல் கிடைத்­தி­ருந்­தது. அதா­வது, தேடப்­படும் சாதிக் அப்­துல்­லாவும், சாஹித் அப்­துல்­லாவும் புத்­தளம், வணாத்­த­வில்லு பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட புபு­து­கம – லெக்டோ ஹவுஸ், இலக்கம் 637/3 எனும் இடத்தில் அமைந்­துள்ள தென்னந் தோப்பில் மறைந்­துள்­ள­தாக அந்த தகவல் கிடைத்­தி­ருந்­தது. அதிலும் பாலாவி, புத்­தளம் – மன்னார் வீதியின் இரண்டாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த மொஹம்மட் முபீஸ் என்­ப­வ­ருடன் அவர்கள் இருப்­ப­தாக இதன்­போது தகவல் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

அதன்­ப­டியே சி.ஐ.டி. குழு­வினர் அங்கு செல்ல கடந்த 16 ஆம் திகதி நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்­தனர். புத்­தளம் – மன்னார் வீதி­யூ­டாக சென்ற சி.ஐ.டி. குழு­வினர் அங்கு சென். செபஸ்­டியன் கிறிஸ்­தவ ஆலயம் அமைந்­துள்ள இடத்­தி­லி­ருந்து இடது பக்­க­மாக உள்ள வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்­றர்கள் வரை செல்ல வேண்­டி­யேற்­பட்­டது. அப்­போதே அங்கு அந்த 80 ஏக்கர் வரை விஸ்­தீ­ரணம் கொண்ட தென்­னத்­தோப்பை சி.ஐ.டி.யினரால் அடைய முடி­யு­மாக இருந்­துள்­ளது. ஆள் நட­மாட்­ட­மில்­லாத ஒதுக்­குப்­பு­ற­மான அந்த தோட்­டத்தில் காடுகள் அடர்ந்­தி­ருந்­தன. போவ­தற்கு வழி மட்டும் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அங்கு சி.ஐ.டி.யினர் செல்­லும்­போது மாலை நேர­மாக இருந்­தது.

அந்த தோட்­டத்தில் ஒரு சிறு கட்­டிடம் இருந்த நிலையில் அக்­கட்­டி­டத்­துக்கு சூரி­ய­ஒளி ஊடாக மின்­சா­ரமும் பெறப்­பட்­டி­ருந்­தது. சாதிக் அப்­துல்லா, சாஹித் அப்­துல்­லாவை தேடி சி.ஐ.டி. சென்­ற­போதும் அவர்கள் அங்கு இருக்­க­வில்லை. எனினும், வேறு இளை­ஞர்கள் நால்வர் அங்கு இருந்­தனர். அவர்­களில் குறித்த தென்­னத்­தோப்பு உரி­மை­யா­ளரின் மக­னான மொஹம்மட் முபீஸும் ஒருவர். அந்த தென்­னத்­தோப்பு அபூ ஹனீபா என்­ப­வ­ருக்கு உரி­யது. அவர் மர­ணித்­தி­ருந்த நிலையில் அது அவ­ரது இரு மகள்மார் மற்றும் மகனால் பரா­ம­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மகள்மார் குறித்த காணி தொடர்பில் நேர­டி­யாக எத­னையும் முன்­னெ­டுக்­காத நிலையில் மக­னான மொஹம்மட் முபீஸே அக்­கா­ணியில் நடந்த நட­வ­டிக்­கை­களை கண்­கா­ணித்­துள்ளார்.

இந்­நி­லையில் சி.ஐ.டி. அங்கு சிலை உடைப்பு சந்­தேக நபர்­களைத் தேடி சென்­ற­போது, முபீஸும் அவ­ருடன் புத்­தளம் – மன்னார் வீதியைச் சேர்ந்த மொஹம்மட் பஸ்ரின், மொஹம்மட் பர்வீன் ஆகி­யோரும், புத்­தளம், வான் வீதியைச் சேர்ந்த மொஹம்மட் ஹமாசும் அத்­தோட்­டத்தின் சிறிய கட்­டிடப் பகு­தியில் இருந்­துள்­ளனர்.

இந்­நால்­வ­ரி­டமும் சி.ஐ.டி. விசா­ரித்­துக்­கொண்­டி­ருக்கும் போது, அங்­கி­ருந்த சி.ஐ.டி. அதி­காரி ஒரு­வரின் கண்ணில் சுமார் 20 மீற்றர் தூரத்தில் புதைத்து, அரை­வாசி நில­மட்­டத்­துக்கு மேல் தெரியும் பிளாஸ்ரிக் பீப்பாய் ஒன்று தென்­பட்­டுள்­ளது.

அப்­போது அந்த அதி­காரி யதார்த்­த­மாக அந்த பீப்பாய் வரை சென்று அதனை சோதித்­துள்ளார். இதன்­போதே அதில் சி-4 ரகத்தை ஒத்­த­தென சந்­தே­கிக்­கத்­தக்க வெடி­பொ­ருள்கள், மேலும் சில அமில வகைகள் மறைத்து வைக்­கப்­பட்­டுள்­ள­மையை அவர் அவ­தா­னித்­துள்ளார். இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக அந்த நால்­வ­ரையும் சி.ஐ.டி. தனது பொறுப்­பி­லெ­டுத்து அது­கு­றித்து விளக்கம் கோர ஆரம்­பித்­தது.

அப்­போது இருட்­டி­வி­டவே உட­ன­டி­யாக புத்­தளம் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர் ஸ்தலத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்­ட­துடன், அந்த தோட்டம் அதி­ரடிப் படை பாது­காப்பின் கீழ் அடுத்த 24 மணி நேரத்­துக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

இந்­நி­லையில் மறுநாள் அதா­வது, கடந்த 17 ஆம் திகதி சி.ஐ.டி.யினரால் விரி­வான சோத­னைகள் நடாத்­தப்­பட்­டன. இதன்­போது சி.ஐ.டி. உய­ர­தி­கா­ரிகள் ஸ்தலத்­துக்கு விரைந்­தனர். வெடி­பொ­ருட்கள் தொடர்பில் விசேட பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்ட மோப்­பநாய் ரினாவும், லெசியும் ஸ்தலத்­துக்கு அழைத்­து­வ­ரப்­பட்டு சோத­னை­யி­டப்­பட்­டது. அரச இர­சா­யனப் பகுப்­பாய்­வா­ளர்கள், வெடி­பொருள் நிபு­ணர்கள் எனப் பலரும் அப்­போது அங்கு கூடினர்.

இந்­நி­லை­யில்தான் 17 ஆம் திகதி முழு­வதும் நடாத்­தப்­பட்ட சிறப்புத் தேடு­தலில் அந்த தென்னத் தோப்­பி­லி­ருந்து பல உப­க­ர­ணங்கள் கைப்­பற்­றப்­பட்­டன. அதன்­படி அவை தொடர்பில் அங்­கி­ருந்த அந்த நான்கு பேரையும் சி.ஐ.டி. கைது செய்­தது.

சுமார் 90 கிலோ வெடி­பொ­ருட்­க­ளுக்கு மேல­தி­க­மாக 100 இந்­திய தயா­ரிப்பு டெட­னே­டர்கள், வயர் கோர்ட் தொகு­திகள், இலங்­கைக்குள் தடை செய்­யப்­பட்­டுள்ள  நைட்­டிரேட் அமிலம் 20 லீட்டர் அடங்­கிய 6 கேன்கள், மின் குமிழ்கள், அதி­சக்­தி­வாய்ந்த வெடி­பொ­ருட்­க­ளுக்குப் பயன்­ப­டுத்தும் சி 4 வெடி மருந்து 75 கிலோ, குழல் 12 துப்­பாக்கி ஒன்று, அதற்குப் பயன்­ப­டுத்தும் தோட்­டாக்கள், எயா ரைபிள் ரக துப்­பாக்கி ஒன்று, பாது­காப்பு கூடா­ரங்கள் இரண்டு, 20 நாட்கள் வரை பயன்­ப­டுத்த முடி­யு­மான உல­ரு­ண­வுகள், கணினி ஒன்று, கமெ­ரா­வொன்று, தமிழ், அரபு மொழி­க­ளி­லான சமயப் புத்­தகங்கள், பெரும் தொகை பாய்கள் என அதன்­போது கைப்­பற்­றப்­பட்ட பொருட்­களின் பட்­டியல் நீள்­கின்­றது.

இந்­நி­லை­யி­லேயே அங்கு கைது செய்­யப்­பட்ட நால்­வ­ரையும் அந்தப் பொருட்­க­ளுடன் சி.ஐ.டி. தனது தலை­மை­ய­கத்­துக்கு அழைத்து வந்­தது. அவர்கள் கைது செய்­யப்­பட்டு 48 மணி நேரத்தில் அந்த நால்­வ­ரையும் பயங்­க­ர­வாத தடை சட்­ட­ விதிகள் பிர­காரம் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரிக்க பாது­காப்பு அமைச்­சிடம் விண்­ணப்­பித்த சி.ஐ.டி. அதற்­கான அனு­ம­தி­யையும் பெற்­றுக்­கொண்­டது.

அதன்­படி அவர்­க­ளிடம் சி.ஐ.டி. தொடர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் நிலையில், அங்கு சிறு குண்­டுகள் தயா­ரிக்­கப்­பட்டு புத்தர் சிலை­களை தகர்ப்­ப­தற்­கான திட்­டங்கள் தீட்­டப்­பட்­டதா என்­பது குறித்து சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் விசா­ரித்து வரு­கின்­றனர். அங்­கி­ருந்த பொருட்­களைப் பொறுத்­த­வரை சிறிய ரக குண்­டு­களைத் தயா­ரிக்க ஒரு சேர்வை மட்­டுமே குறை­பாடாக இருந்­த­தாக வெடி­குண்டு நிபு­ணர்கள் கூறுன்­றனர். அதன்­படி அந்தக் குறை­பா­டான பொருளை அவர்கள் அரு­கி­லுள்ள வெங்­காய விவ­சாய நிலங்கள் ஊடா­கவோ அல்­லது இறால் பண்­ணை­க­ளி­லுள்ள சில பொருட்கள் ஊடா­கவோ அல்­லது பழைய மின்­க­லங்­களை சேக­ரிப்போர் ஊடா­கவோ பெற்­றுக்­கொள்ள அதிக வாய்ப்­புகள் இருப்­ப­தாக அவர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.