புதிய அரசியலமைப்பு பணிகள் தொடர வேண்டும்

0 784

நாட்டில்  உரு­வான  அர­சியல்  ஸ்திர­மற்ற  நிலைமை  கார­ண­மாக  புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றினை  உரு­வாக்கும்  பணிகள் செய­லற்­றி­ருந்­தன.  இந்தப்  பணிகள் மீண்டும்  ஆரம்­பிக்­கப்­பட வேண்­டி­யது காலத்தின் தேவை­யாகும்.

புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றினை  உரு­வாக்­கு­வது தொடர்பில் அர­சி­ய­ல­மைப்பு சபை­யொன்று 2016 ஆம் ஆண்டு  மார்ச்  16 ஆம்  திகதி நிய­மிக்­கப்­பட்­டது.  இந்த அர­சி­ய­மைப்புச் சபையில்  பாரா­ளு­மன்­றத்தைப்  பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும்  225 பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்­களும்  உள்­ள­டங்­கு­கின்­றனர்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும்  பணி­க­ளுக்கு  ஒத்­து­ழைப்பு  வழங்­கு­வ­தற்­காக  அர­சி­ய­ல­மைப்பு  சபை­யினால் வழி­ந­டத்தல் குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டது.  பிர­த­மரின்  தலை­மையில்  22 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இதில் அங்கம் வகிக்­கின்­றனர். பாரா­ளு­மன்­றத்தைப்  பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும்  அனைத்து அர­சியல்  கட்­சி­களின் பிர­தி­நி­திகள் ஒருவர் வீதம்  இதில் இடம் பெற்­றுள்­ளனர்.

இந்த வழி­ந­டத்தல் குழு இது­வரை  70 தட­வைகள்  ஒன்று கூடி­யுள்­ளது.  முத­லா­வது  அறிக்­கை­யொன்­றி­னையும் தயா­ரித்­துள்­ளது.  இந்த அறிக்கை தொடர்பில்  அர­சி­ய­ல­மைப்பு சபை 5 தினங்கள் கலந்­து­ரை­யா­டி­யது, விவா­தித்­தது.  அர­சி­ய­ல­மைப்பு  சபையின்  தீர்­மா­னத்­துக்கு அமைய விவா­தத்தின்  போது மேலெ­ழுந்த கருத்­துக்கள்  மற்றும், நிபு­ணர்­களின் ஆலோ­ச­னைகள்  உள்­ள­டக்கி  இரண்­டா­வது அறிக்கை  அர­சி­ய­ல­மைப்பு சட்­ட­மூல வடிவில்  தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.  இந்த அறிக்­கையே அர­சி­ய­ல­மைப்பு  சபைக்கு அதா­வது  பாரா­ளு­மன்­றுக்கு  சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

இதே­வேளை  தமிழ் தேசிய  கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன்  எதிர்­வரும்  பெப்­ர­வரி  4 ஆம் திக­திக்கு முன்பு  புதிய  அர­சி­ய­ல­மைப்பை மக்கள் விடு­தலை  முன்­ன­ணியின்  ஆத­ர­வுடன்  பாரா­ளு­மன்றில்  சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாகக் கூறி­யுள்ளார்.  ஆனால் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன்  தங்கள் கட்­சி­யுடன்  இது தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­வில்லை  என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் நளிந்த   ஜய­திஸ்ஸ தெரி­வித்­துள்ளார்.

தற்­போ­தைய  அர­சி­ய­ல­மைப்பு 19 தட­வைகள்  திருத்­தங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 19 ஆம் திருத்தம் நிறை­வேற்­றப்­பட்டு 2 வரு­டங்கள்  கடந்து விட்ட நிலையில் 20 ஆவது   திருத்தம் பற்­றியும்  இப்­போது  பேசப்­ப­டு­கி­றது. இந்­நி­லை­யி­லேயே ஒரு மாதத்­துக்குள் புதிய  அர­சி­ய­ல­மைப்பை  நிறை­வேற்றிக் கொள்­ள­வுள்­ள­தாக சுமந்­திரன் எம்.பி.தெரி­வித்­துள்ளார். அர­சி­ய­ல­மைப்­பொன்­றினை உரு­வாக்­கு­வது தேர்தல்  துண்டுப் பிர­சுரம்  தயா­ரிப்­பது போன்று இலே­சான  காரி­ய­மல்ல.  அது மிகவும்  ஆழ­மான  ஒரு பணி­யாகும்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு  சமஷ்டி  ஆட்­சியை  வழங்கும் ஏற்­பா­டாகும் என தெற்கின்  சில அர­சி­யல்­வா­திகள்  தெரி­விக்­கி­றார்கள். தமிழ் மக்­க­ளுக்கு  வழங்­கிய  தேர்தல்  வாக்­கு­று­தியின்  அடிப்­ப­டை­யி­லேயே  புதிய அர­சி­ய­ல­மைப்பு  உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது என்றும்  குற்றம்  சுமத்­தப்­ப­டு­கி­றது. தமிழ் தேசிய  கூட்­ட­மைப்­புடன்  புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில்  எந்த உடன் படிக்­கையும்  செய்து கொள்­ள­வில்லை என ஐக்­கிய தேசிய  கட்சி கூறு­கி­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பில் எந்தக் காரணம் கொண்டும் நாடு துண்­டா­டப்­ப­டு­வ­தற்கு  இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில்  மக்கள் கருத்­துக்­களை  அறியும் குழுவின்  தலைவர் சட்­டத்­த­ரணி  லால்  விஜே­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

நீதி­மன்ற உத்­த­ர­வின்­படி பிரிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கை  மீண்டும்  இணைப்­பதே புதிய  அர­சி­ய­ல­மைப்பின் இலக்கு என எதிர்க்­கட்சித்  தலைவர் மஹிந்த  ராஜபக் ஷ  தொடர்ந்து கூறி­வ­ரு­கிறார்.

யார் என்ன கருத்துக்களைக் கூறினாலும் நாட்டிற்கு காலத்துக்கேற்ற  புதிய அரசியலமைப்பொன்று  அவசியமாகும்.  ஆனால்  அந்த அரசியலமைப்பு  சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைத்து இன மக்களும்  ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.  அது இந்த நாட்டில் நீண்ட காலமாக நிலவும் இனப்பிரச்சினைக்கும் நிறைவேற்று அதிகார முரண்பாடுகளுக்கும் தீர்வைக் கொண்டு வருவதாக அமைய வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.