மஹிந்­த-­ரணில் நாட்டை ஆள தகு­தி­யற்­ற­வர்கள்

அனுர குமார திஸா­நா­யக்க

0 618

தேசிய நிதி­யினை மோசடி செய்த அர­சி­யல்­வா­தி­களின் வாரி­சு­களும் நாட்டை சூறை­யாடுவர். இன்­றைய அர­சியல் நிலையில் முறை­யான அர­சியல் வர்க்­கத்தை உரு­வாக்­கு­வது கடி­ன­மா­ன­தாகும். மஹிந்த மற்றும் ரணில் ஆகியோர் நாட்டை இனியும் ஆள தகு­தி­யற்­ற­வர்கள் என்­பதை உறு­திப்­ப­டுத்த ஆதா­ரங்கள் ஏதும் தேவை­யில்லை. சிறந்த அர­சியல் தலை­வரை தெரிவு செய்யும் நட­வ­டிக்­கை­யினை அடுத்த மாதம் தொடக்கம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து முன்­னெ­டுப்போம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

அதிக இலாபம் ஈட்டும் வியா­பா­ர­மாக இன்­றைய அர­சியல் காணப்­ப­டு­கின்­றது. ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ராக ஊழல்­வா­தி­களால் செயற்­பட முடி­யாது. ஊழ­லற்ற அர­சியல் முறைமை ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்­டி­யதே எமது நோக்கம் என வலி­யு­றுத்­தினார்.

கொழும்பில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், முறை­யற்ற பொரு­ளா­தார முகா­மைத்­து­வத்­தி­னாலும், அர­சியல் போட்­டித்­தன்­மை­யாலும் நாளுக்கு நாள் பொரு­ளா­தாரம் வீழ்ச்­சி­ய­டைந்து வரு­கின்­றது. இவ்­வ­ரு­டத்தில் மாத்­திரம் 5.6 பில்­லியன் அரச கடன் மீள் செலுத்­தப்­பட வேண்டும். ஏற்­று­ம­தி­யினால் கிடைக்கப் பெறு­கின்ற வரு­மா­னத்தை விட இறக்­கு­ம­தியால் அதி­க­ள­வி­லான செல­வி­னங்கள் காணப்­ப­டு­கின்­றன. ஒரு வரு­டத்தில் மாத்­திரம் இறக்­கு­ம­திக்கு 20பில்­லியன் ஒதுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. ஏற்­று­ம­திக்கும் , இறக்­கு­ம­திக்கும் இடையில் காணப்­ப­டு­கின்ற இடை­வெ­ளியின் கார­ண­மாக தேசிய உற்­பத்­திகள் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளன.

கடந்த வரு­டத்தின் மூன்றாம் காலாண்டில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட அர­சியல் சூழ்ச்­சி­யினால் ஏற்­க­னவே வீழ்ச்­சி­ய­டைந்து காணப்­பட்ட பொரு­ளா­தாரம் மேலும் தீவி­ர­ம­டைந்­தது. ஆனால் இவ்­வி­டயம் தொடர்பில் ஜனா­தி­ப­திக்கோ, அவ­ரது தரப்­பி­ன­ருக்கோ எவ்­வித அக்­க­றையும் கிடை­யாது. ஏற்­பட்ட பொரு­ளா­தார வீழ்ச்­சியின் விளை­வு­களை நடுத்­தர மக்­களே அனு­ப­விக்க வேண்டும்.

அர­சியல் நெருக்­க­டியின் போது ஜன­நா­யகம் பற்றி பேசி­ய­வர்கள் இன்று ஜன­நா­யகம் என்ற சொல்­லையே மறந்து விட்­டார்கள். ஐக்­கிய தேசிய கட்­சியின் தற்­போ­தைய அர­சாங்கம் பாரிய முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தி­யிலேயே செயற்­ப­டு­கின்­றது. அமைச்­சு­களை பகிர்ந்து கொள்ளும் பொழுது ஐக்­கிய தேசிய கட்­சி­யினர் சிறு­பிள்ளை தன­மாக பகி­ரங்­க­மாக முரண்­பட்டுக் கொள்­கின்­றார்கள். அன்று ஜன­நா­யகம் பற்றி பேசிய பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆட்சி பொறுப்பை ஏற்­ற­வு­டனே அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணாக செயற்­பட ஆரம்­பித்து விட்டார்.

தேசிய அர­சாங்கம் ஒன்று காணப்­ப­டாத பட்­சத்தில் அமைச்­ச­ர­வையின் அமைச்­சர்­களின் எண்­ணிக்கை 30ஆக மட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்டும். என்று அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க இத்­தி­ருத்­தத்தை மறந்து விட்டார். அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கை­யினை 36ஆக அதி­க­ரிக்­கு­மாறு ஜனா­தி­ப­திக்கு அமைச்­சர்­களின் பெயர்­பட்­டி­யலை அனுப்பி வைத்தார். ஜனா­தி­பதி அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணாக செயற்­ப­டுவார் என்று பிர­தமர் அறிவார். ஆனால் தனது விட­யத்தில் தனக்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தற்கு அர­சி­ய­ல­மைப்பை மீற­மாட்டார். என்­பதை மறந்து விட்டார்.

இன்று நாட்டில் அனைத்து துறை­க­ளிலும் ஊழல் மோச­டி­களே முத­னிலை வகிக்­கின்­றது. ஊழ­லுக்கு எதி­ராக ஊழல்­வா­தி­களால் செயற்­பட முடி­யாது என்­ப­தற்கு எடுத்­துக்­காட்­டாக இரண்டு அர­சாங்­கத்தின் தலை­வர்­களும் காணப்­ப­டு­கின்­றார்கள். மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் இந்­நாட்டை இனி முறை­யாக ஊழ­லற்ற முறையில் நிர்­வ­கிக்க முடி­யாது. என்­பதை அவர்­களே பல விட­யங்­களில் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

மக்­களின் அடிப்­படை வாழ்வு இன்று மிகவும் அடி­மட்­டத்­திலே காணப்படுகின்றது. பொருளாதார பின்னடைவினாலும், முறையற்ற அரசாங்கத்தின் நிர்வாகத்தினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் அரசியல் கொள்கைகளே மேற்குலக நாடுகளில் காணப்படுகின்றது. அரசியல் தூய்மையின் காரணமாகவே வெளிநாட்டவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக உள்ளது. மக்களின் அபிப்பிராயத்தை முன்னிலைப்படுத்தும் அரசியல் நிலையினை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.