பெற்றோர் முன்னாலுள்ள பெரும் பொறுப்பு

0 762

இலங்கை முஸ்லிம் சமூகம் மிகவும் நெருக்­க­டி­யான ஒரு சூழ­லுக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளது. அண்­மையில் நடை­பெற்ற விரும்­பத்­த­காத சம்­ப­வங்­களே இதற்குக் கார­ண­மாகும்.

கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதி வாரத்­திலும் அதற்கு முன்­ன­ரான காலப்­ப­கு­தி­யிலும் நாட்டின் சில பாகங்­களில் புத்தர் சிலைகள் உடைத்துச் சேத­மாக்­கப்­பட்ட விட­யத்தில் முஸ்லிம் இளை­ஞர்கள் சிலர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டி­ருப்­பதே இதற்குக் கார­ண­மாகும். இதனைத் தொடர்ந்து முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் பெரும்­பான்மைச் சிங்­கள மக்கள் மத்­தி­யிலும் சல­ச­லப்பும் அச்ச நிலையும் தோற்றம் பெற்­றுள்­ளது.

இந்த சம்­ப­வத்தைப் பயன்­ப­டுத்தி சிங்­கள மக்கள் மத்­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­து­ரு­வாக்கம் வேக­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது. முஸ்­லிம்கள் மத்­தியில் தீவி­ர­வாத சக்­திகள் உரு­வாக்கம் பெற்­றுள்­ள­தா­கவும் சர்­வ­தேச தீவி­ர­வாத சக்­தி­க­ளுக்கும் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கும் தொடர்­பி­ருப்­ப­தா­கவும் கதைகள் பரப்­பப்­ப­டு­கின்­றன.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இதே பிர­சா­ரங்கள் கடந்த ஒரு தசாப்­தத்­துக்கும் மேலாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் இன்று அந்தப் பிர­சா­ரங்­களை உண்­மைப்­ப­டுத்தும் வகை­யி­லான சில நட­வ­டிக்­கை­களில் முஸ்லிம் இளை­ஞர்கள் ஈடு­பட்­டுள்­ள­மையே இந் நிலை தீவி­ர­ம­டையக் கார­ண­மாகும்.

அந்­த­வ­கையில் இலங்கை முஸ்லிம் சமூகம் மிகவும் தீர்க்­க­மான ஒரு கால கட்­டத்தில் உள்­ளது. நமது இளை­ஞர்கள் மத்­தியில் தீவி­ர­வாத சிந்­த­னையும் குறிப்­பாக பிற மதத்­த­வர்­க­ளையும் அவர்­க­ளது வணக்­கத்­த­லங்­க­ளையும் எதிர்­நிலை மனப்­பாங்கில் நோக்­கு­கின்ற போக்கும் ஆங்­காங்கே வளர்ந்து வரு­கி­றது. சர்­வ­தேச தீவி­ர­வாத அமைப்­பு­களின் பிர­சா­ரங்­க­ளினால் கவ­ரப்­பட்ட சில இளை­ஞர்கள் இன்று அவற்றை இந்த நாட்டில் பிர­யோ­கிக்க முனை­கின்­றனர் என்­ப­தையே சமீ­பத்­தைய சம்­ப­வங்கள் நிரூ­பிக்­கின்­றன.

இவ்­வா­றான தீவி­ர­வாத சிந்­த­னையின் பின்னால் செல்­கின்ற இளை­ஞர்கள் 20 முதல் 40 வய­துக்­கி­டைப்­பட்­ட­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்கள். துடிப்­பு­மிக்க இந்தப் பரு­வத்தில் இவர்கள் எத­னையும் செய்யத் துணி­கி­றார்கள். இத­னையே இந்த சக்­திகள் தமக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்­கின்­றன.

என­வேதான் இந்த விட­யத்தில் பெற்­றோரும் சமூ­கமும் மிகவும் அவ­தா­ன­மாக இருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தமது பிள்­ளை­களின் அன்­றாட நட­வ­டிக்­கை­களை அணு­வ­ணு­வாக கண்­கா­ணித்து நெறிப்­ப­டுத்த வேண்­டிய கட்­டாய நிலைக்கு இன்று சகல பெற்­றோரும் தள்­ளப்­பட்­டுள்­ளனர். தனது மகன் எங்கு போகிறான்? யாருடன் நேரம் செல­வ­ளிக்­கிறான்? அவ­னது நண்­பர்கள் யார்? அவ­னது சிந்­தனைப் போக்கு என்ன? அவ­னது பேச்­சுக்கள் செயற்­பா­டுகள் எவ்­வா­றுள்­ளன? அவ­னது சமூக வலைத்­தளப் பயன்­பாடு எவ்­வா­றுள்­ளது? மார்க்­கத்தில் அவ­னது கொள்கை நிலைப்­பாடு என்ன? என்­றெல்லாம் பெற்றோர் மிகவும் தீவி­ர­மாக விழிப்­புடன் செயற்­ப­டாத வரைக்கும் இளை­ஞர்­களை இவ்­வா­றான தீவிரப் போக்­கி­லி­ருந்து பாது­காக்க முடி­யாது போய்­விடும்.

மாவ­னெல்­லையில் நேற்று நடந்­தது நாளை வேறு பல பகு­தி­க­ளிலும் நடை­பெ­றலாம். அத­னுடன் தொடர்­பு­படும் இளைஞன் நமது வீட்டு, நமது குடும்பத்து பிள்ளையாகவும் இருக்கலாம். கைது செய்யப்பட்ட பின்னர் அழுது புலம்புவதை விட முன்கூட்டியே விழிப்புணர்வுடன் செயற்பட்டு அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாப்பதே புத்திசாலித்தனமானதாகும். இது விடயத்தில் பெற்றோரும் சமூகமும் விழிப்புடன் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.