கல்–எளிய முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரி விவகாரத்தில் சமரச முயற்சிகள்

0 92

கல்-­ எ­ளிய முஸ்லிம் மகளிர் அரபிக் கல்­லூரி தொடர்­பாக நில­வி­வரும் கருத்து முரண்­பா­டு­களை நீக்கி சுமூ­க­மான நிலையை ஏற்­ப­டுத்தும் நோக்கில் 2024 ஜூன் மாதம் கல்- எளிய பெரிய பள்­ளி­வாயல் நம்­பிக்­கை­யாளர் சபையால் கல்-­ எ­ளிய பெரிய பள்­ளி­வாயல் நம்­பிக்­கை­யாளர் சபை உறுப்­பி­னர்கள், நிரு­வாக சபை உறுப்­பி­னர்கள் மற்றும் ஊர் ஜமா­அத்­தினர் உள்­ள­டங்­க­லாக ஒரு சமா­தானக் குழு தெரி­வு­செய்­யப்­பட்­டது. அந்தக் குழு தனது அறிக்­கையை கல்-­எ­ளிய பெரிய பள்­ளி­வாயல் நிர்­வா­கத்­திற்கு அனுப்பி வைத்­துள்­ளது. அதன் விபரம் வரு­மாறு:-

சமா­தானக் குழு தனது முதல் அமர்வின் போது கல்­லூ­ரி­யி­லுள்ள பிர­தான பிரச்­சி­னை­களை அடை­யாளம் கண்­ட­தோடு, அவற்­றிற்கு தீர்­வு­காணும் முறை­மைகள் பற்­றியும் கலந்­து­ரை­யா­டி­யது. கல்­லூ­ரியின் சட்­ட­யாப்பின் பிர­காரம் முதலில் முகா­மைத்­துவ சபை­யொன்று தெரி­வு­செய்­யப்­பட வேண்டும். பின்னர் அவர்­க­ளுக்­கான பொதுக்­கூட்டம் நடை­பெற்று, அதன் போது தான் கல்­லூ­ரிக்­கான நிர்­வாக உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட வேண்டும். ஆனால், கடந்த காலங்­களில் இந்த ஒழுங்கு பின்­பற்­றப்­ப­டாமை தான் தற்­போ­தைய ஒழுங்­கீ­னங்­க­ளுக்­கான பிர­தான கார­ண­மாகும். இவற்­றினைச் சீர்­செய்­வ­தற்கே முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும் என்று சமா­தானக் குழு முடி­வு­செய்­தது.

ஆனால், கல்­லூ­ரியின் தற்­போ­தைய நிர்­வா­கத்­திற்கு எதி­ராக நீதி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்டு, அந்த வழக்கு தொடர்ந்து கொண்­டி­ருக்கும் சூழ்­நி­லையில் தற்­போ­தைய நிர்­வாக உறுப்­பி­னர்­க­ளுக்கு முகா­மைத்­துவ சபை உறுப்­பி­னர்­களைத் தெரி­வு­செய்­வ­தற்கோ அல்­லது பொதுக் கூட்டம் நடாத்­து­வ­தற்கோ வழக்கின் போது தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். எனவே, இந்த சிக்­க­லான சூழ்­நி­லை­யி­லி­ருந்து விடு­பட்டு சுமு­க­மான சூழ்­நி­லையை தோற்­று­வித்து அல்­லாஹ்வின் அருளால் கல்­லூ­ரியின் ஒளி­ம­ய­மான எதிர்­கா­லத்தைத் தோற்­று­விக்கும் நோக்கில் சமா­தானக் குழு­வினர் தமக்­கி­டை­யேயும், இதில் சம்­பந்­தப்­பட்­டுள்ள பல தரப்­பி­ன­ரு­டனும் பௌதிக ரீதி­யா­கவும் ஒன்லைன் ஊடா­கவும் பல கூட்­டங்­களை நடாத்­தி­யுள்­ளனர்.

அந்த கூட்­டங்­களின் சுருக்கம் வரு­மாறு:
2024 ஜூன் 08 இல் சமா­தானக் குழு­வினர் தமது பணி­களை ஆரம்­பித்­தனர். முதலில் கல்­லூரி நிர்­வா­கத்­தி­னரை அவர்கள் சந்­தித்­தனர். இந்தக் கூட்­டத்தின் குறிக்­கோள்­க­ளாக தக­வல்­களைப் பெற்றுக் கொள்ளல், சமா­தானக் குழுவின் நோக்­கத்தைத் தெளி­வு­ப­டுத்தல், கல்­லூ­ரியில் உள்­ள­தாகக் கூறப்­படும் பிரச்­சி­னைகள், குறிப்­பாக மாண­வி­களின் இடை­வி­லகல் அதி­க­ரித்­துள்­ளமை என்­பன அமைந்­தி­ருந்­தன. நீதி­மன்­றத்தில் வழக்கு இருந்து வரும் இக்­கட்­டத்தில், சமா­தானமான முறையில் இப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு சமா­தானக் குழுவின் ஒத்­து­ழைப்பு தேவையா என்று வின­வப்­பட்­ட­தற்கு, அங்கு சமூகம் தந்­தி­ருந்த நிர்­வாக உறுப்­பி­னர்கள் அனை­வரும் அது தேவை என ஏற்றுக் கொண்­டனர்.

அதன் பின்னர் சமா­தானக் குழு கல்-­எ­ளிய முஸ்லிம் மகளிர் அரபிக் கல்­லூரி பழைய மாண­வி­களின் குழு­வொன்றை சந்­தித்­தது. அடுத்­த­தாக கல்­லூ­ரியின் செய­லா­ள­ராக நீண்­ட­கா­ல­மாக செயல்­பட்ட அஷ்ஷெய்க் மிப்லி அவர்­களை குழு சந்­தித்து பல தக­வல்­களைப் பெற்­றது. கல்-­எ­ளிய முஸ்லிம் மகளிர் அரபிக் கல்­லூ­ரியில் தற்­போது கல்வி பயிலும் மாண­வி­ய­ரது பெற்­றோர்­களின் குழு­வொன்­றையும் சமா­தானக் குழு அடுத்த கட்­ட­மாக சந்­தித்­தது.பின்னர் முறையே கல்­லூ­ரியில் நீண்ட கால­மாக பொரு­ளா­ள­ராக இருந்து வரும் அல்ஹாஜ் கலீல் அவர்­க­ளையும் முன்னாள் பொது முகா­மை­யா­ள­ரையும், முன்னர் இயங்­கிய சமா­தானக் குழு­வொன்றின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரையும் கல்­லூரி விட­யத்தில் கரி­ச­னை­யுள்ள ஷரீஆ, நிர்­வாகம் மற்றும் சட்டம் போன்ற பல்­துறை சார் நிபு­ணர்கள் மற்றும் பிர­மு­கர்­க­க­ளையும் சமா­தானக் குழு சந்­தித்து பல்­வேறு தக­வல்­களைக் கேட்­ட­றிந்­தது.

அடுத்த கட்­ட­மாக மீண்டும் கல்­லூரி நிர்­வாக உறுப்­பி­னர்­களைச் சமா­தானக் குழு சந்­தித்­தது. இந்தக் கூட்­டத்தின் போது இது­வ­ரைக்­கு­மான சமா­தான முயற்­சி­களின் முன்­னேற்றம், பல தரப்­பாலும் முன்­வைக்­கப்­பட்ட முன்­மொ­ழி­வுகள் பற்றி அவர்­க­ளுக்கு தெளி­வு­ப­டு­தப்­பட்­டது. கல்­லூ­ரிக்­கான முகா­மைத்­துவ சபை­யொன்று தற்­போது இல்லை என்­பதே பிரச்­சி­னை­களின் அடிப்­ப­டை­யாகும். அதனைத் தீர்க்­கு­மி­டத்து இன்ஷா அல்லாஹ் அனைத்து பிரச்­சி­னை­களும் தீரும் ஏன்­றாலும், தற்­போ­துள்ள நிர்­வா­கத்­தி­ன­ருக்கு பொதுக் கூட்­டத்தை கூட்ட முடி­யா­தென்ற நீதி­மன்ற தடை­யுத்­த­ரவு இருப்­ப­த­னாலும் தடை­யுத்­த­ரவு நீங்­கி­னாலும் தற்­போ­துள்ள நிர்­வாகம் முகா­மைத்­துவ சபையைத் தெரிவு செய்­யு­மி­டத்து, அதனை கல்­லூ­ரி­யோடு சம்­பந்­தப்­பட்ட ஏனைய தரப்­பினர் ஏற்றுக் கொள்­ளாத நிலை காணப்­ப­டு­வ­தாலும், முகா­மைத்­துவ உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்­வது, அவர்­க­ளுக்­கான பொதுக் கூட்­டத்தை நடாத்­து­வது போன்ற ஏற்­பா­டு­களை சமா­தானக் குழு செய்­யு­மி­டத்து, அனைத்து தரப்­பி­னரும் அதனை ஏற்றுக் கொள்வர் என்ற நிலை உள்­ளது.

இவ்­வி­ட­யத்தை தெளி­வு­ப­டுத்தி, இதற்­கான இணக்­கப்­பாட்டை தெரி­வுக்கும் படி சமா­தானக் குழு தற்­போ­தைய கல்­லூரி நிர்­வா­கத்­தி­ன­ரிடம் வேண்டிக் கொண்­டது. அது தொடர்­பாக தமது சட்­டத்­த­ர­ணி­யிடம் ஆலோ­சனை பெற்று, பதில் தரு­வ­தாக கல்­லூரி நிர்­வாகம் கூறி­யது.

கல்­லூரி நிர்­வா­கத்தின் நிலைப்­பாடு
அதன் பின்னர் சமா­தானக் குழுவின் முன்­மொ­ழி­விற்­கான பதிலை மின்­னஞ்சல் மூலம் கல்­லூரி நிர்­வாகம் தெரி­வித்­தது.அதா­வது கல்­லூரி நிர்­வாகம் சார்­பான சட்­டத்­த­ர­ணியின் கருத்­திற்­க­மைய, சமா­தானக் குழு­வினால் முகா­மைத்­துவ உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­படல் யாப்­பிற்கு முர­ணாகும். எனவே, அவர்கள் தற்­போ­துள்ள நிர்­வாக உறுப்­பி­னர்­க­ளா­லேயே தெரி­வு­செய்­யப்­பட வேண்டும். சமா­தானக் குழுவின் முன்­மொ­ழி­விற்­க­மைய இப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்க முடி­யு­மாக இருந்­தாலும். அது எதிர்­கா­லத்தில் சட்ட ரீதி­யாக சவா­லுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டலாம் என்ற கார­ணத்­தினால், சமா­தானக் குழுவின் முன்­மொ­ழிவை ஏற்றுக் கொள்ள முடி­யாத நிலையில் உள்­ள­தா­கவும் கல்­லூரி நிர்­வாகம் மேலும் அறி­வித்­தது.

பழைய மாண­வி­க­ளது நிலைப்­பாடு
கல்­லூரி நிர்­வா­கத்தின் இந்த முடிவை பழைய மாண­விகள், பெற்றோர் முன்­னி­லையில் அவர்­க­ளது சட்­டத்­த­ர­ணி­யிடம் சமா­தானக் குழு கூறிய போது, முகா­மைத்­துவ சபை உறுப்­பி­னர்­களின் பெயர்ப் பட்­டி­யலை சமா­தானக் குழு தயா­ரித்து தற்­போ­துள்ள நிர்­வா­கத்­திற்கு வழங்கும் பட்­சத்தில், அப்­பட்­டி­யலில் உள்­ள­வர்­களை நடப்­பி­லுள்ள நிர்­வாக உறுப்­பி­னர்கள் அங்­கீ­க­ரித்து நிய­மித்தால் எவ்­வி­த­மான சட்டச் சிக்­கல்­களும் வர முடி­யாது என பழைய மாண­விகள் சார்­பான சட்­டத்­த­ரணி கூறினார்.

சமா­தானக் குழுவின் 3 ஆலோ­ச­னைகள்
பல்­வே­று­பட்ட அபிப்­பி­ரா­யங்­களைக் கேட்­ட­றிந்­த­துடன் பல சுற்றுப் பேச்­சு­வார்­தை­களை நடாத்­திய சமா­தானக் குழு, கல்­லூ­ரிக்­கான முகா­மைத்­துவ சபையை
சமா­தானக் குழு மாத்­திரம் அல்­லது,
சமா­தானக் குழு, கல்­லூரி நிர்­வாக உறுப்­பி­னர்கள், பழைய மாண­விகள், பெற்­றோ­ரது பிர­தி­நி­திகள் அல்­லது
சமா­தானக் குழு, கல்­லூரி நிர்­வாக உறுப்­பி­னர்கள், பழைய மாண­விகள், பெற்­றோ­ரது பிர­தி­நி­திகள், நாட்­டி­லுள்ள புத்­தி­ஜீ­விகள் சிலர் அனை­வரும் இணைந்து தெரிவு செய்­வது பொருத்­த­மாகும்
என மூன்று முறை­மை­களில் ஒன்றைக் கையா­ளலாம் என பிரே­ரித்­தது.

மேற்­கூ­றப்­பட்ட இந்தத் தீர்வைக் கையாள்­வதன் மூலம், இதனை எதிர்­கா­லத்தில் சட்ட ரீதி­யாக சவா­லுக்கு உள்­ளா­கா­மலும், சமா­தா­ன­மா­கவும் இப்­பி­ரச்­சி­னையைத் தீர்த்­துக்­கொள்ள முடி­யு­மாக இருப்­ப­தனால், இவ்­வி­ட­யத்தை அடுத்த கட்­டத்­திற்கு எடுத்துச் செல்­வ­தற்கு இணக்கம் தெரி­வித்து ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு 2024 நவம்பர் 09 ஆம் திகதி மீண்டும் இறு­தி­யாக கல்­லூரி நிர்­வாகத்­தி­ன­ரிடம், மின்­னஞ்சல் மூலம் சமா­தானக் குழு தெரி­வித்­தது. அதில், கல்­லூரி நிர்­வாகம் சார்­பாக வாதிடும் சட்­டத்­த­ர­ணி­யிடம் இது தொடர்­பாக விளக்­கு­வ­தற்கும் சமா­தா­னக்­குழு தயா­ராக உள்­ளதால், அவ­ரையும் கல்­லூரி நிர்­வா­கத்­தி­ன­ரையும் சந்­திப்­ப­தற்கு நேரம் தரு­மாறு வேண்டிக் கொள்­ளப்­பட்­டது. மேலும், இம்­மின்­னஞ்­சலில், பெற்றோர், பழைய மாண­விகள் கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­பட்ட, முகா­மைத்­துவ சபையைத் தெரிவு செய்யும் 3 வகை­யான முறை­மை­களும் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தது.

பின்னர் சமா­தானக் குழு அனுப்­பிய அடுத்த கட்ட முன்­மொ­ழி­வுக்­கான பதில் கிடைக்­கா­மையால், கல்­லூரி நிர்­வா­கத்தின் பதி­லுக்­காக சமா­தானக் குழு காத்­தி­ருப்­ப­தாக மின்­னஞ்சல் மூலம் மீண்டும் நினை­வூட்­டப்­பட்­ட­தோடு அது கடி­த­மாக பதி­வு­செய்­யப்­பட்ட தபால் மூலம் அனுப்பி வைக்­கப்­பட்­டது. சமா­தானக் குழு இறு­தி­யாக அனுப்பி வைத்த அடுத்த கட்ட நகர்வுக்கான முன்மொழிவுக்குரிய பதில் இன்னும் கிடைக்கவில்லை.
என்றாலும், இப்பிரச்சினையை சமாதானமான முறையில் தீர்ப்பதற்கு இது தவிர்ந்த வேறு சிறந்ததொரு முன்மொழிவு இருப்பதாக சமாதானக் குழுவுக்குத் தெரியவில்லை. கல்லூரி நிர்வாகத்தின் சாதகமான பதில் கிடைக்குமிடத்து தனது பணியை தொடருவதற்கு சமாதானக் குழு தயாராக இருக்கிறது.

இந்த நாட்டில் இஸ்­லாத்தை ஆழ­மாகக் கற்ற இஸ்­லா­மிய விழு­மி­யங்­களால் போஷிக்­கப்­பட்ட ஆலி­மாக்­களை உரு­வாக்க வேண்டும் என்ற புனி­த­மான இலட்­சி­யத்­துடன் சமூக நலன் விரும்­பி­க­ளாலும் தன­வந்­தர்­க­ளாலும் உரு­வாக்­கப்­பட்ட இந்தக் கல்­லூரி, அல்­லாஹ்வின் அருளால் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றும் அதற்­காக முஸ்லிம் சமூ­கத்தின் புத்தி ஜீவி­களும் அதி­காரம் மிக்­க­வர்­களும் தம்­மா­லான பங்­க­ளிப்பை அமா­னி­த­மாகக் கருதி மேற்­கொள்ள வேண்டும் என்றும் சமா­தானக் குழு எதிர்­பார்க்­கி­றது. இந்த வக்பு சொத்தின் ஒளி­ம­ய­மான எதிர்­கா­லத்­திற்­காக வல்ல அல்லாஹ்வை நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.

இவ்வண்ணம்
சமாதானக் குழு
01.07.2025

  • Vidivelli

Leave A Reply

Your email address will not be published.