இனப்படுகொலையை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்?

0 79

வி.எஸ். முஹம்மத் அமீன்

ஈரான் அணு ஆயுதத் தயா­ரிப்பில் ஈடு­பட்­டுள்­ளதாக் கூறி இஸ்ரேல் ‘ஆப­ரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஜூன் 13 ஆம் திகதி ஈரானின் தெஹ்ரான், நடான்ஸ், இஸ்­பஹான் உள்­ளிட்ட பல இரா­ணுவ, அணு­சக்தித் தளங்­களைக் குறி­வைத்துத் தாக்­குதல் நடத்­தி­யது. இதற்குப் பதி­லடி தரும் வகையில் ஈரான் ‘ட்ரூ ப்ராமிஸ் 3’ என்ற பெயரில் இஸ்­ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்­ளிட்ட நக­ரங்­களைக் குறி­வைத்து பாலிஸ்டிக் ஏவு­க­ணை­களை வீசி இஸ்­ரேலின் ‘அயர்ன் டோம்’ பூதா­க­ரத்தைத் தகர்த்­தெ­றிந்­தது.

ஈரா­னுக்கு ஆத­ர­வாக ரஷ்யா, வட­கொ­ரியா உள்­ளிட்ட நாடுகள் கள­மி­றங்கத் தயா­ரென அறி­வித்த நிலையில் இஸ்­லா­மிய நாடுகள் கூட்­ட­மைப்பும் இத்­தாக்­கு­தலைக் கண்­டித்து வந்­தன. அமெ­ரிக்கா இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வாக ஈரானின் போர்டோ, நடான், இஸ்­பஹான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்­குதல் நடத்­தி­யது. இதற்குப் பதி­லடி கொடுக்கும் வகையில் கத்­தாரில் உள்ள அமெ­ரிக்க இரா­ணுவத் தளங்­களைக் குறி­வைத்து ஈரான் ஏவு­கணைத் தாக்­கு­தலை நடத்­தி­யது.

மத்­திய கிழக்கில் இதனால் பெரும் போர் வெடிக்­கக்­கூடும் என்ற நிலையில் அமெ­ரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடு­களும் போர் நிறுத்­தத்தை மேற்­கொள்­வ­தாக தமது வலை­தளப் பக்­கத்தில் அறி­வித்­தார். பிற நாடு­களின் உள் விவ­கா­ரங்­களில் நுழைந்து உலக அமை­தியைச் சீர்­கு­லைத்து வரும் அமெ­ரிக்­காவும், எந்த அற­நெ­றிக்கும் கட்­டுப்­ப­டாமல் யுத்­த­வெறி கொண்டு நிற்கும் இஸ்­ரேலும் உலக அமை­தியை வேண்டி நிற்­ப­தாகச் சொல்­வது கேலிக்­கூத்­தாகும்.

2023 ஒக்­டோபர் 7 இலி­ருந்து இன்று வரை பலஸ்­தீனின் மீது இன­வெறித் தாக்­கு­தலை நடத்தி 17 ஆயிரம் குழந்­தைகள் உட்­பட 70 ஆயிரம் பேரைக் கொன்­ற­ழித்து எவ்­வித உத­வியும் கிடைக்­க­வி­டாமல் பட்­டி­னியால் பிஞ்சுக் குழந்­தை­களைக் கொன்று குவித்து வரு­கி­றது இஸ்ரேல். யெமன், லெபனான், சிரியா உள்­ளிட்ட நாடு­களில் இக்­கா­ல­கட்­டத்தில் இஸ்ரேல் 42,000 தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளது. பலஸ்­தீனில் மட்டும் 25,000 தாக்­கு­தல்­களை நிகழ்த்­தி­யுள்­ள­தாக ஆயு­த­மோதல், இருப்­பிட நிகழ்வுத் தரவு(ACLED) தெரி­விக்­கி­றது.

ஐநாவின் போர் நிறுத்த வாக்­கெ­டுப்பை வீட்டோ அதி­கா­ரத்தால் தடுத்து நிறுத்தி இஸ்­ரே­லுக்கு ஆயு­தங்­களை வழங்கி பலஸ்­தீனை அழித்­தொ­ழிக்கும் அமெ­ரிக்கா இஸ்ரேல் மீதான ஈரானின் இந்தத் தாக்­கு­த­லின்­போது உலக அமை­தியைப் பற்றிப் பேசு­வது அமெ­ரிக்­காவின் இரட்டை நிலையைக் காட்­டு­கி­றது. இந்­தியா போன்ற நாடுகள் பலஸ்­தீன, ஈரான் விவ­கா­ரத்தில் அமை­தியைக் கடைப்­பி­டிக்­காமல் அறத்தின் பக்கம் நின்று உரத்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது.

இஸ்ரேல் பலஸ்தீன் மீது நிகழ்த்திவரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த வேண்டும். சுதந்திர பலஸ்தீன் உருவாக வேண்டும். அதுவே உலக அமைதிக்கான உண்மையான அடையாளமாக இருக்கும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.