மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட 13 நாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும்போது பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறை அமுல்

0 47

(எம்.ஆர்.எம்.வசீம்)
சுய­மான வழியில் தொழிற்­சாலை மற்றும் நிறு­வன ரீதி­யான தொழில்­க­ளுக்­காக வெளி­நாடு செல்­லும்­போது குறித்த தொழி­லா­ளர்­களின் தொழில் ஒப்­பந்தம், குறித்த நாட்டின் இலங்கை தூதுவர் காரி­யா­லயம் ஊடாக உறு­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்கை கடந்த முதலாம் திகதி முதல் அமு­லுக்கு வரு­வ­தாக இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது.

குறித்த சட்டம் கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதி முதல் செயற்­ப­டுத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­த­போதும் அது ஜூலை 1ஆம் திக­தி­வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

புதிய திருத்­தங்­க­ளுக்கு அமை­வாக, சவூதி அரே­பியா, குவைட், பஹ்ரைன், கட்டார், ஐக்­கிய அரபு இராச்சியம், ஓமான், இஸ்ரேல், ஜோர்தான், லெபனான், மாலை­தீவு, மலே­சியா, சிங்­கப்பூர் மற்றும் கொரியா ஆகிய 13 நாடு­களின் தொழிற்­சாலை மற்றும் நிறு­வன ரீதி­யி­லான தொழில் பிரி­வு­க­ளுக்கு சுய­மாக செல்­லும்­போது, பணி­ய­கத்தின் பதிவை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக, தங்­க­ளது சேவை ஒப்­பந்­தத்தை அந்த நாடு­களில் அமைந்­துள்ள இலங்கை தூதுவர் அலு­வ­ல­கத்தில் அமைந்­துள்ள தொழில் மற்றும் நல­நோம்­புகள் பிரிவில் உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும் என்­ப­துடன் அதற்­கான கட்­ட­ண­மாக 60 அமெ­ரிக்க டொலர்­களை செலுத்த வேண்டும்.

தொழில்­முறை பிரிவில் உள்ள வேலை­க­ளுக்கு, புதிய சேவை ஒப்­பந்­தத்­துடன் சுய­வ­ழியில் வெளி­நா­டு­க­ளுக்கு செல்லும் தொழில் வல்­லு­நர்கள், பணி­ய­கத்தின் பதிவை பெற்­றுக்­கொள்­ளும்­போது, அவர்­களின் தொழில் தன்மை குறிப்­பி­டப்­பட்ட வெளி­நாட்டு கட­வுச்­சீட்டு அல்­லது குறித்த தொழிலின் தொழில்­மு­றைத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்த முடி­யு­மான ஆவ­ணங்­களைச் சமர்ப்­பிக்க முடி­யு­மாக இருந்தால், தொழில் ஒப்­பந்­தத்தை இலங்கை தூதுவர் காரி­யா­ல­யத்தில் உறு­திப்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மில்லை.

கடந்த காலங்­களில் ஆள் கடத்தல் வியா­பாரம் கார­ண­மாக இலங்கை தொழி­லா­ளர்கள் வெளி­நா­டு­களில் பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு ஆளா­கி­ய­துடன் அந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வாக, இலங்கை தொழி­லா­ளர்கள் பாது­காப்­பாக வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்புவதை நோக்காகக்கொண்டு இந்த தீர்மானத்துக்கு பணியம் வந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.