போரா மாநாட்டை வீடியோ எடுத்த சின்ன சஹ்ரான் கைது

குற்றங்கள் எதுவும் வெளிப்படாததால் விடுவிப்பு

0 19

(எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களில், பயங்­க­ர­வா­திகள் சத்­திய பிர­மாணம் செய்யும் வீடியோ காட்­சி­களை ஐ.எஸ். அமைப்­பி­ன­ருக்கு அனுப்பி உரிமை கோரச் செய்­த­தாக கூறப்­படும் சம்­ப­வத்தை மையப்­ப­டுத்தி கைது செய்­யப்­பட்டு 3 ஆண்­டுகள் வரையில் தடுப்பில் இருந்த பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்ட சின்ன சஹ்ரான் (பொடி சஹ்ரான்) எனும் பெயரால் குற்றப் புல­ன­ாய்வுத் திணைக்­கள அதி­கா­ரி­களால் அறி­யப்­படும் பஸ்லூர் ரஹ்மான் மொஹமட் சஹ்ரான் மீண்டும் கடந்­த­வாரம் கைது செய்­யப்­பட்டார்.

போரா பள்­ளி­வாசல் மற்றும் ரயில் நிலை­யத்தை அவர் புகைப்­படம் எடுத்­தமை சந்­தே­கத்­துக்கு இட­மா­னது எனும் குற்­றச்­சாட்டில் பம்­ப­ல­பிட்­டிய பொலி­ஸாரால் கடந்த ஜூன் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்­யப்­பட்டார்.

இத­னை­ய­டுத்து இந்த விடயம் தொடர்பில் பம்­ப­ல­பிட்­டிய பொலிஸார் முன்­னெ­டுத்த ஆரம்­ப­கட்ட விசா­ர­ணையின் பின்னர் சந்­தேக நப­ரான சஹ்ரான் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக பதில் பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ர­வுக்கு அமைய பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­விடம் ஒப்­படைக்­கப்பட்­டுள்ளார்.

குறிப்­பாக ஏதேனும் அனர்த்தம் ஏற்­ப­டுத்த இவ்­வாறு வீடியோ படம் எடுத்­தாரா எனும் நோக்கில் இதன்­போது விசா­ரணை செய்­யப்­பட்­டுள்­ளது.

தான் போரா பள்­ளி­வா­சலில் ஏற்­றப்­பட்­டி­ருந்த போரா கொடியை இதற்கு முன்னர் கண்­டி­ருக்­க­வில்லை எனவும் அத­னா­லேயே வீடியோ படம் எடுத்­த­தா­கவும் இதன்­போது சந்­தேக நபர் தெரி­வித்­த­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.

எவ்­வா­றா­யினும் சாதா­ரண சட்­டத்தின் கீழ் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசா­ரித்த பொலிஸார் கடந்த திங்­க­ளன்று (ஜூன்30) சஹ்­ரானை கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்து, எந்த குற்றம் தொடர்­பிலும் தக­வல்கள் வெளிப்­ப­ட­வில்லை என தெரி­வித்து அவரை விடு­விக்க கோரினர். அதன்­ப­டியே அவர் விடு­விக்­கப்பட்­டுள்ளார்.

போரா முஸ்­லிம்கள் வரு­டாந்தம் முஹர்ரம் புத்­தாண்­டினை மைய­ப்­படுத்தி நடாத்தும் மாநாடு கடந்த ஜூன் 27ஆம் திகதி ஆரம்­ப­மா­கி­யது. இது நாளை மறு­தினம் 5ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. இந்த நிகழ்வில் சுமார் 15,000 போரா சமூக பிர­தி­நி­திகள் கலந்­து­கொள்­வ­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இதனால் இதற்­கான பாது­காப்பு ஏற்­பா­டு­களும் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே மேற்­படி சம்­பவம் பதி­வா­கி­யுள்­ளது.

விசா­ர­ணை­யா­ளர்­களால் பொடி சஹ்ரான் என அறி­யப்­படும் பஸ்லூர் ரஹ்மான் மொஹமட் சஹ்ரான் என்ற இவர், கடந்த 2019 ஏப்ரல் 24 ஆம் திகதி மாத்­தளை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு பின்னர் சி.ஐ.டி.யின­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்தார். பின்னர் தடுப்புக் காவலில் விசா­ரிக்­கப்­பட்ட அவர், விளக்­க­ம­றி­ய­லிலும் இருந்த நிலையில் 2023 மார்ச் மாதம் மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் ஊடாக பிணை பெற்றார்.

பயங்­கர­வாத கும்­பலின் சத்­திய பிர­மாண வீடி­யோவை ஐ.எஸ். அமைப்­புக்கு அனுப்பி உரிமை கோரச் செய்­தமை, சொனிக் சொனிக் எனும் அரச உளவுச் சேவை அதி­கா­ரி­யோடு நெருங்­கிய தொடர்புகளை முன்னெடுத்து அவரின் ஆலோசனைக்கு அமைய சில நடவடிக்கைகளில் ஈடுபட்டமை போன்ற‌ன இவர் குறித்த விசாரணைகளில் வெளிப்ப‌டுத்தப்பட்டிருந்தன. இது குறித்து விசாரணைகள் தொடரும் நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.