இஸ்ரேலிய துருப்புகளின் பல்வேறு தாக்குதல்களில் 5 வாரங்களில் உணவுப் பொதிகளை பெற காத்திருந்த 600 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

0 23

காஸாவில் கடந்த ஐந்து வாரங்­களில் இஸ்­ரே­லிய துருப்­பினர் நடத்­தி­வரும் கண்­மூ­டித்­த­ன­மான தாக்­கு­தல்­களில் நிவா­ரன உணவுப் பொதி­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக காத்­தி­ருந்த 600 க்கும் அதி­க­மான அப்­பாவி பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

குறிப்­பாக உதவி தேடு­ப­வர்­க­ளையும், கூடா­ரங்­களில் தஞ்சம் புகுந்த மக்­க­ளையும் குறி­வைத்து இஸ்­ரே­லியப் படைகள் காஸா முழு­வதும் பல்­வேறு தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.

அமெ­ரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆத­ரவு பெற்ற காஸா மனி­தா­பி­மான நிறு­வ­னத்­தினால் காஸா பகு­தி­களில் நிவா­ரன உணவுப் பொதிகள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. இவ்­வாறு வழங்­கப்­படும் உணவுப் பொதி­களை பெற வரும் மக்­க­ளையே குறி­வைத்து இஸ்ரேல் மூர்க்­கத்­த­ன­மாக படு­கொலை செய்து வரு­கின்­றது.

இத­னி­டையே, மருத்­து­வ­ம­னைகள் மீதும் பாட­சா­லைகள் மீதும் இஸ்­ரேலின் தாக்­கு­தல்­களும் தொடர்­கின்­றன. வடக்கு காஸாவில் உள்ள மிகப்­பெ­ரிய வைத்­தி­ய­சா­லை­யான அஷ்­ஷிஃ­பாவை இஸ்­ரே­லிய படைகள் முற்­றுகை­யிட்­டுள்­ள­மையால் அங்கு எரி­பொருள் தீர்ந்­துள்­ளது. இதனால், அங்கு சிகிச்சை பெற்­று­வரும் நூற்­றுக்­க­ணக்­கான நோயா­ளிகள் மர­ணத்தை எதிர்­கொள்­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இத­னி­டையே, நேற்று முன்­தினம் மேற்குக் கரை மற்றும் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பு பகு­தி­களில் இஸ்ரேல் படை­யினர் முற்­று­கை­யிட்டு திடீர் சோதனை நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளனர். இந்த சுற்­றி­வளைப்­பு­களில் நூற்­றுக்­க­ணக்­கான பலஸ்­தீ­னர்­களை கைது செய்­துள்­ளது.

கடந்த 2023 ஒக்­டோபர் மாதம் காஸா மீது இஸ்ரேல் தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­த­தி­லி­ருந்து நேற்­று­முன்­தி­னம்­வரை 57,012 கொல்­லப்­பட்­ட­தா­கவும், 134,592 பேர் காய­ம­டைந்­த­தா­கவும் காசா சுகா­தார அமைச்சு தெரிவித்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.