பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 8 மாதங்கள் சிறையில் வாடும் மாவனெல்லை சுஹைல்

0 30

எப்.அய்னா

அது கடந்த 2024 ஒக்­டோபர் மாதம். அநுர குமார திஸா­நா­யக்க ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்று சில நாட்­களில் பொத்­துவில், அறு­கம்பே பகுதி உள்­ளிட்ட இஸ்­ரே­லி­யர்கள் அதிகம் நட­மாடும் பகு­தி­களில் அவர்­க­ளையும் அவர்கள் சார் ஸ்தலங்­க­ளையும் இலக்கு வைத்து ஒருங்­க­மைக்­கப்­ப­டாத தாக்­கு­தல்கள் நடாத்த திட்­ட­மிட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தக­வல்­களை மையப்­ப­டுத்­திய விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

அப்­போது வெறும் சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் தெஹி­வளை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட 21 வய­து­டைய இளைஞன் ஒருவன் இது­வரை பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் விளக்­க­ம­றி­யலில் இருந்து வரு­கின்றார். அப்­போது (2024 ஒக்­டோபர்) இந்த இளைஞன் கைது செய்­யப்­பட்ட மூன்­றா­வது நபர் என கூற‌ப்­பட்­டது. ஆனால் இவ­ரது கைது பிரத்­தி­யே­க­மா­னது என்­பது தற்­போ­துள்ள தக­வல்கள் ஊடாக தெளி­வா­கி­றது.

தெஹி­வ­ளையில் உள்ள இஸ்­ரே­லிய கன்­சி­யூலர் அலு­வ­லகம் அருகே சந்­தே­கத்­துக்கு இட­மான முறையில் நட­மா­டி­யவர் என கூறி, 21 வய­தான மொஹம்மட் சுஹைல் எனும் இளைஞன் மாவ­னெல்லை, கிரிந்­தெ­னிய பகு­தியை சேர்ந்­தவர். அவ­ரது தொலை­பேசி மற்றும் டிஜிட்டல் உப­க­ரண பதிவுத் தக­வல்­களை வைத்து அவ­ரி­டமும் மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தாக அப்­போது கூறப்­பட்­டது.

உண்­மையில் இந்த விவ­கா­ரத்தில் நடந்­துள்ள விட­யங்கள் தொடர்பில் தற்­போது பல்­வேறு தக­வல்கள் வெளிப்­பட்­டுள்­ளன. மனித உரி­மைகள் ஆர்­வ­ல­ரான முஹீத் ஜீரான், குறித்த இளை­ஞனின் உற­வினர் ஒரு­வ­ருடன் சந்­திப்­பொன்­றினை நடாத்தி தக­வல்­களை சமூக வலைத்­த­ளங்­களில் பதிந்த நிலை­யி­லேயே இது குறித்து முழு சமூ­கமும் பேச ஆரம்­பித்­தது.

குறிப்­பாக தற்­போது இந்த விவ­கா­ரத்தில் சமூக நீதிக்­கான சட்­டத்­த­ர­ணிகள் அமைப்பு எனும் இள‌ம் சட்­டத்­த­ர­ணி­களை கொண்ட ஒரு குழுவும் முன்­னி­லை­யா­கி­யுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

கடந்த 2024 ஒக்­டோபர் 23 ஆம் திகதி பிற்­பகல் 2.30 மணிக்கும் 3.00 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் தெஹி­வளை, பெயார் லைன் வீதி அருகே நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் கட்­டிடம் ஒன்றின் அருகே (இஸ்­ரே­லிய Chabad House இன் அருகே வைத்து) மொஹம்மட் சுஹைல் எனும் இந்த 21 வயது இளைஞன் கைது­செய்­யப்­பட்­டுள்ளார். கைது செய்­யப்­படும் போது அவ­ரிடம் தேசிய அடை­யாள அட்டை இருக்­க­வில்லை என கூறப்­ப‌­டு­கின்­றது. ஆனால் அப்­போது உட­ன­டி­யாக கைத்­தொ­லை­பே­சியில் உள்ள தேசிய அடை­யாள அட்­டையின் பிரதி பொலி­ஸா­ருக்கு காண்­பிக்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது.

தெஹி­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அனு­ராத ஹேரத் தலை­மை­யி­லான குழு அவரைக் கைது செய்­துள்­ளது.

எவ்­வா­றா­யினும் பின்னர் மறு நாள் அதா­வது 2024 ஒக்­டோபர் 24 ஆம் திகதி முற்­பகல் சுஹைல், கல்­கிஸ்ஸை நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் படுத்­தப்­பட்­டுள்ளார். அதன்­போது அவரை விடு­வித்து நீதி­மன்ற‌ம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

உண்­மையில் தேசிய அடை­யாள அட்டை ஒன்­றினை கைவசம் வைத்­தி­ருக்­க­வில்லை என்­பது ஒரு­வரை கைது செய்­வ­தற்­கான கார­ணி­யாக ஒரு போதும் இருக்க முடி­யாது என சட்ட வல்­லு­னர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

அதே நேரம் காரணம் இன்றி ஒரு பகு­தியில் சுற்றித் திரிந்­த­மைக்­கா­கவும் ஒரு­வரை கைது செய்ய முடி­யாது என மனித உரி­மைகள் ஆணைக் குழுவின் முன்னாள் சட்ட செய­லா­ள‌­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி நிமல் புஞ்­சி­ஹேவா குறிப்­பிட்டார்.

கொழும்பில், விமான சேவை­யுடன் தொடர்­பு­பட்ட கற்­கை­நெ­றி­யினை முன்­னெ­டுக்கும் இந்த இளைஞன், தங்­கு­வ­தற்கு அறை­யொன்றை பார்க்கச் சென்ற‌ போது இவ்­வாறு பொலி­ஸாரால் அநி­யா­ய­மாக கைது செய்­யப்­பட்­ட­தாக இளைஞன் தரப்பில் கூறப்­ப­டு­கின்­றது.

எவ்­வா­றா­யினும் நீதி­மன்றம் குறித்த இளை­ஞனை விடு­வித்த பின்னர், குறித்த இளை­ஞனும் அவ­ரது தந்­தையும் கொழும்­பி­லி­ருந்து மாவ­னல்­லையில் உள்ள அவர்­களின் வீட்­டுக்கு அன்று இரவு சென்­றுள்­ளனர். எனினும் அவர்கள் வீட்­டுக்கு செல்ல முன்­ன­ரேயே தெஹி­வளைப் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி மாவ­னல்லை பொலி­ஸா­ருடன் அந்த வீட்­டுக்கு சென்­றி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கின்­ற‌து.

இத­னை­ய­டுத்து சுஹை­லிடம் வாக்கு மூலம் ஒன்­றினை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அவரை கொழும்­புக்கு அழைத்து செல்­வ­தாக கூறி அழைத்து வந்­துள்­ளனர்.
ஆனால் கொழும்­புக்கு அழைத்து செல்­லப்­பட்ட சுஹைல் “இஸ்­ரே­லிய கொடிக்கு கையால் குத்­து­வது” போன்ற ஒரு sticker ஐ கைய­டக்கத் தொலை­பே­சியில் வைத்­தி­ருந்தார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது.

பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்ள சுஹைல் குறித்து 2024.10.25 ஆம் திகதி தெஹி­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அனு­ராத ஹேரத் பி 48841/24 எனும் இலக்­கத்தின் கீழ் கல்­கிசை நீதிவான் நீதி­மன்றில் முன் வைத்­துள்ள விசா­ரணை அறிக்கை பிர­காரம், சுஹைலை, தெஹி­வளை, பெயார் லைன் பகு­தியில் வைத்து சந்­தே­கத்­துக்கு இட­மாக நின்­றி­ருந்த போது கைது செய்­த­தாக கூறப்­பட்­டுட்­டுள்­ளது.

எனினும் சுஹைலின் தரப்­பினர், சுஹைலை 2024 ஒக்­டோபர் 24 ஆம் திகதி இரவு மாவ­னெல்­லையில் உள்ள வீட்­டி­லி­ருந்தே பொலிஸார் அழைத்து சென்­ற‌­தாக கூறு­கின்­றனர். பொலிஸார் 24 ஆம் திகதி இரவு மாவ­னல்­லையில் உள்ள சுஹைலின் வீட்­டிற்கு வந்து அவரை மீண்டும் தெஹி­வ­ளைக்கு கொண்டு சென்­ற­தற்­கான CCTV மற்றும் வீடியோ ஆதா­ரங்கள் உள்­ள­தாக சமூக நீதிக்­கான சட்­டத்­த­ர­ணிகள் அமைப்பு குறிப்­பிட்­டுள்­ளது.
எவ்­வா­றா­யினும் 2024 ஒக்­டோபர் 27 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை, கல்­கிஸ்ஸை பதில் நீதிவான் முன்­னி­லையில் சுஹைல் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் கல்­கிஸ்ஸை நீதவான் முன்­னி­லையில் சுஹைல் ஆஜர்­ப­டுத்­தப்­படும் வேளையில், “தன்னால் ஒக்­டோபர் மாதம் 24 ஆம் திகதி விடு­விக்­கப்­பட்ட நபரை மீண்டும் ஏன் தடுத்து வைத்­துள்­ளீர்கள்?” என பொலி­ஸா­ரிடம் கல்­கிசை நீதிவான் வின­வி­யுள்­ள­தா­கவும் அதே போன்று, “நீத­வானின் எவ்­வித உத்­த­ர­வு­மின்றி” குறித்த நபரின் தொலை­பேசி, ஏற்­க­னவே CID இடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருப்­பது குறித்தும் வின­வப்­பட்­டுள்­ள­தா­கவும் சமூக நீதிக்­கான சட்­டத்­த­ர­ணிகள் அமைப்பு குறிப்­பிட்­டுள்­ளது.

இந்­நி­லையில், பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சுஹைல் தொடர்பில் சட்ட மா அதி­பரின் ஆலோ­சனை கோரப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தரப்பில் கூறப்­ப­டு­கின்­றது. சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமைய அடுத்த கட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

சுஹைலின் கைது அடிப்­படை விதி­மு­றை­க­ளையே மீறி இருப்­ப­தாக சட்ட வல்­லு­னர்கள் குறிப்­பிடும் நிலையில், தெஹி­வளை பொலி­ஸாரின் செயற்­பாடு தொடர்பில் நீதி­மன்­றுக்கு சுஹைல் சார்பில் ஆஜ­ராகும் சட்­டத்­த­ர­ணிகள் அறி­வித்து உரிய நட­வ­டிக்கை எடுக்க முன்­வர வேண்டும் எனவும் குறிப்­பி­டு­கின்­ற‌னர்.

வசதி குறைந்த குடும்பம் ஒன்றின் உறுப்­பி­ன­ரான சுஹைல் தொடர்ச்­சி­யாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில், கூலித் தொழில் செய்யும் அவ­ரது தந்­தைக்கோ அல்­லது அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கோ இந்த விட­யங்கள் தொடர்பில் சட்­டத்­துடன் போராடும் அள­வுக்கு வலிமை இருக்­க­வில்லை என இது தொடர்பில் எம்­முடன் விடயங்களை பகிர்ந்துகொண்ட சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கூறினார்.

எது எவ்வாறாயினும் இதுவரை இந்த விடயம் வெளிப்படுத்தப்படாமல் மூடி மறைக்கப்பட்டு வந்தது. தற்போது அதன் முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், சட்ட மா அதிபர் இந்த விடயத்தில் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும்.
அதேநேரம் தெஹிவளை பொலிஸாரின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி அமைச்சரும் இவ்விவகாரத்தில் தலையீடு செய்யாவிட்டால், நாளை பயங்கரவாத தடை சட்டம் காரணமாக இந்த அரசாங்கம் தனது செல்வாக்கை இழக்கும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.