காஸா மீதான தாக்குதல்களின் எதிரொலி – சர்வதேச சமூகவியல் சங்கத்தின் உறுப்புரிமையிலிருந்து இஸ்ரேல் இடைநிறுத்தம்

0 24

எம்.ஐ.அப்துல் நஸார்

காஸாவில் இஸ்­ரேலின் தொடர்ச்­சி­யான தாக்­கு­தல்­க­ளுக்கு எதிர்­வி­னை­யாற்றும் வித­மாக மொரோக்கோ சமூ­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் உல­க­ளா­விய சிவில் சமூ­கத்­தி­ட­மி­ருந்­து­வரும் அழுத்­தங்­களைத் தொடர்ந்து சர்­வ­தேச சமூ­க­வியல் சங்கம் (ஐ.எஸ்.ஏ) இஸ்­ரே­லிய சமூ­க­வியல் சங்­கத்தின் உறுப்­பு­ரி­மை­யினை இடை­நி­றுத்­தி­யுள்­ளது.

ரபாத்தில் அமைந்­துள்ள முக­மது வீ பல்­க­லைக்­க­ழ­கத்தில் நடை­பெற்ற ஐந்­தா­வது ஐ.எஸ்.ஏ மாநாட்டில் இஸ்ரேல் பங்­கேற்­பிற்கு பர­வ­லாக எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­ட­மை­யினைத் தொடர்ந்து மேற்­படி முடிவு எடுக்­கப்­பட்­டது.

சர்­வ­தேச சமூ­க­வியல் சங்கம் கடந்த வாரம் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யொன்றில், இஸ்ரேலின் தாக்­கு­தல் நட­வ­டிக்­கை­களை ‘காஸாவில் பலஸ்­தீன மக்­க­க­ளுக்கு எதி­ராக செய்­யப்­பட்ட இனப்­ப­டு­கொலை செயல்கள்’ என இவ்­வ­மைப்பு வர்­ணிப்­ப­தற்கு அமை­வாக இவ்­வு­றுப்­புரிமை நீக்கம் பிர­தி­ப­லிக்­கி­றது என ஐ.எஸ்.ஏ அறி­வித்­துள்­ளது, மேலும் இஸ்­ரே­லிய சமூ­க­வியல் சங்கம் பலஸ்­தீ­னத்தில் நிலவும் மனி­தா­பி­மான நெருக்­க­டியைக் கண்­டிக்கத் தவ­றி­ய­தையும் ஐ.எஸ்.ஏ மேற்கோள் காட்­டி­யுள்­ளது.

‘காஸாவில் பலஸ்­தீன மக்­களின் இனப்­ப­டு­கொ­லைக்கு எமது பொது எதிர்ப்பின் ஒரு பகு­தி­யாக, இஸ்­ரே­லிய பொது நிறு­வ­னங்­க­ளுடன் எந்த நிறு­வன ரீதி­யான உற­வு­க­ளையும் நாம் பேண­வில்லை’ என அந்த அறிக்­கையில் மேலும் கூறப்­பட்­டுள்­ளது.

‘காஸாவில் நிலவும் துய­ர­மான சூழ்­நி­லைக்கு இஸ்­ரே­லிய சமூ­க­வியல் சங்கம் தெளி­வான கண்­ட­னத்தை வெளி­யி­டா­த­தற்கு நாங்கள் வருந்­து­கிறோம். தற்­போ­தைய நிகழ்­வு­களில் இஸ்­ரேலின் பங்­கேற்­பிற்கு பர­வ­லாக எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­ட­மை­யினால் நிரு­வாகக் குழு இஸ்­ரே­லிய சமூ­க­வியல் சங்­கத்தின் உறுப்­பு­ரி­மை­யினை இடை­நி­றுத்த முடிவு செய்­துள்­ளது.’

மொரோக்கோ கல்­வி­யா­ளர்கள் மற்றும் இஸ்­ரேலின் கல்வி மற்றும் கலாச்­சார புறக்­க­ணிப்­புக்­கான மொரோக்கோ பிரச்­சார அமைப்பு (MACBI) உட்­பட மனித உரிமை அமைப்­பு­களின் தொடர்ச்­சி­யான எதிர்­பினைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்­கப்­பட்­டது. இஸ்­ரே­லிய கல்­வி­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அழைப்­பு­களை திரும்பப் பெறு­மாறு மொரோக்கோ சமூ­க­வியல் சங்­கத்தை இந்த பிரச்­சார அமைப்பு ஏலவே வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது,

இஸ்­ரே­லிய பங்­கேற்­பினை அங்­கீ­க­ரிப்­பது அதன் ஆக்­க­ர­மிப்பு மற்றும் சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்கள் என்­ப­வற்­றினை ஆத­ரித்து அவற்­றுக்கு உடந்­தை­யாக இருப்­பது போன்­ற­தாகும் எனவும் அவ்­வ­மைப்பு வலி­யு­றுத்தி இருந்­தது.

எனினும், அனைத்து தரப்பும் இந்த உறுப்­பு­ரிமை நீக்­கத்­திற்கு உடன்­ப­ட­வில்லை. சமூ­க­வியல் பேரா­சி­ரியர் ஜமால் பாசா உறுப்­பு­ரிமை நீக்­கத்­தினை ஒரு கருத்­தியல் மீறல் என்று விவ­ரித்தார். ‘விஞ்­ஞானம் மற்றும் விஞ்­ஞா­னி­களை அர­சியல் மற்றும் கருத்­தியல் மோதல்­க­ளுக்குள் இழுப்­பது சமூ­க­வியல் சங்­கத்தின் நோக்­கத்தை குறை­ம­திப்­பிற்கு உட்­ப­டுத்­து­கி­றது,’ என தெரி­வித்தார்.

‘ஆக்­கி­ர­மிப்பு மற்றும் சட்­ட­வி­ரோத குடி­யேற்­றத்தில் ஈடு­படும் ஆட்­சி­யா­ளர்­களின்’ பிர­தி­நி­தி­களை ஒரு பெரிய சர்­வ­தேச கல்வி நிகழ்வில் கலந்து கொள்ள அனு­ம­திப்­பதில் பல்­க­லைக்­க­ழகம் உடந்­தை­யாக இருப்­ப­தாக தேசிய உயர்­கல்வி ஒன்­றி­யத்தின் மொரோக்கோ பிரிவு, தெரி­வித்­துள்­ள­தோடு ‘ஆழ்ந்த கவ­லை­யையும்’ வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

காஸாவில் இஸ்ரேலின் செயற்பாடுகள் தொடர்பில் உலகளவில் எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நிகழ்வு கல்விசார் இராஜதந்திரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் சுட்டிக்காட்டுகின்றது. முன்னணி சர்வதேச அமைப்புகள் நிறுவன இணைப்புகளின் அரசியல் தாக்கங்களையும் அவற்றுடன் வரும் பொறுப்புகளையும் கருத்தில் கொள்ளத் தொடங்கியுள்ளன என்பதை இது காட்டுகின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.