ஈரானின் அணு உட்கட்டமைப்புகள் அழிக்கப்படவில்லை

அமெரிக்க ஊடகங்கள் தெரிவிப்பு

0 42

ஈரானின் அணு­சக்தி திட்டம் “முற்­றாக அழிக்­கப்­பட்­டு­விட்­டது” என ட்ரம்ப் அறி­வித்த போதிலும் அதில் உண்­மை­யில்லை என அமெ­ரிக்க ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. அமெ­ரிக்­காவின் தாக்­கு­தலில் ஈரானின் அணு சக்தி நிலை­யங்­க­ளுக்கு ஏற்­பட்ட சேதம் குறித்து பென்­டகன் உள­வுத்­துறை மேற்­கொண்ட ஆய்­வு­க­ளி­லேயே இந்த உண்மை தெரி­ய­வந்­துள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.

ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்­பஹான் ஆகிய 3 அணு­சக்தி நிலை­யங்­களை “பதுங்கு குழி” குண்­டுகள் மூலம் அமெ­ரிக்கா தாக்­கி­யது. இந்த தாக்­கு­த­லுக்குப் பிறகும் ஈரானின் அணு கட்­ட­மைப்­புகள் பெரும்­பாலும் “அப்­ப­டியே” இருப்­ப­தா­கவும், நிலத்­த­டிக்கு மேலே உள்ள கட்­ட­மைப்­புகள் மட்­டுமே சேத­ம­டைந்­த­தா­கவும் பென்­டகன் மதிப்­பீடு செய்­துள்­ள­தாக ஊட­கங்கள் கூறு­கின்­றன.

“இரண்டு அணு­சக்தி நிலை­யங்­க­ளுக்­கான நுழைவு வாயில்கள் சீல் வைக்­கப்­பட்­டு­விட்­டன, சில உட்­கட்­ட­மைப்­புகள் அழிக்­கப்­பட்­டன அல்­லது சேத­ம­டைந்­தன. ஆனால் நிலத்­த­டியில் ஆழ­மாக உள்ள பெரும்­பா­லான கட்­ட­மைப்­புகள் அப்­ப­டியே உள்­ளன.” என்று அந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

இந்த தாக்­குதல் ஈரானின் அணு­சக்தி திட்­டத்தை “சில மாதங்கள்” பின்­னுக்குத் தள்­ளி­ய­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­கவும், இது ஈரான் தனது அணு­சக்தி திட்­டத்தை மீண்டும் தொடங்­கு­வது, சேதங்­களை சரி செய்ய எவ்­வ­ளவு காலம் எடுக்கும் என்­பதைப் பொறுத்­தது என்றும் அமெ­ரிக்க ஊட­கங்­க­ளுக்கு பெயர் குறிப்­பிட விரும்­பாத அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

ஈரான் கையி­ருப்பில் இருந்த செறி­வூட்­டப்­பட்ட யுரே­னி­யத்தின் ஒரு பகுதி தாக்­கு­தல்­க­ளுக்கு முன்­னரே வேறு இடங்­க­ளுக்கு நகர்த்­தப்­பட்­டு­விட்­ட­தாக சிபி­எஸ்­ஸிடம் உள­வுத்­துறை வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

இதே­வேளை, ஈரான் மீதான அமெ­ரிக்க தாக்­குதல் குறித்து கசிந்­துள்ள இந்த உள­வுத்­துறை தக­வல்கள் குறித்த செய்­தி­க­ளுக்கு டொனால்ட் டிரம்ப் பதி­ல­ளித்­துள்ளார்.
தனது ட்ரூத் சோசியல் பக்­கத்தில் பதி­விட்ட ட்ரம்ப், அமெ­ரிக்க ஊட­கங்­க­ளையும் மற்றும் அவர்கள் வெளி­யிட்ட தக­வல்­க­ளையும் கடு­மை­யாக சாடி­யுள்ளார்.

“போலி செய்தி வழங்கும் சிஎன்என், தோல்­வி­யுற்ற நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கை­யுடன் இணைந்து, வர­லாற்றில் மிகவும் வெற்­றி­க­ர­மான இரா­ணுவத் தாக்­கு­தல்­களில் ஒன்றின் மாண்பை குலைக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளது. ஈரானில் உள்ள அணு­சக்தி தளங்கள் முற்­றி­லு­மாக அழிக்­கப்­பட்­டு­விட்­டது. டைம்ஸ் மற்றும் சிஎன்என் இரண்டும் பொது­மக்­களால் விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றன” என்று அவர் தனது பதிவில் குறிப்­பிட்­டுள்ளார்.

ஈரான் மீதான அமெ­ரிக்க தாக்­குதல் குறித்து உள­வுத்­துறை மதிப்­பீடு கசிந்­தி­ருப்­பதை “தேசத் துரோகம்” என்று மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்­துக்­கான ட்ரம்பின் சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் குறிப்­பிட்­டுள்ளார்.

“இது கொடி­யது, இது துரோகம். இது­ குறித்து விசா­ரிக்­கப்­பட வேண்டும். இதற்கு கார­ண­மா­ன­வர்­களே பொறுப்­பேற்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
அனைத்து சேத மதிப்­பீட்டு அறிக்­கை­க­ளையும் தான் படித்­த­தா­கவும், அமெ­ரிக்கா தாக்­கிய மூன்று அணு­சக்தி நிலை­யங்­களும் “அழிக்­கப்­பட்­டன” என்­பதில் “சந்­தே­க­மில்லை” என்றும் அவர் கூறினார்.

“ஃபோர்டோவில் 12 பதுங்கு குழி குண்டுகளை வெடிக்கச் செய்தோம். அது அதன் மையத்தை உடைத்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது அழிக்கப்பட்டுவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, நாம் இலக்கை அடையவில்லை என்னும் வகையில் வெளியாகும் அறிக்கை முற்றிலும் அபத்தமானது” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.