ஈரானின் போர்டோ அணுசக்தி தளத்தை அமெரிக்கா தாக்கியது ஏன்?

0 46

எம்.ஐ.அப்துல் நஸார்

ஈரானில் உள்ள மூன்று அணு­சக்தி நிலை­யங்­கள் மீது கடந்த ஞாயிறன்று அமெ­ரிக்க விமா­னப்­படையும் கடற்­படையும் தாக்குதல்களை நடத்தியிருந்தன. போர்டோ யுரே­னியம் செறி­வூட்டல் நிலையம், நடான்ஸ் அணு­சக்தி நிலையம் மற்றும் இஸ்­பஹான் அணு­சக்தி தொழில்­நுட்ப மத்­திய நிலையம் ஆகி­ய­வையே தாக்­கு­த­லுக்கு இலக்­கான இடங்­க­ளாகும். நார்த்ரோப் B -2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்­டு­வீச்சு விமா­னங்­களால் சுமந்து செல்­லப்­பட்ட பதி­னான்கு GBU-57A/B MOP 30,000 இறாத்தல் கொண்ட (14,000 கிலோ) ‘பதுங்கு குழி அழிப்பு’ குண்­டு­க­ளாலும், நீர்­மூழ்கிக் கப்­பலில் இருந்து ஏவப்­பட்ட டோமாஹாக் ஏவு­க­ணை­க­ளாலும் குறி­வைக்­கப்­பட்டு தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன.
ஒப­ரேஷன் மிட்நைட் ஹெமர் என்ற குறி­யீட்டுப் பெயர் வழங்­கப்­பட்ட இந்தத் தாக்­குதல், ஜூன் 13 ஆந் திக­தி­யன்று இடம்­பெற்ற திடீர் இஸ்­ரே­லிய தாக்­கு­தல்­க­ளுடன் ஆரம்­ப­மா­கிய முழு வீச்­சி­லான ஈரான்-­ – இஸ்ரேல் யுத்­தத்தில் அமெ­ரிக்­காவின் முதல் தாக்­குதல் நட­வ­டிக்கை இது­வாகும்.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்ப் இந்த நட­வ­டிக்­கையை ‘மிகவும் வெற்­றி­க­ர­மான தாக்­குதல்’ என்று விவ­ரித்தார். அமெ­ரிக்க காங்­கி­ரஸின் குடி­ய­ரசுக் கட்­சி­யினர் பெரும்­பாலும் ட்ரம்பின் நட­வ­டிக்­கையை ஆத­ரித்­தனர், அதே நேரத்தில் பெரும்­பா­லான ஜன­நா­யகக் கட்­சி­யி­னரும் சில குடி­ய­ரசுக் கட்­சி­யி­னரும் இந்த நட­வ­டிக்­கையின் அர­சி­ய­ல­மைப்புச் சட்டம், அதன் விளை­வுகள் மற்றும் ஈரானின் பதில் குறித்து கவலை தெரி­வித்­தனர். சில உலகத் தலை­வர்கள் ஈரானின் அணு­சக்தி திட்­டத்தை செய­லி­ழக்கச் செய்யும் நட­வ­டிக்­கையை வர­வேற்­றனர், ஏனையோர் தாக்­கு­தல்கள் அதி­க­ரிப்­பது தொடர்பில் கவலை தெரி­வித்­தனர்இ சில உலகத் தலை­வர்கள் கண்­ட­னங்­க­ளையும் தெரி­வித்­தனர். இந்தத் தாக்­கு­த­லுக்கு பதி­ல­டி­யாக ஈரான் கட்­டா­ரி­லுள்ள அமெ­ரிக்க தளத்தைத் தாக்­கி­யது.

இஸ்­ரே­லுக்கும் ஈரா­னுக்கும் இடையே அதி­க­ரித்து வரும் மோதல்களுக்கு மத்­தியில் அமெ­ரிக்­காவின் இரா­ணுவத் தலை­யீடு தொடர்பில் தான் பரி­சீ­லனை செய்து வரு­வ­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்ப் ஏலவே தெரி­வித்­தி­ருந்தார்

கடந்த புதன்­கி­ழமை (18) வெள்ளை மாளி­கையின் தெற்கு பகுதி புல்­வெ­ளியில் நின்­று­கொண்டு, ‘அடுத்த வாரம் பெரிய சம்­ப­வங்கள் இருக்கும்’ எனத் தெரி­வித்­தி­ருந்தார், ஈரா­னிய அதி­கா­ரிகள் பேச்­சு­வார்த்தை நடத்த ஆர்­வ­மாக இருந்­தனர் எனவும், இருப்­பினும், அவர்கள் என்னைத் தொடர்பு கொண்­ட­போது, ‘பேசு­வ­தற்கு மிகவும் தாம­த­மா­கி­விட்­டது’ என தான் தெரி­வித்­த­தா­கவும் குறிப்­பிட்டார்.

அமெ­ரிக்­காவின் 30,000 இறாத்தல் (13,000 கிலோ) பதுங்கு குழி­களை அழிக்கும் குண்டு மட்­டுமே தெஹ்­ரானின் அணு­சக்தி திட்­டத்தின் மைய­மாக நம்­பப்­படும் மற்றும் மலையில் ஆழ­மாக அமைக்­கப்­பட்­டுள்ள போர்டோ எரி­பொருள் செறி­வூட்டல் மையத்­தினை அழிக்­கக்­கூ­டிய ஒரே ஆயுதம் என அதி­கா­ரி­களும் நிபு­ணர்­களும் சிபார்சு செய்­தி­ருந்­தனர்.

இந்த குண்­டு­களை வைத்­தி­ருக்கும் ஒரே­யொரு நாடு அமெ­ரிக்கா, இது B-2 ரக குண்­டு­வீச்சு விமா­னங்­களைப் பயன்­ப­டுத்தி குண்டு வீச்­சினை நடத்­தக்­கூ­டி­யது. ஈரா­னுக்கு எதி­ராக இது பயன்­ப­டுத்­தப்­பட்டால், அது இஸ்­ரேலின் சார்­பாக ஏவு­க­ணை­களை இடை­ம­றித்து தாக்கும் இடத்­தி­லி­ருந்து ஈரா­னுக்கு எதி­ராக தீவிர தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்­கான ஒரு பெரிய வாய்ப்­பாக அமையும் என முன்­ன­தா­கவே சர்­வ­தேச ஊட­க­மொன்று கட்­டு­ரை­யொன்­றினை வெளி­யிட்­டி­ருந்­தது.

பதுங்கு குழி­களை அழிக்கும் குண்­டுகள் என்றால் என்ன?
பதுங்கு குழி­களை அழிக்கும் ‘பங்கர் பஸ்டர்’ என்­பது வழக்­க­மான குண்­டுகள் அடைய முடி­யாத ஆழ­மான நிலத்­தடி இலக்­கு­களை அழிக்க வடி­வ­மைக்­கப்­பட்ட குண்­டு­க­ளுக்­கான பொது­வான சொல்.

அமெ­ரிக்க இரா­ணு­வத்தின் மிகவும் சக்­தி­வாய்ந்த பதுங்கு குழி­களை அழிக்கும் பங்கர் பஸ்டர் GBU-57 Massive Ordnance Penetrator ஆகும். 2,700 கிலோ (6,000 இறாத்தல்) வெடி­ம­ருந்து உள்­ள­டங்­க­லாக சுமார் 30,000 இறாத்தல் (13,600 கிலோ) எடை­யுள்ள இந்த துல்­லி­ய-­வ­ழி­காட்­டப்­பட்ட குண்டு அதிக வலிமை கொண்ட உருக்­கினால் ஆனது மற்றும் வெடிப்­ப­தற்கு முன்பு 200 அடி (61 மீட்டர்) நிலத்­திற்­க­டியில் ஊடு­ருவிச் செல்லும் வகையில் கட்­ட­மைக்­கப்­பட்­டுள்­ளது.

 

ராடார்­க­ளுக்குச் சிக்­காத அமெ­ரிக்­காவின் குண்­டு­வீச்சு விமா­னங்­க­ளான B-2 ஸ்பிரிட், தற்­போது GBU-57 ஐ பயன்­ப­டுத்­து­வ­தற்கு ஏது­வாக வடி­வ­மைக்­கப்­பட்ட ஒரே விமா­ன­மாகும். மேலும் ஒரே நேரத்தில் இரண்டு குழி­களை அழிக்கும் குண்­டு­களை சுமந்து செல்ல முடியும். அமெ­ரிக்க விமா­னப்­படை இது தொடர்பில் தெரி­விக்­கையில், ஒரே விமானம் அல்­லது பல விமா­னங்­களால் பல குண்­டு­களை தொடர்ச்­சி­யாக வீச முடியும், இதனால் ஒவ்­வொரு தாக்­கு­தல்­க­ளிலும் ஆழ­மான துளைகள் ஏற்­படும், இது ஒட்­டு­மொத்த தாக்­கத்தை அதி­க­ரிக்கும்.

அமெ­ரிக்­காவில் தயா­ரிக்­கப்­பட்ட பதுங்கு குழி­களை அழிக்கும் ஏவு­க­ணை­களை இஸ்­ரேலும் பயன்­ப­டுத்­து­கி­றது, இதில் GBU-28 மற்றும் BLU-109 ஆகி­யவை அடங்கும், அவை பொது­வாக F-15 போன்ற போர் விமா­னங்­க­ளி­லி­ருந்து வீசப்­ப­டு­கின்­றன. இருப்­பினும், இந்த ஆயு­தங்கள் மிகவும் ஆழ­மாக நிலத்தைத் துளைத்துச் சென்று தாக்கக் கூடி­ய­ன­வல்ல, மேலும் ஈரானின் போர்டோ அணு­சக்தி நிலையம் போன்ற மிகவும் பாது­காப்­பான தளங்­களின் ஆழத்தை அடையும் திறன் கொண்­டவை அல்ல. 2024 ஆம் ஆண்டில், ஹிஸ்­புல்லாஹ் அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்­ருல்­லாஹ்வை பெய்­ரூட்டில் உள்ள அவ­ரது நிலத்­தடி தலை­மை­ய­கத்தில் வைத்துக் கொல்ல இஸ்ரேல் தொடர்ச்­சி­யான BLU -109 குண்­டு­களைப் பயன்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

ஈரானின் போர்டோ அணு­சக்தி நிலையம் எவ்­வ­ளவு ஆழத்தில் உள்­ளது?
தெஹ்­ரா­னுக்கு தென்­மேற்கே சுமார் 95 கிமீ (60 மைல்) தொலைவில் அமைந்­துள்ள ஈரானின் போர்டோ செறி­வூட்டல் நிலையம், வான்­வழித் தாக்­கு­தல்கள் மற்றும் பதுங்கு குழி அழிப்புத் தாக்­கு­தல்­களில் இருந்து தப்­பிக்க, 80-90 மீட்டர் (260-300 அடி) நிலத்­த­டியில் ஒரு மலையின் ஓரத்தில் கட்­டப்­பட்­டி­ருந்­தது.

போர்டோ செறி­வூட்டல் நிலை­யத்தின் கட்­டு­மானம் 2006 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கி­றது, மேலும் அது 2009 இல் செயல்­பாட்­டுக்கு வந்­தது, அதே ஆண்டில் ஈரான் அதை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஒப்­புக்­கொண்­டது.

JCPOA எனப்­படும் 2015 ஈரான் அணு­சக்தி ஒப்­பந்­தத்தின் கீழ், போர்­டோவில் செறி­வூட்­டலை நிறுத்தி, அந்த இடத்தை ஒரு ஆராய்ச்சி மத்­திய நிலை­ய­மாக மாற்ற ஈரான் ஒப்­புக்­கொண்­டது. இருப்­பினும், 2018 இல் அமெ­ரிக்கா ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து வில­கிய பின்னர், ஈரான் அந்த நிலை­யத்தில் யுரே­னியம் செறி­வூட்­டலை மீண்டும் தொடங்­கி­யது. ஈரான் தனது அணு­சக்தி திட்டம் சிவில் நோக்­கங்­க­ளுக்­கா­னது என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளது.
போர்டோ ஈரா­னிய மற்றும் ரஷ்­யாவின் தரை­யி­லி­ருந்து வான் ஏவு­கணை அமைப்­பு­களால் பாது­காக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது, இருப்­பினும் இஸ்­ரேலின் தொடர்ச்­சி­யான தாக்­கு­தல்­களில் அந்தப் பாது­காப்­புகள் ஏற்­க­னவே குறி­வைக்­கப்­பட்­டி­ருக்­கலாம்.

இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாகு ஈரானின் ஏவு­கணை மற்றும் அணு­சக்தி திறன்­களை அகற்­று­வ­தற்­கான ஒரு பணி­யாக இந்த நட­வ­டிக்­கை­யினை வடி­வ­மைத்­துள்ளார், அவற்றை ‘தற்­போ­துள்ள அச்­சு­றுத்­தல்கள்’ என விவ­ரித்­துள்ளார். போர்டோ ஒரு முக்­கிய இலக்கு என்­பதை அதி­கா­ரிகள் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.
‘இந்த முழு நட­வ­டிக்­கையும் … உண்­மையில் போர்­டோவை ஒழிப்­பதன் மூலம் முடிக்­கப்­பட வேண்டும்,’ என்று அமெ­ரிக்­கா­விற்­கான இஸ்­ரேலின் தூதர் யெச்­சியல் லீட்டர் பொக்ஸ் நியூ­ஸுக்கு அளித்த நேர்­கா­ணலில் தெரி­வித்­தி­ருந்தார்.

ஏனைய அணு­சக்தி தளங்கள்
குறி­வைக்­கப்­பட்­டன
ஈரானின் மிகப்­பெ­ரிய அணு­சக்தி தள­மான நடான்ஸில் உள்ள யுரே­னியம் செறி­வூட்டல் நிலை­யத்தின் நிலத்தின் மேல் பகு­தி­யி­லுள்ள நிர்­மா­ணிப்புப் பகு­தியை இஸ்ரேல் அழித்­த­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

ஐக்­கிய நாடுகள் சபையின் சர்­வ­தேச அணு­சக்தி அமைப்பின் (IAEA) கூற்­றுப்­படி, இதன் விளை­வாக ஏற்­பட்ட சக்தி இழப்பு, நிலை­யத்தில் உள்ள நிலத்­தடி செறி­வூட்டல் பகு­தி­க­ளுக்கும் சேதத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம் என நம்­ப­ப்­ப­டு­கின்­றது.

அணு மற்றும் இர­சா­யன
மாசு­பாட்­டிற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள்
கடந்த திங்­கட்­கி­ழமை, ஐ.நா. அணு­சக்தி கண்­கா­ணிப்பு அமைப்பின் தலை­வ­ரான ரபேல் க்ரோஸி, சேதமடைந்த நடான்ஸ் தளத்திலிருந்து கதிரியக்க மற்றும் இரசாயன மாசுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

வியன்னாவில் நடந்த அவசரகால அமர்வில் பேசிய க்ரோஸி, ஈரானின் நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்களுக்கு வெளியே கதிர்வீச்சு அளவுகள் சாதாரணமாகவே இருப்பதாகக் கூறினார். இவை இரண்டும் இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டன. இருப்பினும், தொடர்ந்து வரும் இராணுவ நடவடிக்கைகள் கதிரியக்க வெளியீட்டின் அபாயத்தை அதிகரிக்கிறது என அவர் மேலும் எச்சரித்தார்.

போர்டோவ், ஈரானின் ஏழாவது பெரிய நகரமான கும் நகரிலிருந்து சுமார் 32 கிலோமீட்டர் (20 மைல்) தெற்கே அமைந்துள்ளது. இந்த நகரத்தில் சுமார் 1.4 மில்லியன் மக்கள் வாழ்வதோடு முக்கியமான சமய மற்றும் அரசியல் நிறுவனங்களை இந்த நகரம் கொண்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.