இஸ்ரேல் இராணுவம் காசாவில் தாக்குதல்

51 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

0 38

காசாவில் இஸ்­ரே­லி­ய இராணுவத்தினர் நேற்று புதன்­கி­ழமை நடத்­திய கடுமையான தாக்­கு­தல்­களில் 51 பாலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­பட்­டனர். மேலும் மற்றும் நூற்­றுக்­க­ணக்­கானோர் காய­ம­டைந்­தனர் என்று காசா சுகா­தார அமைச்சின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. கிழக்கு காசா நக­ரத்தின் ஷெஜையா பகு­தியில் நடந்த தாக்­கு­தலில் 12 பேர் உயி­ரி­ழந்­த­தா­கவும், பலர் காய­ம­டைந்­த­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

மத்­திய காசாவில் உள்ள நெட்­சாரிம் பகு­தியில் மனி­தா­பி­மான உதவி பெற முயன்­ற­போது இஸ்­ரே­லிய துப்­பாக்கிச் சூட்டில் மேலும் எட்டு பேர் கொல்­லப்­பட்­ட­தாக சுகா­தார தரப்பை மேற்கோள் காட்டி செய்­திகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

இத­னி­டையே, தெற்கு காசாவில் உள்ள ரஃபா நக­ருக்கு மேற்கே இஸ்­ரே­லிய இரா­ணு­வத்தின் துப்­பாக்கிச் சூட்டில் மனி­தா­பி­மான உத­வியை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக காத்­தி­ருந்த மேலும் மூன்று பாலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­பட்­டனர்.

அத்­துடன், நேற்று புதன்­கி­ழமை மத்­திய காசா நகரில் இஸ்­ரே­லிய இரா­ணு­வத்தின் துப்­பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்­லப்­பட்­ட­தா­கவும், பலர் காய­ம­டைந்­த­தா­கவும் சுகா­தர அமைச்சு தெரி­விக்­கி­றது.

காசா நக­ரத்தின் மேற்கே பொது­மக்­களை குறி­வைத்து நடத்­தப்­பட்ட வான்­வழித் தாக்­கு­தலில் இஸ்­ரே­லிய இரா­ணுவம் ஐந்து பலஸ்­தீ­னி­யர்­க­ளையும் கொன்­ற­தா­கவும், பலர் காய­ம­டைந்­த­தா­கவும் மருத்­து­வர்கள் தெரி­வித்­தனர்.

இஸ்­ரே­லிய வான்­வழித் தாக்­கு­தலைத் தொடர்ந்து, வடக்கு காசாவில் உள்ள ஜபா­லியா அல்-­நஸ்­லாவில் இரண்டு வீடு­களின் இடி­பா­டு­களில் இருந்து மீட்புக் குழு­வினர் மூன்று பாலஸ்­தீ­னி­யர்­களின் உடல்­களை மீட்­டனர் மற்றும் ஐந்து பேர் இடி­பா­டு­க­ளுக்கு அடியில் காணாமல் போயுள்­ளனர்.

டெய்ர் அல்-­ப­லாவில் உள்ள இரண்டு வீடுகள் மற்றும் மத்­திய காசாவில் உள்ள நுசைரத் அக­திகள் முகாம் மீதான மற்­றொரு இஸ்­ரே­லிய தாக்­கு­தலில் பத்து பாலஸ்­தீ­னி­யர்­களும் கொல்­லப்­பட்­டனர் மற்றும் பலர் காய­ம­டைந்­தனர்.

கிழக்கு கான் யூனிஸில் உள்ள அபாசன் நகரில் இடி­பா­டு­களில் இருந்து ஒரு இளம் பலஸ்­தீ­னி­யரின் உடலை மீட்புக் குழு­வினர் மீட்­ட­தாக மருத்­துவ வட்­டாரம் தெரி­வித்­துள்­ளது.
உதவி விநி­யோ­கத்­திற்­காக காத்­தி­ருந்த இருவர் உட்­பட மேலும் ஐந்து பலஸ்­தீ­னி­யர்கள் கான் யூனிஸில் இஸ்­ரே­லிய தாக்­கு­தல்கள் மற்றும் துப்­பாக்கிச் சூட்டில் கொல்­லப்­பட்­டனர்.

வடக்கு காசாவில் உள்ள ஜபா­லியா அல்-­ப­லாத்தில் உள்ள ஒமாரி மசூ­திக்கு அருகில் மக்கள் கூடி­யி­ருந்­ததை குறி­வைத்து இஸ்­ரே­லிய வான்­வழித் தாக்­கு­தலில் மேலும் இரண்டு பலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­பட்­டனர், மேலும் மற்­ற­வர்கள் காய­ம­டைந்­தனர் என சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.