கெஹலியவின் மருந்து கொள்வனவு மோசடி: ஊழலால் சிதைந்த மக்கள் நம்பிக்கையை நீதித்துறையே மீட்டெடுக்க வேண்டும்!

0 57

எஸ்.என்.எம்.சுஹைல்

சுகா­தா­ரத்­துறை மீதான நம்­பிக்­கைக்கு குந்­த­கத்தை ஏற்­ப­டுத்தும் சம்­ப­வ­மாக, முன்னாள் சுகா­தார அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்­லவின் பதவிக் காலத்தில் இடம்­பெற்ற மருந்து கொள்­வ­னவு மோசடியைக் குறிப்பிடலாம்.­ மக்­களின் உயிரை துச்­ச­மாகக் கருதி பொறுப்­புள்ள அமைச்சரும் அதி­கா­ரி­களும் செய்த இந்த கொடூ­ர­மான செயற்­பா­டா­னது எந்தவகையிலும் மன்னிக்க முடியாததாகும்.

உயிர் காக்கும் மருந்­து­க­ளாகக் கரு­தப்­படும் Human Immunoglobulin மற்றும் Rituximab போன்­றவை, 144 மில்­லியன் ரூபா அசர நிதி ஒதுக்­கீட்டின் மூலம் அவ­சர கொள்­முதல் திட்­டத்தின் கீழ் வாங்­கப்­பட்­டாலும், அவை தர­மற்­றதும், ஆபத்­தா­னதும் என நிரூ­பிக்­கப்­பட்­டது.

இந்த மோசடி சம்­பவம் அரச திணைக்களங்களின் பொறுப்­பின்மை, அர­சியல் அதி­கா­ரத்தின் துஷ்­பி­ர­யோகம் மற்றும் மக்கள் நலனை புறக்­க­ணித்த நிர்­வா­கத்தின் வெளிப்­ப­டை­யான எடுத்­துக்­காட்­டாக மாறி­யுள்­ளது. இதன் அடிப்­ப­டையில் பல உயர் அதி­கா­ரிகள், கொள்­முதல் நிறு­வ­னங்கள் மற்றும் அர­சி­யல்­வா­திகள் சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

2022 ஒக்­டோபர் – 2023 மார்ச்
IVIG (Human Immunoglobulin) மற்றும் Rituximab ஆகிய மருந்­துகள் அவ­சர ஒப்­பந்­தத்தின் கீழ் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டது. நிதி: ரூ. 144 மில்­லியன் (திட்­ட­மி­டப்­ப­டாத அவ­சர செல­வீடு).
2023 மே – ஜூலை
மருந்­துகள் நோயா­ளி­க­ளுக்கு அரச வைத்­தி­ய­சா­லை­களில் பயன்­பாட்­டிற்கு வந்­தது. சில நோயா­ளி­களில் பாதிப்­புக்­கான அறி­குறி தென்­பட்­டது.
2023 ஆகஸ்ட் – நவம்பர்
கொள்­வ­னவு செய்­யப்­பட்ட மருந்­துகள் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது. ஆரம்ப பரி­சோ­த­னை­களில் அந்த மருந்தில் பாக்­டீ­ரியா கலந்த நீர், சேலைன் மட்­டுமே இருப்பதாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.
2023 டிசம்பர்
மருந்து விநி­யோ­கஸ்­தர்­க­ளுக்கும், கொள்­முதலுடன் தொடர்­பு­டைய அதி­கா­ரி­க­ளுக்கும் எதி­ராக குற்றப் புல­னாய்வு பிரிவின் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.
2024 பெப்­ர­வரி 1
முன்னாள் சுகா­தார அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல, அரச மருந்து விநி­யோக நிறு­வனம் மற்றும் NMRA அதி­கா­ரிகள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர்.
2024 பெப்­ர­வரி 2–5
அமைச்சர் கெஹ­லிய கைது
2024 மார்ச்
அரசு பொது நிதி மோச­டி­யாக வழக்கு பதிவு செய்­யப்­பட்­டது.
2024 டிசம்பர்
கெஹ­லிய ரம்­புக்­வெல்­லவின் சொத்­துகள் மற்றும் வங்கி கணக்­குகள் முடக்கம்.
இந்­நி­லையில், 2023 செப்­டம்பர் 6 ஆம் திகதி, அப்­போ­தைய எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சக்­தி­யினால் சுகா­தார அமைச்சர் கெஹ­லி­ய­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்று பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வரப்­பட்­டது.

45 எதி­ரணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்த பிரே­ர­ணையை கையெ­ழுத்­திட்டு சமர்ப்­பித்­தனர். மூன்று நாட்கள் இவ்­வி­வ­காரம் விவா­தத்­தி­றகு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­துடன் 2023 செப்­டம்பர் 8 ஆம் திகதி, நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு இடம்­பெற்­றது.

பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 73 வாக்­கு­களும், பிரே­ர­ணைக்கு எதி­ராக 113 வாக்­கு­களும் அளிக்­கப்­பட்­டன. அத்­துடன் 38 உறுப்­பி­னர்கள் இந்த வாக்­கெ­டுப்பில் கலந்­து­கொள்­ள­வில்லை.

சுகா­தார அமைச்சர் கெஹ­லிய மீது நம்­பிக்­கை­யில்லை என (அதாவது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக) அன்­றைய பாரா­ளு­மன்றில் அங்கம் வகித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.எச்.ஏ.ஹலீம், பைஸல் காஷிம், இம்ரான் மகரூப், இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார், இஷாக் ரகுமான், கபீர் ஹாஷிம், எம்.எஸ்.தௌபீக், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் வாக்­கு­களை பிர­யோ­கித்­தனர்.

கெஹ­லிய மீதான நம்­பிக்­கையை வெளிப்­ப­டுத்­திய (அதாவது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக) முஸ்லிம் உறுப்­பி­னர்­களும் உள்­ளனர். ஏ.எல்.எம். அதா­வுல்லாஹ், அலி சப்ரி ரஹீம், காதர் மஸ்தான், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.யூ.எம்.அலி­சப்ரி, மர்ஜான் பழீல், நஸீர் அஹமட் ஆகியோர் கெஹ­லி­யவை காப்­பாற்­று­வ­தற்கு கை உயர்த்­தினர்.

இது­போக, ஏ.எச்.எம்.பௌஸி, எச்.எம்.எம்.ஹரீஸ், மொஹமட் முஸம்மில், எஸ்.எம்.எம்.முஸர்ரப் ஆகிய நால்­வரும் வாக்­கெ­டுப்பில் கலந்­து­கொள்­ள­வில்லை.
எவ்­வா­றா­யினும் 113 அறுதிப் பெரும்­பான்­மை­யுடன் அமைச்சர் கெஹ­லிய பாதுகாக்கப்பட்டார். அதன்­பின்னர் ‘சுகா­தாரத் துறை முன்­னே­றி­யுள்­ளது’ என்­ற­வா­றான கருத்தை முன்­வைத்தார். எவ்­வித மன­சாட்­சியும் குற்ற உணர்ச்­சியும் இல்­லாமல் அவர் பேசிய விட­யங்கள் அவர் மீது அருவருப்­பையே தூண்­டு­கின்­றது. ஏனெனில், அப்­பாவி மக்­களின் உயிரை குடிக்கும் காரி­யத்தை செய்­து­விட்டு மக்கள் முன் ஆடிய நாட­கங்கள் வெளிப்­ப­டை­யா­னவை.

கெஹ­லிய ரம்­புக்­வெல்ல மீதான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 73 வாக்­கு­களும் எதி­ராக 113 வாக்­கு­களும் அளிக்­கப்­பட்ட நிலையில், 38 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வாக்­கெ­டுப்பில் கலந்­து­கொள்­ள­வில்லை. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் கூட கெஹ­லி­ய­வுக்கு துணை­போ­ன­வர்களாகவே கருதப்படுவர்.
கொள்கை ரீதி­யான நிலைப்­பாட்டை எடுக்கத் தவ­று­வது, தவ­று­களை சுட்­டிக்­காட்­டவும், பொறுப்­புக்­கூ­றலைக் கோரவும் தவ­று­வது வெறும் அர­சியல் அலட்­சியம் மட்­டு­மல்ல; அது பொது­மக்கள் நம்­பிக்­கைக்கு ஒரு துரோகம் என சட்­டத்­த­ரணி லிகிணி பெர்­னாண்டோ கண்­டனம் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில் நீதி­மன்ற விசா­ர­ணைகள் பல விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. குறிப்­பாக முன்னாள் சுகா­தார அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல மற்றும் மேலும் 12 சந்­தேக நபர்­களின் மேற்­பார்­வையின் கீழ் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட Human Immunoglobulin எனப்­படும் சிகிச்­சைக்­கான நோயெ­திர்ப்பு மருந்து தொகு­தியில் மனித உட­லுக்கு தீங்கு விளை­விக்கும் பற்­றீ­ரியா கலந்த நீர் காணப்­பட்­டமை உறுதியாகியுள்ளது.

உலக சுகா­தார ஸ்தாப­னத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஜேர்மன் ஆய்­வகம், இலங்­கையின் பொது சுகா­தார துறையில் முன்னர் விநி­யோ­கிக்­கப்­பட்ட சர்ச்­சைக்­கு­ரிய Human Immunoglobulin மற்றும் Rituximab ஆகிய இரண்டு மருந்­து­களும் தர­மற்­றவை மற்றும் ஆபத்­தா­னவை என்றும், அவற்றில் எந்த மருத்­துவ குணங்­களும் இல்லை என்றும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

Human Immunoglobulin குப்­பி­களில் மனித ஆரோக்­கி­யத்­திற்கு தீங்கு விளை­விக்கும் பற்­றீ­ரியா கலந்த நீர் இருந்­த­தா­கவும், புற்­றுநோய் மருந்­தான Rituximab இல் சேலைன் கரைசல் மட்­டுமே இருந்­த­தா­கவும், புற்­று­நோய்க்கு சிகிச்­சை­ய­ளிக்­கக்­கூ­டிய எந்­த­வொரு செயலில் உள்ள கூறு­களும் அதில் இல்லை என்றும் அம்­ப­ல­மா­னது.

மருந்து விநி­யோக நிறு­வ­னத்தின் உரி­மை­யா­ள­ரான முதல் சந்­தேக நபர் சுதத் ஜனக பெர்­னாண்டோ, ஆய்­வக பகுப்­பாய்­வின்­படி எந்த மருத்­துவ மதிப்பும் இல்­லாத மருந்­து­களை இலங்­கையின் மருத்­து­வ­மனைகளுக்கு விநி­யோ­கித்­துள்ளார் என்­பதை நீதி­மன்ற விசா­ரணை வெளிப்­ப­டுத்­தி­யது.

அத்­துடன், புற்­றுநோய் மருந்­தான Rituximab இல் புற்­று­நோய்க்கு சிகிச்­சை­ய­ளிக்கத் தேவை­யான அத்­தி­யா­வ­சிய புரதக் கூறுகள் இல்லை, மேலும் அது சோடியம் குளோ­ரைட்டு – வெறும் சேலைன் கரை­சலைக் கொண்­டி­ருந்­தது.

எட்­டா­வது சந்­தேக நப­ரான முன்னாள் சுகா­தார அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல சமர்ப்­பித்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தின் அடிப்­ப­டையில், இலங்கை அர­சாங்கம் 144.74 மில்­லியன் ரூபாவை செல­விட்டு, விஷ­மான பற்­றீ­ரியா கலந்த நீரையும் சாதா­ரண சேலை­னையும் மருந்து என்ற போர்­வையில் கொள்­முதல் செய்­துள்­ளது.

சிகிச்­சைக்­கான மருந்­து­க­ளுக்குப் பதி­லாக இர­சா­யன பிறப்­புக்­கட்­டுப்­பாட்டுப் பொருட்­க­ளுக்கு பொது­வாகப் பயன்­ப­டுத்­தப்­படும் ஒரு வகைப்­ப­டுத்தல் குறி­யீட்டின் கீழ் பொருட்கள் இறக்­கு­மதி செய்­யப்­பட்­ட­தாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே இது தொடர்­பாக, குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் அண்­மையில் முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் வாக்­கு­மூலம் பதிவு செய்­துள்­ளது. முன்னாள் ஜனா­தி­ப­தியின் வாக்­கு­மூ­லத்­தின்­படி, அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்­திற்­கான முழுப் பொறுப்பும் சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­ரையே சாரும் என்று கூறப்­பட்­டது.

இத­னி­டையே, கடந்த வாரம் முன்னாள் அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல மற்றும் ஏனைய சந்­தே­க­ந­பர்கள் தங்­க­ளது பிணை நிபந்­த­னை­களை பூர்த்தி செய்­ததை தொடர்ந்து, அவர்­களை விடு­விப்­ப­தற்கு கொழும்பு நீதவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.
முன்னாள் சுகா­தார அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்­லவின் மருந்து கொள்­வ­ன­வி­லான மோசடி, இலங்கை அரசின் நிர்­வாக துறை­களில் ஊழல் எவ்­வ­ளவு ஆழ­மாக வேரூன்­றி­யி­ருக்­கி­றது என்­பதை தெளி­வாகக் காட்டும் கொடூ­ர­மான எடுத்­துக்­காட்­டாக அமைந்­துள்­ளது.

உயிர்­காக்கும் மருந்­து­களைத் தர­மின்றி கொள்­வ­னவு செய்து அவை நோயா­ளி­க­ளுக்கு வழங்­கப்­பட்­ட­மை­யா­னது அதி­கார தரப்பின் பொறுப்­புகள் மற்றும் நிர்­வாக சீர்­கே­டு­க­ளையே சுட்­டிக்­காட்­டு­கி­றது.

இந்த ஊழலைக் கவ­னத்தில் கொண்டு, பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை அர­சியல் ரீதி­யி­லா­ன­தென்­றாலும் மக்­களின் குரலை எடுத்­தி­யம்­பி­யது. அத்­தோடு, நீதிக்­கான கோரிக்­கை­யையும் முன்­வைத்­தது. ஆனால், அது தோற்­க­டிக்­கப்­பட்­ட­மை­யா­னது நாட்டின் வீழ்ச்­சி­ய­டைந்த அர­சியல் போக்­கையே காட்­டி­நின்­றது. கடந்த அர­சாங்கம் வீழ்த்­தப்­ப­டு­வ­தற்கு இவ்விவகாரம் முக்கிய காரணம் எனலாம்.

இந்நிலையில் நடைபெறும் நீதிமன்ற விசாரணைகள், பொது நலனுக்காக நீதியை நிலைநாட்டும் வாய்ப்பாக இருக்க வேண்டும். இது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிவிடலாகாது. எதிர்காலத்தில் எந்த அரசியல்வாதியும் பொதுப்பணிகளில் பொறுப்பின்றி செயல்பட முடியாது என்ற ஒரு வலிமையான செய்தியை இது சொல்ல வேண்டும்.

நாடே நம்பும் சுகாதாரத் துறையின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் தருணத்தில், உண்மையான சட்டம், நீதி வெல்ல வேண்டும். இதுவே ஊழலால் நொறுங்கிச் சிதைந்துபோயுள்ள மக்கள் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான ஒரே வழியாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.