அச்சுறுத்தலுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது

அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் ஈரானின் ஆன்மிகத் தலைவர் கொமைனி எச்சரிக்கை

0 45

ஈரா­னுக்கும் இஸ்­ரே­லுக்­கு­மி­டை­யி­லான போர் ஆறா­வது நாளாக நேற்றும் தொடர்ந்த நிலையில், ஈரான் ஒரு­போதும் இஸ்­ரே­லி­னதும் அமெ­ரிக்­கா­வி­னதும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அடி­ப­ணி­யாது என அந்­நாட்டின் அதி உச்ச ஆன்­மிகத் தலைவர் ஆய­துல்லா சையத் அலி கொமைனி சூளு­ரைத்­துள்ளார்.

ஈரான் மீது திணிக்­கப்­படும் போருக்கோ அல்­லது திணிக்­கப்­படும் சமா­தா­னத்­துக்கோ ஈரான் ஒரு­போதும் அடி­ப­ணி­யாது என்றும் அவர் திட்­ட­வட்­ட­மாகத் தெரி­வித்தார்.

தஸ்னிம் செய்தி நிறு­வனம் வெளி­யிட்­டுள்ள அவ­ரது தொலைக்­காட்சி உரையில், “இந்த தேசம் திணிப்­பு­க­ளுக்கு முன்னால் யாருக்கும் அடி­ப­ணி­யாது,” என்று அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி டொனால்ட் டிரம்ப் முன்னர் வெளி­யிட்ட கருத்­துக்­களைச் சுட்­டிக்­காட்­டிய கொமைனி, “அமெ­ரிக்­கர்கள் ஒரு விட­யத்தை அறிந்து கொள்ள வேண்டும். எந்­த­வொரு அமெ­ரிக்க இரா­ணுவத் தலை­யீடும் சந்­தே­கத்­திற்கு இட­மின்றி ஈடு­செய்ய முடி­யாத விளை­வு­களை ஏற்­ப­டுத்தும்,” என்றும் அவர் கடு­மை­யாக எச்­ச­ரித்தார்.

“ஈரான், அதன் மக்கள், அதன் நீண்ட வர­லாற்றை உண்­மை­யாகப் புரிந்­து­கொண்ட ஞான­முள்­ள­வர்கள், இந்த தேசத்­திடம் அச்­சு­றுத்தும் மொழியில் ஒரு­போதும் பேச மாட்­டார்கள். ஈரான் ஒரு­போதும் அடி­ப­ணி­யாது,” என நேற்று நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில் அவர் குறிப்­பிட்டார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இஸ்­ரேலால் தொடங்­கப்­பட்ட முன்­ன­றி­வித்­த­லின்­றிய இந்தப் போர், ஈரானில் பல உயர்­மட்ட இரா­ணுவத் தள­ப­திகள், அணு விஞ்­ஞா­னிகள் மற்றும் பொது­மக்கள் படு­கொலை செய்­யப்­ப­டு­வ­தற்கு வழி­வ­குத்­தது. கடந்த ஆறு நாட்­க­ளாக இஸ்­ரேலின் தாக்­கு­தல்கள் இந்த தொடர்ந்தும் அதி­க­ரித்து வரு­கி­றது. இந்­நி­லையில் இதற்குப் பதி­ல­டி­யாக ‘உண்மை வாக்­கு­றுதி 3’ எனும் பதில் தாக்­கு­தலை ஈரான் வெள்­ளிக்­கி­ழமை மாலை தொடங்­கி­யது. இது வரை சுமார் 11 மேற்­பட்ட கட்­டங்­க­ளாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளது. இதன் மூலம் இஸ்­ரேலின் பல மூலோ­பாய மற்றும் முக்­கி­ய­மான இரா­ணுவ உள­வுத்­துறை இலக்­குகள் தாக்­கப்­பட்­டன. பொது மக்­களின் வாழி­டங்­களும் பலத்த தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கின. இது இஸ்­ரே­லுக்கு பெரும் இழப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இஸ்­ரே­லி­யர்கள் நிலத்­தடி சுரங்­கங்­களில் பெரும் அச்­சத்­துடன் மறைந்து வாழ்ந்து வரு­வ­துடன் நாட்டை விட்டும் வெளி­யேறி வரு­கின்­றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று மாலை வரையான மோதல்களில் ஈரானில் 240 பேரும் இஸ்ரேலில் 20 பேரும் உயிரிழந்துள்ளதாக அல் ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.