வெற்றிகரமான ஹஜ் யாத்திரையும் இலங்கை ஹஜ் குழுவின் ஏற்பாடுகளும்

0 67

மதீ­னா­வி­லி­ருந்து றிப்தி அலி

பாரிய பிரச்­சி­னைகள் எது­வு­மின்றி இந்த வரு­டத்­திற்­கான (2025) ஹஜ் கட­மைகள் வெற்­றி­க­ர­மாக நிறை­வ­டைந்­துள்­ளன. ஐந்து நாட்­களைக் கொண்ட இஸ்­லாத்தின் ஐந்­தா­வதும் இறு­தி­யு­மான ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­காக 1,673,230 யாத்திரிகர்கள் அரபா, முஸ்­த­லிபா மினா மற்றும் மக்கா ஆகிய நக­ரங்­களில் ஒன்­று­கூ­டினர்.

கடந்த 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை இடம்­பெற்ற இந்த ஹஜ் கட­மை­களில் 1,506,576 வெளி­நாட்டு ஹாஜி­களும் 166,654 உள்­நாட்டு ஹாஜி­களும் பங்­கேற்­றி­ருந்­தனர். இதில் 877,841 ஆண் ஹாஜி­களும் 795,389 பெண் ஹாஜி­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.
சுமார் 170க்கு மேற்­பட்ட நாடு­களைச் சேர்ந்த ஹாஜி­களில் 66,465 பேர் தரை வழி­யா­கவும் 5,094 பேர் துறை­முகம் வழி­யா­கவும் 1,435,017 பேர் விமான நிலையங்கள் ஊடா­கவும் புனித மக்கா நகரை வந்­த­டைந்­தனர்.

ஆப்­கா­னிஸ்தான், லிபியா மற்றும் டொகோலோ ஆகிய நாடு­களைச் சேர்ந்த மூன்று பெண்­ம­ணிகள், இந்த வருட ஹஜ்ஜின் போது குழந்­தை­களை பிர­ச­வித்­துள்­ளனர். இதில் டொகோலோ பெண்­மனி அரபா தினத்­தன்று குழந்­தை­யொன்­றினை பிர­ச­வித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஹாஜி­க­ளுக்­காக 94,000க்கு அதி­க­மான பணி­யா­ளர்கள் இந்த வருடம் பணி­யாற்­றி­யுள்­ளனர். அதே­வேளை, 200,000க்கு மேற்­பட்ட மருத்­துவ சேவைகள் ஹாஜி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வாறு பல்­வேறு சிறப்­பம்­சங்­களைக் கொண்ட இந்த வருட ஹஜ்ஜில் பாது­காப்பு, சுகா­தாரம் மற்றும் சேவைகள் தொடர்­பான எந்­த­வொரு பாரிய அசம்பாவிதங்களும் இடம்­பெ­ற­வில்லை என சவூதி அரே­பி­யாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவ­கார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இந்த வரு­டத்­தினை விட சுமார் 150,000க்கு அதிக எண்­ணிக்­கை­யான ஹாஜிகள் கடந்த வருட ஹஜ்ஜில் பங்­கேற்­றி­ருந்­தனர். இவர்­களில் 1,301 ஹாஜிகள் உயி­ரி­ழந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இதில் 83 சத­வீ­த­மா­ன­வர்கள் சட்­ட­வி­ரோ­த­மாக ஹஜ் கட­மையை நிறை­வேற்ற வந்­த­வர்கள் என்ற விடயம் பின்னர் தெரி­ய­வந்­தது.

நேரடி சூரிய வெளிச்­சத்தின் கீழ் நீண்ட தூரம் நடந்­தமை மற்றும் தங்­கு­வ­தற்கு பொருத்­த­மான இடம் கிடைக்­காமை போன்ற கார­ணங்­க­ளி­னா­லேயே இந்த உயி­ரி­ழப்­புக்கள் ஏற்பட்ட விடயம் பின்னர் கண்­ட­றி­யப்­பட்­டது.

இது போன்ற எண்­ணிக்­கை­யான உயி­ரி­ழப்­புக்கள் இந்த வருட ஹஜ்ஜில் இடம்­பெறக் கூடாது என்ற அடிப்­ப­டையில் சவூதி அரே­பியா அர­சாங்­கத்­தினால் பல்­வேறு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

சவூதி அரே­பி­யாவின் பிர­த­மரும் முடிக்­கு­ரிய இள­வ­ர­ச­ரு­மான முஹம்மத் பின் சல்­மானின் நேரடி ஆலோ­ச­னையின் பிர­காரம் இந்த நட­வ­டிக்­கைகள் அனைத்தும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. இதற்­காக ஹஜ்­ஜுடன் தொடர்­பு­டைய அனைத்து விட­யங்­களும் டிஜிட்டல் மயப்­படுத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

சவூதி விஷன் 2030 என்ற செயற்­திட்­டத்தின் ஊடாக இந்த டிஜிட்டல் மய­மாக்கம் இடம்­பெற்­றது. இதன் பிர­காரம், நுஸுக் எனும் அடை­யாள அட்டை ஹாஜி­க­ளுக்­காக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஹஜ் விசா­விற்­காக சேக­ரிக்­கப்­பட்ட அனைத்து தக­வல்­களும் இந்த அடை­யாள அட்­டையில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த அடை­யாள அட்­டை­யின்றி ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்ற எவரும் மக்­கா­வினுள் நுழைய முடி­யாது என்ற கடு­மை­யான உத்­த­ரவு பிறப்­பி­க்கப்­பட்­டி­ருந்­தது. இந்த உத்­த­ர­வி­னையும் மீறி 197 பேரை அழைத்து வந்த குற்­றச்­சாட்டில் 49 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக ஹஜ் பாது­காப்பு படை அறி­வித்­துள்­ளது.

இவர்­க­ளுக்கு ஒரு இலட்சம் சவூதி ரியால் தண்டம் உள்­ளிட்ட பல தண்­ட­னைகள் விதிக்­கப்­படும் என­வும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த வரு­டத்­தினை விட அதிக வெப்ப நிலை இந்த வருட ஹஜ்ஜின் போது காணப்­பட்ட போதிலும், அதிக எண்­ணிக்­கை­யி­லான மர­ணங்கள் நிக­ழ­வில்லை.

இதற்கு பிர­தான காரணம் சவூதி அரே­பி­யா­வினால் விதிக்­கப்­பட்ட கடு­மையா கட்டுப்பாடுகளும் தொடர்ச்­சி­யாக ஹாஜி­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வந்த விழிப்­பு­ணர்­வு­க­ளு­மாகும்.

இதேவேளை இரு புனித ஸ்தலங்­களின் பாது­கா­வ­லரும் சவூதி அரே­பிய மன்­ன­ரு­மான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சவூதின் விருந்­தா­ளி­க­ளாக காஸா பகு­தியில் உயிர்­களை தியாகம் செய்த, காய­முற்­ற­வர்­களின் உற­வி­னர்கள் 1,000 பேர் ஹஜ் யாத்திரையில் பங்­கேற்­றி­ருந்­தனர்.

அதே­வேளை, காஸாவில் இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்­பினால் ஏற்­ப­டு­கின்ற பேர­ழி­வு­களை முடிக்கு கொண்­டு­வர சர்­வ­தே­சத்தின் பங்­க­ளிப்­பினை சவூதி அரே­பி­யாவின் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் வலி­யுறுத்தினார்.

அத்­துடன் அப்­பா­வி­களை பொது­மக்­களை பாது­காத்து சர்­வ­தேச சட்­ட­பூர்வ தீர்­மா­னங்­களின் பிர­காரம் பலஸ்­தீ­னத்தில் அமை­தியை அனு­ப­விக்­கக்­கூ­டிய புதிய யுகத்­தினை நோக்கிச் செயல்­பட அவர் அழைப்பு விடுத்தார்.

ஹஜ்ஜில் பங்­கேற்க வந்த உலக நாட்டுத் தலை­வர்கள் மற்றும் முக்­கிய விருந்­தி­னர்­க­ளுக்­காக வரு­டாந்தம் வழங்­கப்­ப­டு­கின்ற வர­வேற்பு நிகழ்வில் உரை­யாற்றும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இலங்கை ஹஜ் குழு
இந்த வருடம் இலங்கை ஹஜ் குழுவும் பல்வேறு திட்டங்களை வகுத்து செயற்பட்டதன் மூலம் யாத்திரிகர்களின் திருப்தியைப் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. ­
கொவிட் -–19 தொற்­றுக்கு பிறகு கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்ட ஹஜ்ஜின் போது இலங்கை ஹாஜிகள் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கி­யி­ருந்­தனர். இது போன்ற அசௌ­க­ரி­யங்கள் இந்த வருட ஹஜ்ஜில் இடம்­பெ­றக்­கூ­டாது என்ற விட­யத்தில் இலங்கை அரச ஹஜ் குழு கடு­மை­யாக செயற்­பட்­டது.

இதற்­காக வேண்டி ஜித்­தா­வி­லுள்ள இலங்கை கொன்­சி­யூலர் அலு­வ­ல­கத்­துடன் இணைந்து இலங்கை அரச ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஆகி­யன பல நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தன.
குறிப்­பாக அனைத்து ஹாஜி­களும் ஒரே தரத்­தில் அமைந்த கூடா­ரத்தில் அரபா மற்றும் மினாவில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் 49 ஹாஜி­க­ளுக்கு ஒரு பஸ் என்ற அடிப்­ப­டையில் பஸ்­கள் ஏற்­பாடு செய்யப்பட்டன.

இந்த விட­யங்­களில் இலங்கை அரச ஹஜ் குழு வெற்றி கண்ட போதிலும், மினா கூடா­ரத்தில் இலங்கை ஹாஜிகள் சில நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கி­யதை எம்மால் நேர­டி­யாக அவ­தா­னிக்க முடிந்­தது.

இதனை இலங்கை அரச ஹஜ் குழு மற்றும் ஹஜ் முகவர் நிறு­வ­னங்­களின் சங்கம் ஆகி­யன பகி­ரங்­க­மாக ஏற்­றுக்­கொண்­டுள்­ளன.

மினா மற்றும் அரபா ஆகிய இடங்­களில் இலங்கை ஹாஜிகள் தங்­கிய கூடா­ரங்­களில் இலங்கை ஹஜ் குழு­வினர் பல தட­வை­களில் மேற்­கொண்ட திடீர் விஜ­யங்­களின் போதே இந்த குறை­பா­டுகள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன.

இந்த தவ­றுகள் அடுத்த முறை இடம்­பெ­றாத வண்ணம் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்ற பகி­ரங்க உறு­தி­மொ­ழிகள் மினாவில் வைத்து இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹு­லா­ரி­னாலும் ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் தலைவர் கரீம் ஹாஜி­யி­னாலும் ஊட­கங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன.

இதே­வேளை, இந்த வருடம் ஹாஜி­க­ளுக்கே நாம் முன்­னு­ரிமை வழங்­கினோம். ஹாஜிகள் எதிர்­நோக்­கிய பிரச்­சி­னைகள் தொடர்பில் விரி­வான கலந்­து­ரை­யா­ட­லொன்றை முன்­னெ­டுக்­க­வுள்ளோம். இந்த விட­யங்கள் தொடர்பில் தீர்­வு­களை பெறு­வ­தற்­காக உரிய தரப்­பி­ன­ருடன் பேச்­சுக்­களை நடத்­த­வுள்ளோம் என இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலார் எம்­மிடம் தெரி­வித்தார்.

பல எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யி­லேயே அனைத்து ஹாஜி­க­ளையும் ஒரே தரத்­திலமைந்த கூடா­ரத்தில் அமர்த்­தினோம். இதனை இப்­போது அனை­வரும் பாராட்­டு­கின்­றனர் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் கூறி­யது போன்று உரிய தரப்­பி­ன­ருடன் பேச்சு நடத்­து­வதன் ஊடாக அடுத்த வருடம் இலங்கை ஹாஜி­க­ளுக்கு சிறந்த சேவை­களை வழங்க வேண்டியது அவசியமாகும்.

அதனை இப்­போ­தி­ருந்தே ஆரம்பிக்க வேண்டியது இலங்கை ஹஜ் குழுவின் பணியாகும். ஏனெனில் அடுத்த வருடத்திற்கான ஹஜ் கடமை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் இப்போதே சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார அமைச்சு ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயத்தில் இலங்கை ஹஜ் குழு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகம் ஆகியன இணைந்து இப்போதிருந்தே நடவடிக்கைகளை முன்னெடுத்தால் இலங்கை ஹாஜிகளுக்கு அடுத்த வருட ஹஜ்ஜில் வினைத்திறனான பல சேவைகளை வழங்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதேபோன்று மினா கூடாரத்தில் வைத்து ஊடகங்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை அமுல்படுத்த ஹஜ் குழு நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகும். இது தொடர்பில் ஊடகங்கள் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.