இலங்கையில் நிறுவப்படும் சட்டவிரோத யூத மதத்தலங்கள்!

0 85

எஸ்.என்.எம்.சுஹைல்

இலங்­கையில் அண்­மைக்­கா­ல­மாக பல யூத மதஸ்­தா­னங்கள் இயங்கத் தொடங்­கி­யுள்­ள விடயம் தற்­போது பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது. இஸ்­ரே­லிய சுற்­றுலா பய­ணிகள் இலங்­கையில் தங்­க­ளுக்­கான மத வழி­பாட்டு நிலை­யங்­களை உரு­வாக்கி வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கின்ற நிலையில், அவை சட்ட அனு­ம­தி­க­ளின்றி இயங்­கு­வது தொடர்பில் பல கேள்­விகள் எழுந்­துள்­ளன. இது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்ட கேள்­விகள் வழி­யாக, அரசின் பதில்கள் மற்றும் நிலைப்­பா­டுகள், சமூ­கத்தில் புதிய விவா­தங்­களை உரு­வாக்­கி­யுள்­ளது.

இலங்­கையில் பிர­தா­ன­மாக நான்கு மதங்கள் பின்­பற்­றப்­ப­டு­கின்­றன. அதி­க­மானோர் பௌத்த மதத்தை பின்­பற்­று­வ­துடன் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்­தவ மதத்தை பின்­பற்­று­ப­வர்­களும் இருக்­கின்­றனர். 1978 ஆம் ஆண்டு இலங்கை ஜன­நா­யக சோஷ­லிச குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பின் கீழ் 14 ஆவது சரத்து மத சுதந்­தி­ரத்தை உறு­தி­ப்ப­டுத்­து­கி­றது.
இதன்­படி, ஒவ்­வொ­ரு­வரும் தனி­யா­கவோ, அல்­லது பிற­ருடன் சேர்ந்து, பொது­வா­கவோ, தனிப்­பட்ட முறை­யிலோ, தமது மதத்தை வழி­பட, கடைப்­பி­டிக்க, கடைப்­பி­டித்துக் கற்­பிக்க, அதன் நெறி­களைப் பின்­பற்ற உரிமை பெற்­றுள்­ளனர். மத நிலை­யங்கள் அமைப்­ப­தற்­கான சட்ட ஏற்­பா­டு­களும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

இலங்­கையில் புதிய மத ஸ்தானம் ஒன்றை நிறு­வு­வ­தற்­கான சட்ட மற்றும் நிர்­வாக விதி­மு­றைகள் வெவ்­வே­றாக இருக்­கலாம். ஆனால் எல்லா மதத்­திற்கும் பொது­வான விதி­மு­றை­களும் உள்­ளன. குறிப்­பாக மதஸ்தானம் அமைக்­கும்­போது காணி உரிமை மற்றும் அனு­மதி பெறு­வது அவ­சி­ய­மா­கி­றது. அத்­துடன், கட்­டட நிர்­மா­ணத்­துக்­கான அனு­ம­தியை உள்­ளூ­ராட்சி அதி­கார சபை­யிலும் பிர­தேச செய­ல­கங்­க­ளிலும் பெற வேண்­டி­யுள்­ளது. சில­போது நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் அனு­ம­தியும் அவ­சி­ய­மா­கி­றது.
இத­னி­டையே, முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் 1956 ஆம் ஆண்டு 51 ஆம் இலக்க வக்பு சட்­டத்தின் கீழ் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்ய வேண்­டி­யுள்­ளது.

இந்துக் கோயில்கள் பெரும்­பாலும் தனிப்­பட்ட நபர், குடும்ப அல்­லது சங்­கங்கள் வழி­யாக நிர்­வாகம் செய்­யப்­ப­டு­கின்­றன. எனினும், இந்து கோயில்கள் இந்து சமய, கலா­சார திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட வேண்­டிய அவ­சி­யமும் உள்­ளது.

கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் பெரும்­பாலும் பதிவு செய்­யப்­பட்ட அமைப்­புகள் ஊடாக செயல்­ப­டு­கின்­றன. வெளி­நாட்டு உத­விகள் பெற்­றுக்­கொள்ளும் தேவா­ல­யங்­க­ளுக்கு மத விவ­கார அமைச்சு மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சின் அனு­ம­தியும் தேவைப்­ப­டு­கி­றது. இவற்றின் பதி­வு­கள் கிறிஸ்­தவ மத விவ­கார திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­ப­டு­கின்­றன.

புதி­தாக பௌத்த விகா­ரை­களை நிறுவும் போது 1931 ஆம் ஆண்டு 19 இலக்க சட்­டத்­திற்கு அமைய புத்­த­சா­சன அமைச்சின் கீழ் பதிவு செய்­வது அவ­சி­ய­மா­கி­றது.

இலங்­கையில் புதிய மதஸ்­த­லங்­களை நிறு­வு­வ­தற்கு சட்ட அனு­மதி மற்றும் நிர்­வாக ஒழுங்­குகள் அனைத்தும் அவ­சி­ய­மாகும். இது நாட்டின் பன்­மத, பல்­பண்­பாட்டு அமைப்பை பாது­காக்கும் நோக்­கத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், அண்­மைக்­கா­ல­மாக நாட்டில் புதிய சவால் ஒன்று உரு­வெ­டுத்­துள்­ளது. குறிப்­பாக யூத மத வழி­பாட்­டுத்­தலங்கள் நாட்டில் பல இடங்­களில் நிறு­வப்­பட்டு வரு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் எழுந்­துள்­ளன. இலங்­கையில் யூத மதத்தை பின்­பற்­று­ப­வர்கள் இல்­லாத நிலையில் சுற்­றுலாப் பய­ணி­க­ளாக வரும் இஸ்­ரே­லி­யர்கள் அல்­லது யூதர்­க­ளுக்­காக ஆங்­காங்கே இவ்­வாறு மத நிறு­வ­னங்கள் அமைக்­கப்­பட்டு வரு­வ­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

இந்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் புத்த சாசன, மத விவ­கா­ரங்கள் மற்றும் கலா­சார அமைச்­ச­ரிடம் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். இதன்­மூலம், யூத மத நிலை­யங்கள் இலங்­கையில் நிறு­வப்­பட்­டுள்­ளமை உறு­தி­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. அத்­துடன் பல்­வேறு விட­யங்­களும் இந்த கேள்வி நேரத்தில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அவற்றை நாம் விரி­வாக பார்ப்போம்,
கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் புத்­த­சா­சன அமைச்சர் ஹினி­தும சுனில் சென­வி­யிடம் கேட்ட கேள்­வி­களும் அதற்கு அமைச்சர் அளித்த பதில்­களும் வரு­மாறு,

முஜிபுர் ரஹ்மான்: இஸ்ரேல் இனத்­த­வர்­களின் சமய மற்றும் கலா­சார நிலை­யங்கள் இலங்­கையில் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ள­னவா?
அமைச்சர் : ஆம்
முஜிபுர் ரஹ்மான்: அவை ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள பிர­தே­சங்கள் யாவை?
அமைச்சர் : நான்கு இடங்­களில் இவ்­வா­றான சமய மற்றும் கலா­சார நிலை­யங்கள் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளன.
01 பொத்­துவில் பிர­தே­சத்தில்
02 வெலி­கம பிர­தே­சத்தில்
03 திம்­பி­ரி­கஸ்­யாய பிர­தே­சத்தில்
04 எல்ல பிர­தே­சத்தில்
முஜிபுர் ரஹ்மான்: அவற்­றுக்கு சட்­ட­ரீ­தி­யாக அனு­மதி பெறப்­பட்­டுள்­ள­தா என்­பதை சபைக்கு அறி­விப்­பீ­ராக?
அமைச்சர் : இந்த நான்கு ஸ்தானங்­களில் இரண்­டுக்கு சட்ட ரீதி­யாக அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. மற்றை இரண்டும் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை. பொத்­துவில் பிர­தே­சத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள மத்­திய நிலையம் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை. அதே போன்று திம்­பி­ரி­கஸ்­யாய பிர­தே­சத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள மத்­திய நிலை­யமும் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை. வெலி­கம மற்றும் எல்ல பகு­தியில் அமைக்­கப்­பட்­டுள்ள நிலை­யங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.
முஜிபுர் ரஹ்மான்: சட்­ட­ரீ­தி­யாக அனு­மதி பெறப்படாமை ஏன்?
அமைச்சர் : பொத்­துவில் பிர­தே­சத்தில் பதிவு செய்­யப்­ப­டா­மைக்­கான காரணம் தெரி­யாது. கிராம உத்­தி­யோ­கத்தர் இது தொடர்­பான மேற்­பார்­வைக்­காக அவ்­வி­டத்­திற்கு சென்­ற­போது, அந்த இடத்தில் யாரும் இருக்­க­வில்லை. இந்­நி­லையில், கிராம சேவகர் அங்­குள்ள பொது மக்­க­ளிடம் விப­ரத்தை கேட்­ட­றிந்­து­கொண்டார். இதன்போது, இந்த இடம் தனி­யா­ருக்கு சொந்­த­மான காணி எனவும் அதனால் இது பதிவு செய்­யப்­ப­ட­வில்லை எனவும் பொது­மக்கள் கூறி­யுள்­ளனர்.

சுற்­று­லா­வுக்­காக வரு­கின்ற இஸ்ரேல் இனத்­த­வர்கள் இங்கு மத வழி­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்­றனர். தற்­போது அவர்கள் நாட்டில் இருந்து வெளி­யேறிச் சென்­றுள்­ளனர். எனவே, அங்கு மத வழி­பா­டுகள் இடம்­பெ­று­வ­தில்லை.

திம்­பி­ரி­கஸ்­யாய பிர­தே­சத்­தி­லுள்ள நிலை­யமும் மத நிலை­ய­மாக பதிவு செய்­யப்­பட்­ட­மைக்­கான அறிக்­கைகள் ஏதும் இல்லை. அங்கு நான்கு பேர் தங்­கி­யி­ருப்­ப­தா­கவும் மத­வ­ழி­பா­டு­க­ளுக்கு வேறு ஆட்­களும் அங்கு வந்து செல்­வ­தா­கவும் அறியக் கிடைக்­கி­றது.
பதிவு செய்­யப்­பட்­டி­ருக்கும் இரண்டு இஸ்ரேல் மத நிலை­யங்­களும் (வெலி­கம, எல்ல) கம்­ப­னி­களை பதிவு செய்யும் அலு­வ­ல­கத்­தி­லேயே பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. 2022 ஏப்ரல், 21 ஆம் திகதி இந்த பதிவு நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றுள்­ளன.
இதுவே எனது பதில்­க­ளாகும்.

இந்­நி­லையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் புத்­த­சா­சன அமைச்­ச­ரிடம் மேல­திக கேள்­வி­க­ளையும் கேட்­டி­ருந்தார். அதற்கு புத்­த­சா­சன அமைச்சர் வழங்­கிய பதில்களை இனி பார்ப்போம்.

முஜிபுர் ரஹ்மான்: இப்­போ­தைக்கு நான்கு மதஸ்­தா­னங்கள் இருக்­கின்­றன, அவற்றில் இரண்டு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன என்­ப­தாக அமைச்­சரே நீங்கள் குறிப்­பிட்­டி­ருந்­தீர்கள்.
அதே­போன்று கொழும்பில் மேலும் இரண்டு இடங்­களில் இது­போன்ற நிலை­யங்கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. கொழும்பு 7 இல் சினமன் ரெட் ஹோட்­ட­லுக்கு அரு­கா­மை­யிலும், தெஹி­வளை அல்விஸ் பிர­தே­சத்­திலும் இஸ்ரேல் மத நிலை­யங்கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன.

இது தொடர்­பாக நான் கடந்த டிசம்பர் மாதம் பிர­த­மரிடம் வின­வி­யி­ருந்தேன். இதன்­போது, இவை சட்ட ரீதி­யற்ற முறையில் அமைக்­கப்­ப­டு­பவை என்­ப­தையும், பதிவு செய்­யப்­ப­ட­வில்லை என்­ப­தையும் பிர­தமர் ஏற்­றுக்­கொண்­டி­ருந்தார். அந்த இரண்டு கட்­ட­டங்­களும் பொலிஸ் மற்றும் அதி­ரடிப் படை­யி­னரின் பாது­காப்­புடன் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவை சட்ட ரீதி­யற்ற முறையில் அமைக்­கப்­ப­டு­வ­தாக பிர­தமர் அறிந்­து­கொண்­டுள்ளார். டிசம்­ப­ரி­லி­ருந்து தற்­போது 7 மாதங்கள் கடந்­துள்­ளன. சட்ட ரீதி­யற்ற முறையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் இந்த மத நிலை­யங்கள் பற்றி உங்­க­ளு­டைய நிலைப்­பாட்டை தெரிந்­து­கொள்ள விரும்­பு­கிறேன்.

அமைச்சர் : இது தொடர்­பாக நான் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்­ச­ரிடம் விப­ரங்­களை கேட்­ட­றிந்தேன். அதி­ர­டிப்­ப­டையின் பாது­காப்பை நீக்கிக் கொண்­டுள்­ள­தாக குறிப்­பிட்டார். இது தொடர்­பான மேல­தி­க­மாக தெரிந்­து­கொள்ள வேண்­டு­மெனில் அவ­ருடன் கலந்­து­ரை­யா­டலாம்.

இஸ்ரேல் மத நிலை­யங்களை பதி­வு­ செய்வது சிக்­க­லுக்­கு­ரிய விட­ய­மாகும். ஏனெனில், பிர­தான நான்கு மத ஸ்தலங்­களை பதிவு செய்­வ­தற்கு அவற்­றுக்­கான திணைக்­க­ளங்கள் இருக்­கின்­றன. அதற்­கான சட்ட ஏற்­பா­டு­களும் நடை­மு­றையில் உள்­ளன. ஆனால், கம்­பனி சட்­டத்தின் கீழ் இவ்­வாறு பதிவு செய்­யப்­ப­டு­வது சாதா­ர­ண­மான சிற்­றுண்­டிச்­சா­லைகள், வியா­பார நிலை­யங்கள் என்­ப­ன­வாகும். அந்த முறை­யி­லேயே இஸ்ரேல் மத நிலை­யங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. ஆனால் அங்கு இதை­விட வேறு நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இது தொடர்­பான தக­வல்­களை சேக­ரிப்­பது மிகவும் கடி­ன­மா­ன­தாகும். எமது அமைச்­சிற்கு கீழ் இருக்கும் நான்கு மதங்­க­ளுங்­க­ளுக்­கான திணைக்­க­ளங்­க­ளுக்கு உட்­பட்­ட­தாக இது இல்லை. எனவே, பிர­தேச செய­ல­கங்கள் உள்­ளிட்ட வேறு இடங்­க­ளி­லேயே இவை அமை­யப்­பெற்­றுள்­ளன. இது­கு­றித்த தக­வல்கள் கிடைக்­கும்­போ­துதான் பதி­வுகள் இருக்­கி­றதா இல்­லையா என்று எம்மால் தேடிப்­பார்க்க முடி­யு­மா­ன­தாக உள்­ளது.

நீங்கள் கேட்கும் விட­யங்கள் சரி­யா­னவை, அவை தொடர்பில் நாம் ஆராய்ந்து வரு­கின்றோம். திணைக்­கள பிர­தா­னி­க­ளு­ட­னும் இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம். கிடைக்கும் தக­வல்­களின் அடிப்­ப­டை­யி­லேயே நாம் தேடிச் செல்­கின்றோம்.
முஜிபுர் ரஹ்மான்: கொழும்பு 7 இல் அமைக்­கப்­பட்­டு­வரும் இஸ்ரேல் மத நிலை­யத்­திற்கு விசேட அதி­ர­டிப்­ப­டையின் பாது­காப்பு நீக்­கப்­பட்­டாலும் தொடர்ந்தும் பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்டு வரு­கி­றது. நீங்­களும் அங்கு சென்று இதனை பார்க்க முடியும்.

எமது நாட்டில் யூதர்கள் இல்லை. அப்­ப­டி­யி­ருக்­கும்­போது யூதர்­க­ளுக்­கான மத ஸ்தலம் எதற்கு என்ற கேள்வி எழு­கி­றது. இஸ்ரேல் என்­பது குழப்­ப­க­ர­மான நாடாகும். மொசாட் என்­பது எமது நாட்டில் இடம்­பெற்ற உள்­நாட்டு யுத்த காலத்­தின்­போது விடு­தலை புலி­க­ளுக்கு யுத்த பயிற்சி வழங்­கி­யது. இன்று எமது நாட்­டுக்­குள்ளும் இஸ்ரேல் மத ஸ்தானங்கள் அமைப்­பதன் ஊடாக மறை­மு­க­மாக உள்­நு­ழை­கின்­றனர் என்­பதே எனது நிலைப்­பா­டாகும். அவ்­வாறு இருக்­கும்­போது ஏன் நீங்கள் இஸ்ரேல் தொடர்பில் மென்­மை­யாக நடந்­து­கொள்­கின்­றீர்கள்?

அவர்கள் நாட்­டுக்குள் முரண்­பா­டு­களை தோற்­று­விக்­கக்­கூ­டி­ய­வர்கள் என்­பதை அறிந்­­துள்­ளீர்கள். காஸாவில் இஸ்ரேல் மேற்­கொள்ளும் பாரிய இன அழிப்பு குறித்து அறிந்­தி­ருந்தும், அநா­வ­சி­ய­மாக அமைக்­கப்­படும் இந்த மத நிலை­யங்­க­ளுக்கு இட­ம­ளிப்து ஏன்?
இந்த கட்­ட­டங்கள் சட்­ட­வி­ரோ­த­மா­னது என்­பதை அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­நி­லையில் பொலிஸ் பாது­காப்பு வழங்­கு­வ­தா­னது அவற்­றுக்கு சட்ட அங்­கீ­கா­ரத்தை வழங்­கு­வ­தாக அமை­கி­றது. இது இரட்டை நிலைத்­தன்­மையை வெளிப்­ப­டுத்­து­கி­றது. அப்­படி அமைய முடி­யாது.

சட்­ட­வி­ரோ­த­மான கட்­ட­டங்கள் தொடர்பில் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு இந்த அர­சாங்­கத்­திற்கு இன்னும் எவ்­வ­ளவு காலம் தேவைப்­படும் என்­பதை அமைச்­ச­ரிடம் கேட்­கிறேன்.
அமைச்சர் : யூதர்­க­ளாக இருக்­கலாம், வேறு நம்­பிக்­கை­யு­டை­ய­வர்­க­ளாக இருக்­கலாம். அவர்­களின் மத ஸ்தானங்­களை பதிவு செய்­வ­தற்­கான முறைமை நாட்டில் இல்லை. யூத இனத்­த­வர்கள் மத வழி­பாட்­டுக்­குத்தான் வரு­கி­றார்கள் என்­பது தொடர்பில் உறு­தி­யான தக­வல்கள் இல்லை. சுற்­றுலா விசாவில் சுற்­றுலா பய­ணி­க­ளா­கவே அவர்கள் இங்கு வரு­கின்­றனர். எனவே, அவர்கள் தொடர்பில் அர­சாங்கம் என்ற அடிப்­ப­டையில் எமக்கு பொறுப்பு இருக்­கி­றது. எல்ல பிர­தேச சபை­யினால் வழங்­கிய அறிக்­கை­யின்­படி சுற்­றுலா பய­ணி­க­ளாக வரு­கின்ற யூத இனத்­த­வர்­க­ளுக்­கான உணவு கலா­சார முறை உள்­ளிட்ட வச­தி­களை ஏற்­ப­டுத்தி கொடுக்க வேண்­டிய நிலை இருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. அதற்­காக தான் இவ்­வா­றான மத ஸ்தானங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. என்­றாலும் இதி­லுள்ள சிக்­கல்­களை நாம் தீர்த்­துக்­கொள்ள வேண்டும்.

பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்­தவ மத ஸ்தானங்­களை இலங்­கையில் நிறு­வு­வ­தற்­கான சட்ட ஏற்­பா­டுகள் இலங்­கையில் இருக்­கின்­றது. ஆனால், யூத மத ஸ்தானங்­களை அமைப்­ப­தற்­கான சட்ட ஏற்­பா­டுகள் இந்­நாட்டில் இல்லை. இந்­நி­லையில் பொத்­துவில், வெலி­கம, திம்­பி­ரி­கஸ்­யாய மற்றும் எல்ல போன்ற பகு­தி­களில் யூத மத ஸ்தானங்கள் நிறு­வப்­பட்­டுள்­ளன. வெலி­கம மற்றும் எல்ல பகு­தியில் கம்­ப­னிகள் சட்­டத்தின் கீழ் பதி­வு­செய்­யப்­பட்டு மத வழி­பா­டுகள் நடை­பெ­று­கின்­றன. மேலும், பொத்­துவில் மற்றும் திம்­பி­ரி­கஸ்­யாய பகு­தி­களில் எவ்­வித சட்ட அனு­ம­தி­யின்றி அமைக்­கப்­பட்­டுள்ள யூத மத ஸ்தானங்கள் குறித்து எந்த நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­டா­துள்­ளது.
கடந்த 2011 ஆம் ஆண்­டிற்கு பிறகு இலங்­கையில் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் பதி­வுகள் மற்றும் மத வழி­பாட்­டுத்­த­ளங்கள் அமைக்கும் விட­யங்­களில் மஹிந்த அர­சாங்கம் கடி­ன­மான போக்கை கடை­பி­டித்து வந்­தது. நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­ச­ராக பதவி வகித்த எம்.எச்.ஏ. ஹலீம் பள்­ளி­வாசல் பதிவு நட­வ­டிக்­கை­களில் பின்­பற்­றப்­பட்டு வந்த இறுக்­க­மான ஏற்­பா­டு­களை தளர்த்­தி­யி­ருந்தார்.

குறிப்­பாக புதி­தாக பள்­ளி­வா­சல்­களை நிறு­வும்­போது அல்­லது பதி­யும்­போது அரு­கி­லுள்ள பௌத்த விகா­ரை­யொன்றின் கடிதம் கோரப்­பட்­டது. இதனை ஹலீம் நீக்­கி­யி­ருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லை­ய­டுத்து அதி­கா­ரத்­துக்கு வந்த கோட்­டா­பய அர­சாங்கம் மீண்டும் பள்­ளி­வாசல் பதிவு விட­யத்தில் இறுக்­க­மான நிலையை பின்­பற்­றி­யது. இவ்­வாறு, நாட்டில் பிர­தான மதங்­களில் ஒன்­றான இஸ்­லா­மிய மத ஸ்தானங்கள் அமைக்­கப்­படும் விட­யத்தில் இலங்கை அர­சாங்கம் மிகவும் பார­பட்­ச­மாக நடந்­தி­ருக்­கி­றது.
மஹிந்த அர­சாங்கம் பள்­ளி­வா­சல்கள் பதிவு விட­யத்தில் மிகவும் மோச­மாக நடந்­து­கொண்­ட­தாக கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளன முன்னாள் தலைவர் அஸ்லம் ஒத்மான் குறிப்­பிட்டார்.

‘மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்­கத்தில் பள்­ளி­வா­சல்கள் பதி­வுகள் நிறுத்­தப்­பட்­டன. அத்­தோடு, பள்­ளி­வா­சல்கள் பதி­வுகள் விட­யத்தில் பல்­வேறு அநா­வ­சி­ய­மான நிபந்­த­னைகள் திணிக்­கப்­பட்டு நெருக்­க­டி­களை சந்­திக்க நேரிட்­டது. ஈஸ்டர் தின தாக்­கு­த­லுக்கு பிறகு பள்­ளி­வாசல் பதி­வுகள் அல்­லது புதிய பள்­ளி­வா­சல்­களை நிறு­வு­வது குறித்து பேசவே முடி­யாத நிலை ஏற்­பட்­டது. எனினும், அர­கல போராட்­டத்­திற்கு பின்னர் கடந்த மூன்று வரு­டங்­க­ளுக்குள் இந்த நிலைமை மாற்­ற­ம­டைந்­தது’ என கூறினார் அஸ்லம் ஒத்மான்.
அத்­துடன், ‘இன்று எந்த தடங்­க­லு­மின்றி இஸ்­ரே­லிய மத ஸ்தானங்­களை நிறு­வுவ­தற்கு ஆட்­சி­யா­ளர்கள் இட­ம­ளிக்­கின்­றனர். சட்­ட­வி­ரோ­த­மாக நிறு­வப்­படும் யூத மதஸ்­தா­னங்­க­ளுக்கு பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­ப­டு­கின்­ற­மை­யா­னது அவர்­களின் இந்த அத்­து­மீ­றிய செயற்­பா­டு­களை சட்­ட­ரீ­தி­யா­ன­தாக மாற்­று­வ­தா­கவே அமைகிறது்’ என்று அஸ்லம் ஒத்­மான் குறிப்­பிட்டார்.

அத்­தோடு, கிறிஸ்­தவ தேவா­லயங்கள் விட­யத்­திலும் கடந்த சில தசாப்­தங்­க­ளாக நாட்­டிற்குள் பல நெருக்­கு­வா­ரங்கள் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.
இலங்­கையில் யூத மத ஸ்தானங்கள் அமைக்­கப்­ப­டு­வ­தா­னது அமெரிக்க அர­சியல் பின்­னணி கொண்­டவை என கிறிஸ்­தவ ஒத்­து­ழைப்­புக்­கான இயக்­கத்தின் இணைப்­பாளர் அருட்­தந்தை மா.சக்திவேல் கூறு­கின்றார்.

‘பலஸ்­தீ­னத்தில் இஸ்ரேல் மேற்­கொள்ளும் அட்­டூ­ழி­யங்­க­ளுக்கு கண்­டனம் தெரி­விக்க முடி­யாத இந்த அநுர அர­சாங்கம் யூத மத ஆல­யங்கள் அமைப்­ப­தற்கு இட­ம­ளிக்­கி­றது. அமெ­ரிக்­கா­வுக்கு அடி­ப­ணிந்தே இஸ்ரேல் சார்பு நிலையை இந்த அர­சாங்கம் எடுத்து வரு­கி­றது. இந்த நாட்டில் சம­யங்­க­ளுக்­கி­டையே மேலும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த இஸ்ரேல் எத்­த­னிக்­கி­றது. அதற்கு சாத­க­மான சூழலை அர­சாங்கம் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கி­றது. இலங்­கை­யி­லுள்ள முஸ்­லிம்­க­ளையும் கிறிஸ்­த­வர்­க­ளையும் அச்­ச­மூட்­டு­வ­தற்­கா­கவும் இஸ்­ரே­லி­யர்­களின் அதி­கா­ரத்தை இலங்­கையில் நிலை­நி­றுத்­து­வ­தற்­கா­க­வுமே இங்கு கிறிஸ்­தவ ஆல­யங்கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. இதனை எதிர்க்க முடி­யாத நிலை­மை­யொன்று ஏற்­பட்­டி­ருக்­கின்­றமை வேத­னை­ய­ளிக்­கி­றது’ என்று அருட்­தந்தை சக்­திவேல் குறிப்­பிட்டார்.

இது இவ்­வா­றி­ருக்­கையில், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ள­னத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய இரா­ஜ­தந்­தி­ரியும் ஜெனீவாவுக்­கான இலங்­கையின் முன்னாள் வதி­விடப் பிர­தி­நி­தி­யு­மான கலா­நிதி தயான் ஜய­தி­லக பேசுகையில், ‘யூதர்­களே இல்­லாத இலங்­கையில் ‘சபாத் இல்லம்’ என்று அழைக்­கப்­படும் அவர்­க­ளது வணக்­க­வ­ழி­பாட்டு மற்றும் பிர­சார நிலை­யங்கள் நிறு­வப்­பட்டு இயங்கி வரு­கின்­றன. அவற்­றுக்கு இலங்­கையின் அரச பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் இந்த அர­சாங்கம் என்ன செய்யப் போகி­றது?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.

இலங்கை பன்­மைத்­துவ சமூக கட்­ட­மைப்பை கொண்ட நாடாகும். எனினும், எந்­த­வொரு மத ஸ்தலத்­தையும் நிறுவும் முன் அது அங்­கீ­காரம் பெற வேண்டும் என்றும், பதிவு செய்­யப்­பட வேண்­டு­மென்று இலங்கை அர­சாங்கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இந்­நி­லையில் யூத மதஸ்­தா­னங்கள் அமைப்­ப­தற்கு எந்­த­வொரு கட்­டுப்­பாடும் இல்லா நிலைமை பல்­வேறு கேள்­வி­களை ஏற்­ப­டுத்­து­கி­றது. நாட்டில் எந்­த­வொரு விடயம் முன்­னெ­டுக்­கப்­ப­டும்போதும் சட்­டத்­துக்கு உட்­பட்டு செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். எனினும், யூத மத ஸ்தானங்கள் விட­யத்தில் இந்­த­ளவு பரா­மு­க­மாக செயற்­ப­டு­வ­தா­னது பல்­வேறு பின்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்த வாய்ப்பு இருக்­கி­றது. எனவே, இந்த விட­யத்தை அர­சாங்கம் கருத்­திற்­கொண்டு அடுத்த நகர்­வு­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தொன்­றாகும்.

யூத மதஸ்­தா­னங்­களைப் பதிவு செய்­வ­தற்­கான சரி­யான சட்ட நடை­மு­றைகள் இல்­லாத நிலையில், அவை சட்ட விரோ­த­மாக இயங்­கு­கின்­ற­னவோ அல்­லது சுற்­றுலா பய­ணி­களின் வச­தி­க­ளாக மட்­டுமே நிறு­வப்­பட்­டுள்­ள­னவா என்­பது ஒரு குழப்­ப­நி­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதே­வேளை, கடந்த காலங்­களில் பிற மதஸ்­தா­னங்­க­ளுக்கு கடு­மை­யான விதி­மு­றைகள் விதிக்­கப்­பட்­ட ­நி­லையில், யூத மதஸ்­தா­னங்­க­ளுக்கு வழங்­கப்­படும் அர­சாங்­கத்தின் சாத­க­மான நிலைப்­பாடு நாட்டு சட்டத்திற்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது. இது தொடர்பான தெளிவான சட்டரீதியான முன்மொழிவுகளும், சமநிலையுடைய நடைமுறைகளும் இன்றைக்கு அவசியமாகின்றன.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.