குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ரணில் ஒன்றரை மணிநேர வாக்குமூலம்

0 128

முன்னாள் சுகா­தார அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெ­ல­வினால் அளிக்­கப்­பட்ட முறைப்­பாட்டை அடுத்து, முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க நேற்­றைய தினம் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவில் முன்­னி­லை­யாகி வாக்­கு­மூலம் வழங்­கினார்.

இம்­யு­னோ­கு­ளோ­புளின் மருந்து இறக்­கு­மதி விவ­காரம் தொடர்பில் முன்னாள் சுகா­தார அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெ­ல­வினால் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவில் ஏற்­க­னவே முறைப்­பா­டொன்று அளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரி­வி­னரால் அம்­மு­றைப்­பாடு தொடர்­பான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் நிலையில், இது­கு­றித்து முன்­னைய அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் சிலர் ஏற்­க­னவே குற்­றப்­பு­ல­னாய்­வுத்­தி­ணைக்­க­ளத்தில் வரு­கை­தந்து வாக்­கு­மூலம் வழங்­கி­யி­ருந்­தனர்.

இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் நேற்று புதன்­கி­ழமை குற்­றப்­பு­ல­னாய்­வுத்­தி­ணைக்­க­ளத்­துக்கு வரு­கை­தந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுமார் ஒருமணிநேரம் வரை வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறினார். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.