ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை ஒதுக்கி வைக்க விரும்பும் ஐரோப்பிய இளைஞர்கள்

0 63

எம்.ஐ.அப்துல் நஸார்

இணையத் தொடர்­புகள் இல்­லாத காலத்தில் வாழவே கிட்­டத்­தட்ட அரை­வா­சிக்கும் மேற்­பட்ட இளை­ஞர்­கள் விரும்­பு­வ­தாக பிரித்­தா­னி­யாவில் மேற்­கொள்­ளப்­பட்ட கணக்­கெ­டுப்­பொன்றின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. நெதர்­லாந்தைச் சேர்ந்த நிறு­வனம் ஒன்று ஓப்லைன் சந்­திப்­பு­களை ஏற்­பாடு செய்­வதன் மூலம் முதன்­மு­றை­யாக அத்­த­கை­ய­வர்­க­ளுக்கு வாய்ப்­ப­ளிக்க முன்­வந்­துள்­ளது.

தி ஓப்லைன் கிளப் (The Offline Club) என்ற இன்ஸ்­டா­கிராம் கணக்குப் பக்­கத்தில் கிட்­டத்­தட்ட 530,000 பின்­தொ­டர்­ப­வர்கள் உள்­ளனர். இன்ஸ்­டா­கிராம் உள்­ளிட்ட சமூக ஊட­கங்­க­ளி­லி­ருந்து சுய­நி­னை­வுடன் விடு­பட விரும்­பு­ப­வர்­களை தி ஓப்லைன் கிளப் ஊக்­கு­விக்­கின்­றது.

‘கைய­டக்கத் தொலை­பேசி திரை நேரத்­தை உண்­மை­யான நேர­மாக மாற்­றுதல்’ என்­பது நிகழ்ச்சி முகா­மைத்­துவ நிறு­வ­னத்தின் நெதர்­லாந்தைச் சேர்ந்த மூன்று ஸ்தாப­கர்­க­ளான இலியா நெப்­பல்­ஹவுட், ஜோர்டி வான் பென்­னெகோம் மற்றும் வலண்டிஜ்ன் க்ளோக் ஆகி­யோரால் பயன்­ப­டுத்­தப்­படும் மகுட வாச­க­மாகும்.

‘கடந்த ஒரு வரு­ட­மாக, மூவரும் ஸ்மார்­ட­் கை­ய­டக்கத் தொலை­பே­சிகள் மற்றும் மடிக்­க­ணி­னிகள் அனு­ம­திக்­கப்­ப­டாத சந்­திப்­பு­களை ஏற்­பாடு செய்து வரு­கின்­றனர். ‘உங்கள் ஸ்மார்­ட­் கை­ய­டக்கத் தொலை­பே­சி­களை விட்­டு­விட நீங்கள் தயாரா?’ என்று அவர்கள் இன்ஸ்­டா­கி­ராமில் வினா எழுப்­பி­யுள்­ளனர்.

உண்­மையில், குறைந்­த­பட்சம் இந்த ஒழுங்­க­மைக்­கப்­பட்ட நிகழ்­வு­க­ளுக்­கா­க­வா­வது, தங்கள் ஸ்மார்ட் ­கை­ய­டக்கத் தொலை­பே­சிகளை அணைத்­து­விட அதி­க­மான மக்கள் தயா­ராக இருக்­கின்­றனர்.

தமது ஸ்மார்ட்­ கை­ய­டக்கத் தொலை­பே­சி­களை பயன்­ப­டுத்­து­வ­தற்குப் பதி­லாக, மக்கள் வாசிக்­கி­ன்றனர், விளை­யாட்­டுக்­களில் ஈடு­ப­டு­கின்­றனர், கலை மற்றும் கைவி­னைப்­பொ­ருட்கள் செய்­கி­றார்கள் அல்­லது சில மணி­நேரம் ஓய்­வெ­டுக்­கி­றார்கள். டிஜிட்டல் டிடாக்ஸ் ரிட்ரீட்ஸ் (Digital Detox Retreats) என்ற பெய­ரி­ல­மைந்த பயிற்சிப் பட்­ட­றை­களும் பல நாட்­க­ளுக்கு இடம்­பெ­று­கின்­றன.

‘தொலை­பே­சிகள் இல்­லாத இடங்­களும் ஓப்லைன் சமூ­கங்­களும் இருக்கும் ஒரு உல­கத்தை நாங்கள் கற்­பனை செய்­கிறோம்,’ என மூன்று ஸ்தாப­கர்­களும் தமது வலைத்­த­ளத்தில் எழு­தி­யுள்­ளனர்.

கடந்த ஆண்டு நெதர்­லாந்தில் உரு­வான இந்த எண்­ணக்­கரு உலகம் முழு­வதும் பரவி வரு­கி­றது. ஆம்ஸ்­டர்டாம் இக் கருத்துப் பர­விய முதன்மை இடங்­களில் ஒன்­றாகும், பின்னர் லண்டன், பரிஸ், மிலன் மற்றும் கோபன்­ஹேகன் எனத் தொடர்­கின்­றன.

இந்த முடி­வுகள் 2024 ஆம் ஆண்டின் பிற்­ப­கு­தியில் நடத்­தப்­பட்ட அமெ­ரிக்க ஆய்வு நிறு­வ­ன­மான ஹாரிஸ் போல்ஸ் (Harris Polls) போன்ற ஏனைய கருத்­துக்­க­ணிப்­பு­க­ளுடன் ஒத்­துப்­போ­கின்­றன. அந்த கணக்­கெ­டுப்பில், பல இளை­ஞர்கள் டிக்டொக், இன்ஸ்­டா­கிராம் அல்­லது எக்ஸ் போன்­றவை ஒரு­போதும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருக்கக் கூடாது என்று விரும்­பினர்.

ஸ்மார்­ட் கை­ய­டக்கத் தொலை­பே­சி­களின் பயன்­பாட்­டிற்கு ஊர­டங்கு உத்­த­ர­வுகள் போல கட்­டாய தடை விதிக்­கப்­ப­டு­வது தொடர்பில் பரி­சீ­லிக்­கப்­ப­டு­வதை சூச­க­மாக பிரித்­தா­னிய தொழில்­நுட்ப அமைச்சர் பீட்டர் கைல் தெரி­வித்­த­தாக தி கார்­டியன் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான வய­தெல்­லையை 13 இலி­ருந்து 15 ஆக உயர்த்த வேண்­டு­மென நோர்வே விரும்­பு­கி­றது.

உல­க­ளா­வி­ய ­ரீ­தியில் முன்­னோ­டி­யாக காணப்­ப­டு­கின்ற அவுஸ்­தி­ரே­லியா ஏற்­க­னவே 2024 ஆம் ஆண்டின் பிற்­ப­கு­தியில் சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான வய­தெல்­லையை 16 ஆக உயர்த்­தி­யுள்­ளது. டென்மார்க் போன்ற ஏனைய நாடுகள், பாட­சாலை வளா­கங்­க­ளுக்குள், டெப்­லெட்­டுகள் மற்றும் ஸ்மார்­ட­கை­ய­டக்கத் தொலை­பே­சி­களை கிட்­டத்­தட்ட முற்­றி­லு­மாக தடை செய்­துள்­ளன. 2024 ஆம் ஆண்டில், டென்மார்க் கல்வி அமைச்சர் மத்­தியாஸ் டெஸ்பே, நாடு டிஜிட்­டல்­ம­ய­மாக்­க­லுக்­கான தனக்­கே­யு­ரிய அணு­கு­மு­றை­யினைக் கடை­பி­டிப்­ப­தாகத் தெரி­வித்தார்.

அதி­க­ரித்த ஸ்மார்­ட் கை­ய­டக்கத் தொலை­பேசி பயன்­பாடு மனச்­சோர்வு, பதற்றம், மன அழுத்தம், தூக்கக் கோளா­றுகள் மற்றும் அவற்­றிற்கு அடி­மை­யாக்கும் நடத்தை போன்ற பல்­வேறு மன­நலப் பிரச்­சி­னை­க­ளுடன் தொடர்­பு­டை­ய­தாகக் காணப்­ப­டு­கின்­றது.
இந்த ஆண்டின் ஆரம்­பத்தில் BMC மருத்­துவ இதழில் வெளி­யி­டப்­பட்ட ஒரு ஆய்வில், ஸ்மார்­ட்­கை­ய­டக்கத் தொலை­பேசி பயன்­பாடு குறைக்­கப்­பட்ட மூன்று வாரங்­க­ளுக்குப் பின்னர் மனச்­சோர்வு அறி­கு­றிகள் 27 வீதத்தால் குறைந்­துள்­ள­தாகக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

கடந்த 15 ஆண்­டு­களில் இளை­ஞர்­களின் மன ஆரோக்­கியம் பாரிய அளவில் மோச­ம­டைந்­துள்­ளது. டிஜிட்டல் ஊட­கங்கள் அதி­க­ளவில் பயன்­ப­டுத்­தப்­பட்ட கொவிட்-19 தொற்­று­நோயால் இந்தப் போக்கு மேலும் அதி­க­ரித்­தது என பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பு மற்றும் அபி­வி­ருத்தி அமைப்பு (OECD) தெரி­வித்­துள்­ளது. எனினும் டிஜிட்டல் ஊட­கங்­களின் பயன்­பாடு மற்றும் கொவிட் -19 நோய்த் தொற்று ஆகிய இரண்டு கார­ணி­க­ளுக்கும் இடை­யேயான தொடர்பு பற்­றிய ஆய்­வுகள் இது­வரை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும் பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பு மற்றும் அபி­வி­ருத்தி அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

மறுபுறமாக, நெதர்லாந்து ஓப்லைன் கிளப்பின் ஸ்தாபகர்கள் நடவடிக்கை மேற்கொண்டு தமது சந்திப்புகளை விரிவுபடுத்த விரும்புகின்றனர். பல்வேறு நகரங்களில் ஓப்லைன் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

ஏப்ரல் மாத ஆரம்பத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் தமது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை அணைத்துவிட்டு லண்டனில் புகைப்படத்திற்காக புகைப்படக் கருவியை நோக்கி மகிழ்ச்சியுடன் சிரித்தனர். இது ஒரு புதிய சாதனையாகும், ஓப்லைன் செயற்பாட்டில் செல்வாக்கு செலுத்துபவர்கள், அதனை தமது இன்ஸ்டாகிராமில் பெருமிதத்துடன் அறிவித்தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.