பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கான குரல்கள் ஒன்றுபடுமா?

0 113

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை முழு­மை­யாக நீக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம் தரப்புகளும் இது தொடர்பான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்கி வருகின்றன. அண்மையில் இதனை வலி­யு­றுத்தி முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் மற்றும் சிவில் சமூக உறுப்­பி­னர்­கள் இணைந்து பயங்­க­ர­வாத எதிர்ப்பு சீர்­தி­ருத்­தங்­க­ளுக்­கான பரிந்­து­ரை­களை சமர்ப்­பித்­துள்­ளனர்.

முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள், கல்­வி­யா­ளர்கள் மற்றும் சிவில் சமூகத் தலை­வர்­கள் அடங்கிய குழு, நீதி மற்றும் தேசிய ஒரு­மைப்­பாட்டு அமைச்­சுக்கு விரி­வான பரிந்­து­ரை­களை கூட்­டாக சமர்ப்­பித்­துள்­ளது.

பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தை (PTA) முழு­மை­யாக இரத்துச் செய்­யு­மாறும், மனித உரி­மைகள், அர­சி­ய­ல­மைப்பு பாது­காப்பு மற்றும் ஜன­நா­யகப் பொறுப்­புக்­கூறல் ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் ஒரு புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தை உரு­வாக்­கு­மாறும் அவர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

இதேவேளை தேசிய சூறா சபையும் ஜனாதிபதிக்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றை அண்மையில் அனுப்பியிருந்தது.

தற்­போ­துள்ள பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தை இரத்துச் செய்­வதைத் தவிர, புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைப் பிறப்­பிக்க ஆளும் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்­திற்கு எந்­த­வித மக்கள் ஆணையும் கிடை­யாது என தேசிய ஷூரா சபை தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன், ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன் தாம் ஆட்­சிக்கு வந்தால் பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தை ஒழிப்­ப­தா­கவே ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­கவும் அவ­ரது தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்­தியும் ஆணைய­ளித்­தது. அவ்­வாறு செய்­வ­தற்கே மக்கள் ஆணையை வழங்­கி­னார்கள். மாறாக, புதிய பயங்­க­ர­வாதச் சட்­டங்­களைக் கொண்­டு­வர மக்கள் ஆணை வழங்­க­வில்லை எனவும் ஷூரா சபை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

கடந்த 25 ஆண்­டு­க­ளுக்­குள்ளால் ஏற்­க­னவே பல தட­வைகள் புதிய பல்­வேறு பாது­காப்புச் சட்­டங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. இச்­சட்­டங்கள் நிர்­வாக அதி­கா­ரி­க­ளுக்கும் காவல்­து­றைக்கும் பரந்த அதி­கா­ரங்­களை வழங்­கி­யுள்­ளதால் புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் உரு­வாக்­கு­வது தேவை­யற்­றது என்­ப­தனை வலி­யு­றுத்­து­கிறோம்

இலங்­கையில் பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்டு 16 ஆண்­டுகள் நிறை­வ­டைந்­துள்­ளன. தற்­போது தீவி­ர­வா­தத்­திற்­கான எந்த ஆபத்தும் இல்­லாத. நிலையில் பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்தும் நடை­மு­றையில் இருப்­ப­தா­னது எமது நாட்டைப் பற்­றிய ஒரு எதிர்­ம­றை­யான அபிப்­பி­ரா­யத்தை உல­க­ளவில் ஏற்­ப­டுத்தும். அதன் விளை­வாக சுற்­றுலாத் துறை, வெளி­நாட்டு முத­லீ­டுகள், மற்றும் பொரு­ளா­தார முன்­னேற்­றங்கள் பாதிப்­ப­டையும் என நம்­பு­கிறோம் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உண்மையில் இந்தக் கொடிய சட்டத்தினால் இந்த நாட்டில் வாழும் சகல சமூகத்தினருமே பாதிக்கப்பட்டுள்ளனர். 1980 களில் சிங்கள இளைஞர்களுக்கு எதிராகவும் 1990 களிலிருந்து 2009 வரை தமிழ் இளைஞர்களுக்கு எதிராகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராகவும் இந்த சட்டம் தேர்ந்தெடுத்த வகையில் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்த நாட்டின் மிகப் பெரிய வளங்களான ஆயிரக் கணக்கான இளைஞர்களின் வாழ்க்கைகள் சிதைக்கப்பட்டன. இந்த வரலாறு மீண்டும் திருப்பி எழுதப்படுவதற்கு இடமளிக்கக் கூடாது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த சட்டத்தை முற்றாக ஒழிப்பதாகக் கூறியே ஆட்சிக்கு வந்தது. அந்த வகையில் இந்த சட்டத்தை முற்றாக ஒழிக்க வேண்டும். வெளிநாட்டு சக்திகளின் தேவைகளுக்காக புதிய சட்டங்களைக் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது. இது தொடர்பில் அரசுக்கு அழுத்தங்களை வழங்கும் விடயத்தில் சகல சமூகத்தினரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். தனித்தனியாக இயங்குவதை விடுத்து சகலரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுப்பதன் மூலமே நிச்சயமாக அரசாங்கத்திற்கு வலுவான ஒரு செய்தியைச் சொல்லக் கூடியதாக இருக்கும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.