கலா­நிதி சுக்ரி அவர்­களின் இரு வர­லாற்று சாத­னைகள்

0 41

கிழக்கு முஸ்லிம் கல்வி பேர­வையால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட மர்ஹும் கலா­நிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்­களின் நினை­வேந்தல் நிகழ்வு கடந்த 29ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு, தெமட்­ட­கொ­டவில் அமைந்­துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது.

தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக இஸ்­லா­மிய கற்கை அறபு மொழி பீட முன்னாள் பீடா­தி­பதி, பேரா­சி­ரியர், மெள­லவி எம்.எஸ். எம். ஜலால்தீன் தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் வர­வேற்­பு­ரையை மட்­டக்­க­ளப்பு கல்­வியியல் கல்­லூரி விரி­வு­ரை­யாளர் அஷ்ஷெய்க் அன்ஸார் மெள­லானா நிகழ்த்­தினார். மர்ஹூம் கலா­நிதி சுக்ரி பற்­றிய நினைவுப் பேரு­ரையை புரூனை நாட்டின் தாருஸ்­ஸலாம் பல்­க­லைக்­க­ழக முன்னாள் பேரா­சி­ரியர் பி. ஹுஸைன்­மியா அவர்­களும், கொழும்பு, மிஸ்காத் ஆய்வு நிலை­யத்தின் பணிப்­பாளர் உஸ்தாத் எம். ஏ. எம். மன்ஸுர் அவர்­களும் நிகழ்த்­தி­னார்கள்.

இறு­தியில் கலா­நிதி சுக்ரி பற்றி எழு­தப்­பட்ட “கலா­நிதி எம்.ஏ.எம். சுக்ரி- இலங்கை முஸ்­லிம்­களின் புல­மைச்­சொத்து” என்ற நூலும், “கலா­நிதி எம்.ஏ.எம். சுக்­ரியின் ஆய்வுக் கட்­டு­ரைகள் ‘ என்ற நூலும் சபை­யினர் அனை­வ­ருக்கும் இல­வ­ச­மாக வழங்­கப்­பட்­டன.
இந் நிகழ்வில், தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழக இஸ்­லா­மிய கற்கை அறபு மொழி பீட முன்னாள் பீடா­தி­பதி, பேரா­சி­ரியர், மெள­லவி. எம்.எஸ்.எம். ஜலா­ல்தீன் அவர்கள் ஆற்­றிய தலைமையுரையின் தொகுப்பு வருமாறு.

மர்ஹும் கலா­நிதி சுக்ரி அவர்­களின் இரு வர­லாற்று சாத­னைகள்.
வல்ல அல்லாஹ் அல்­குர்­ஆனில் கூறு­கின்றான்.
“தான் நாடி­ய­வர்­க­ளுக்கு அவன் ஞானத்தை கொடுக்­கிறான். (இத்­தகு) ஞானம் எவர் கொடுக்­கப்­ப­டு­கி­றாரோ, அவர் மிகப் பெரும் நன்­மைகள் திட்­ட­வட்­ட­மாக கொடுக்­கப்­பட்­ட­வ­ராவார். எனினும், நல்­ல­றி­வு­டையோர் தவிர (வேறு எவரும் இது பற்றி சிந்­தித்து ) உப­தேசம் பெறு­வ­தில்லை. (அல் பகறா- 269).

இறைவன் அறிவு என்ற செல்­வத்தை பொது­வாக எல்லா மனி­தர்­க­ளுக்கும் வழங்­கி­னாலும், ஞானம் என்னும் அவ­னது அரும் பொக்­கி­ஷத்தை தான் நாடி­ய­வர்­க­ளுக்கு மட்­டுமே வழங்­கு­வ­தாக குறிப்­பி­டு­வது, அந்த ஞானம் பெற்­ற­வர்கள் இம்­மை­யிலும் மறு­மை­யிலும், குறிப்­பாக இறை­வ­னி­டத்தில் மிகுந்த கெள­ரவம், ஈடேற்றம் பெற்­ற­வர்கள் என்­பதை சுட்டிக் காட்­டவே. இவ்­வாறு ஞானம் பெற்­ற­வர்கள் தமது அறிவு, ஞானம் என்­ப­வற்றை இறை­வ­ழியில் செல­விட்டு, இறை திருப்­தி­கேற்ப மனித குலத்­திற்கும், குறிப்­பாக தன் வாழ்­நாள் ­கால தனது சமு­தா­யத்­துக்கும், தேவை­யு­டைய வர்­க­ளுக்கும் பயன்படுத்­து­வார்கள். அவர்கள் ஈடேற்றம் பெற்­ற­வர்கள் என்­பதை குறிப்­பி­டு­வ­தாக அல்­குர்ஆன் அறி­ஞர்கள் கரு­து­கின்­றனர்.

1940ம் ஆண்டு இலங்­கையின் தென் மாகா­ணத்தில் உள்ள மாத்­த­றையில், ஒரு சரா­சரி வர்த்­தக பின் புலத்தை கொண்ட குடும்­பத்தில் பிறந்து, ஒரு கல்­வி­மா­னாக, ஆலி­மாக, கலா­நி­தி­யாக, பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ள­ராக, பன்னூல் ஆசி­ரி­ய­ராக, ஆய்­வா­ள­ராக, இலங்­கையின் அதி­உயர் இஸ்­லா­மிய கல்வி நிறு­வ­ன­மான பேரு­வளை ஜாமியா நளீ­மிய்யா கலா பீடத்தின் பணிப்­பா­ள­ராக பல்­வேறு பரி­மா­ணங்­களில் பரி­ண­மித்து, கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி தனது நிரந்­தர உலகை நோக்கி பய­ணித்தார்கள் மர்ஹும், கலா­நிதி எம். ஏ.எம். சுக்ரி அவர்கள். அவர் மர­ணித்த நாளின் ஐந்­தா­வது வருட நினைவு தினம் கடந்த 19 ஆம் திக­தி­யாகும்.

இந்­நி­கழ்­வுக்கு தலைமை தாங்கும் நான், கலா­நிதி சுக்ரி அவர்­களின் பல்­வேறு வர­லாற்று சாத­னை­களில் என்னை மிகவும் கவர்ந்த இரண்டு சாத­னை­களை மட்டும் கூறி விளக்க முயல்­கிறேன்.

அச்­சா­த­னை­களில் முதன்­மை­யா­னது கலா­நிதி சுக்ரி அவர்­களின் தீர்க்­க­த­ரி­சன சிந்­த­னை­யினால், அவர் பணிப்­பா­ள­ராக அப்­போது கட­மை­யாற்­றிய பேரு­வளை ஜாமியா நளீ­மிய்யா கல்வி நிறு­வ­னத்­தினால் 1986ம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றை கால­னித்­துவ ஆட்­சிக்கு முன்­னைய காலங்­களில் இருந்து தெளி­வுற நிறுவும் Muslims of Sri Lanka – Avenues to Antiquity எனும் வர­லாற்று நூலாகும்.

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாறு, இந்­நாட்டில் பல ஆயிரம் வரு­டங்­களை கொண்­ட­தாக காணப்­பட்ட போதும், ஆங்­காங்கு இவ்­வ­ர­லாறு சிதறிக் கிடந்த போதும், உள்­நாட்டு வெளி­நாட்டு வர­லாற்று ஆய்­வா­ளர்­களால் நிச்­ச­யித்து கூறப்­பட்ட போதும், மிகவும் நிதர்­ச­ன­மான வர­லாற்று சான்­றுகள் பல காணப்­பட்ட போதும் 1986ம் ஆண்டில் Muslims of Sri Lanka நூல் வெளி­வ­ரும் ­வரை அவ்­வ­ர­லாறு இவ்­வாறு மிகவும் கச்­சி­த­மாக ஆய்வு செய்­யப்­பட்டு எழு­தப்­ப­ட­வில்லை என்­பதே, கலா­நிதி சுக்­ரியின் இந்­நூ­லாக்கப் பணி வர­லாற்று சாத­னை­யாக கரு­தப்­ப­டு­வதன் கார­ண­மாகும்.

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்று தேக்கம் பற்றி சுமார் 75 ஆண்­டு­க­ளுக்கு முன்பே, இலங்­கையில் பிர­சித்தி பெற்ற கண்டி கிங்ஸ்வூட் கல்­லூரி, திரித்­துவ கல்­லூரி (Kingwood College, Trinity College) போன்ற பிர­ப­ல­மான கல்­லூ­ரி­களை நிறு­விய இலங்­கை­ய­ரான அறிஞர் லூயிஸ் எட்மண்ட் பிளாஸ் (Louis Edmond Blaze 1861-–1951) என்­பவர் அன்­றைய கால­கட்­டத்தில் பின்வரு­மாறு குறிப்­பிட்­டி­ருந்தார்.

“Why does not a patriotic member of the large community of Moors in Ceylon write an accurate and comprehensive history of his community?.
The works involves a good deal of patient research, keen interest and cool judgement. But the end will repay the labour devoted to it. There need of an authentic history, there is plenty of material available, and the story is of romantic as well as of historical interest.”

“இலங்­கையில் வாழும் மிகவும் பரந்த முஸ்லிம் சமூ­கத்­தில் உள்ள தன் இனப்­பற்று கொண்ட ஒரு­வ­ரா­வது தனது சமூ­கத்தின் நிதர்­ச­ன­மான, விசா­ல­மான வர­லாற்று ஆய்வை மேற்­கொண்டு எழு­தாமல் இருக்­கின்­றனர். இவ்­வ­ர­லாற்று தேடலும், அதன் எழுத்தால் கமழும் பொறு­மை­யான ஆய்வுத் தேடல், உணர்ச்சி மிகுந்த ஆர்வம், பக்கச்சார்­பற்ற முடி­வு­களை அடிப்­ப­டை­யாக கொண்­ட­தாகும்.

எனினும் அதன் முடிவு அதற்­காக தம்மை அர்ப்­ப­ணித்­­த­வர்­க­ளுக்கு மிகவும் பெறு­மதி வாய்ந்த வெற்­றியை தரக் கூடி­ய­தாகும். அதற்­காக அங்­கீ­காரம் பெற்ற ஒரு வர­லாறு எமக்கு தேவைப்படு­கி­றது. இவ்­வ­ர­லாற்று ஆய்­வுக்கு தேவை­யான போது­மான வளங்கள் காணப்­ப­டு­கி­றது.” என்று அப்­போது குறிப்­பிட்டார்.

மற்­றொரு வர­லாற்று ஆய்­வா­ள­ரான பேரா­சி­ரியர் டி. பி. எச். அபே­சிங்க (T.B.H. Abeysingha) என்­பவர் Muslims of Sri Lanka (1986) நூலி­லேயே பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கிறார்.
“16, 17ம் நூற்­றாண்­டு­களில் காணப்­பட்ட இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றை எழுத முற்­படும் எந்த ஆய்­வா­ளரும் இரண்டு சவால்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. முத­லா­வது சவால், சிங்­கள மக்­க­ளுக்கு அவர்­க­ளுக்கே சொந்­த­மான வர­லாற்று நூல்­க­ளான மகா­வம்சம், குல வம்சம், ரஜ­வ­லிய போன்ற நூல்­களும், தமிழ் மக்­க­ளுக்கு அவர்­க­ளுக்கே சொந்­த­மான “யாழ்ப்­பாண வைப­வ­மாலை” என்ற நூலும் காணப்­படும் போது, இலங்­கையில் வாழும் முஸ்­லிம்­க­ளுக்கு அவர்­க­ளுக்­கு­ரிய சொந்­த­மான, தனித்­து­வ­மான நூல்கள் எதுவும் காணப்­ப­டா­தது முதல் பிரச்­சி­னை­யாகும். வர­லாற்று தக­வல்­க­ளற்ற சமூ­க­மாக அவர்கள் காணப்­ப­டு­கின்­றார்கள். மற்­றொரு முக்­கிய பிரச்­சினை, மேற்­கூ­றிய கால கட்­டத்தைப் பொறுத்­த­வ­ரையில் அக்­கால முஸ்­லிம்கள் பற்­றிய தக­வல்கள் யாவும் முஸ்­லிம்­களின் பகி­ரங்க எதி­ரி­க­ளாக செயல்­பட்ட போர்த்­துக்­கே­யரின் வர­லாற்று ஆவ­ணங்­களில் இருந்தே பெற வேண்­டி­யுள்­ளது.

இவ்­வா­றான பிற­மத வர­லாற்று ஆய்­வா­ளர்­களின் கருத்­துக்கள், கலா­நிதி சுக்ரி அவர்­களை சென்­ற­டைந்­ததும், அதன் தாக்கம் அவருள் ஏற்­பட்­டதும் உட­ன­டி­யாக செயற்­பாட்டில் சுக்ரி அவர்கள் இறங்­கி­யதில் எவ்­வித ஆச்­ச­ரி­யமும் இல்லை.

நான­றிந்த வகையில் கலா­நிதி சுக்ரி அவர்கள் 1980, 1981ம் ஆண்­டு­களில் தான் ஜாமியா நளீ­மிய்­யாவுக்கு ஒரு நிரந்­தர பணிப்­பா­ள­ராக கட­மை­யேற்­கின்றார். ஏனெனில் களனி பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஒரு மாண­வ­னாக நான் 1977ம் ஆண்டில் காலடி வைத்­த­போது, கலா­நிதி சுக்ரி அவர்கள் தனது கலா­நிதி (PhD) கற்­கையை பிரித்­தா­னி­யாவில் உள்ள எடின்­பரோ (University of Edinburgh) பல்­க­லைக்­க­ழ­கத்தில் பூர­ண­மாக முடித்து விட்டு, 1976ம் ஆண்டில் தனது விரி­வு­ரை­யாளர் பத­வியை தொடர்­வ­தற்­காக இணைந்து இருந்தார்

அவ­ரது மாண­வ­ராக 1980 ஆரம்­ப­ கால கட்டம் வரை களனி பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லேயே தொடர்ந்த நான்,1980 இல் எனது பீடத்தின் தமிழ் மொழி பேசும் மாண­வர்கள் அனை­வ­ரையும், களனி பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு கல்வி அமைச்சு மாற்­றி­யது. கலா­நிதி சுக்ரி அவர்கள் பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் கட­மை­யாற்ற விரும்­பாமல், பல்­க­லைக்­க­ழக தொழி­லையே கைவிட்டு, ஜாமியா நளீ­மிய்­யாவில் நிரந்­த­ர­மாக இணைந்து கொண்டார். அவ்­வாறு இணை­வ­தற்கு நளீ­மிய்­யாவின் ஸ்தாபகர் மர்ஹும் நளீம் ஹாஜியார் அவர்­களின் பலத்த வேண்­டு­கோளும், அதை தட்டிக் கழிக்க முடி­யாத நிலையில் கலா­நிதி சுக்ரி அவர்கள் இருந்­த­மையும் வர­லாற்றில் ஆழ­மாக பதி­யப்­பட்­டுள்­ளது.

1980ம் ஆண்­டு­களில் இணைந்த சுக்ரி அவர்கள் தனது பணிப்­பாளர் பதவி காலத்தில் ஆறு வரு­டங்­க­ளுக்­குள்­ளா­கவே Muslims of Sri Lanka நூலை வெளி­யிடும் அள­வுக்கு, அவ்­வ­ர­லாறு எழு­தப்­ப­ட­வேண்டும் என்ற பேரவா உள்­ளத்தில் ஆழ­மாகப் பதிந்து இருந்­தது.ஏனெனில் அப்­போ­தைய கால­கட்­டத்தில் ஜாமியா நளீ­மிய்­யாவில் நானும் (1977 -–1979) தற்­கா­லிக விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்­றினேன்.

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாறு எழு­தப்­ப­ட­வேண்டும் என்ற ஒரு பலத்த முனைப்பு, அப்­போ­தைய கால­கட்­டத்தில் கலா­நிதி சுக்­ரியைத் தவிர நளீ­மிய்­யாவின் நிர்­வா­கத்தில் அல்­லது கல்விப் பணியில் உள்ள யாரி­டமும் ஏற்­பட வாய்ப்­பில்லை. எனவே, இவ்­வாறு எழு­தப்­ப­ட­வேண்டும் என்ற உரத்த குரல் கலா­நிதி சுக்ரி அவர்­க­ளிடம் இருந்­துதான் வொளிப்­பட்­டி­ருக்க வேண்டும் என்­பதில் எவ்­வித சந்­தே­கமும் இல்லை. அதை முடித்து வைக்கும் ஆற்­றலும் அவ­ருக்­குத்தான் இருந்­தது.

வர­லாறு எழுதும் பணியில்
கலா­நிதி சுக்ரி.
Muslims of Sri Lanka என்ற நூல் சுமார் 490 பக்­கங்­களில் 19 வர­லாற்­றுத்­துறை அறி­ஞர்­களின் பங்­க­ளிப்­போடு, அவர்கள் ஒவ்­வொ­ரு­வ­ரது தனிப்­பட்ட தலைப்­பு­க­ளி­லான கட்­டு­ரைகள், அதற்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்ட இரண்டு வார கால ஆய்வு மாநாட்டில் சமர்ப்­பிக்­கப்­பட்டு, கட்­டு­ரைகள் சக­ல­ராலும் பரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு, இறு­தியில் கலா­நிதி சுக்ரி தலை­மை­யி­லான வெளி­யீட்டு குழு­வினால் மீளாய்வு (Editing) செய்­யப்­பட்ட பின்னர் வெளி­யி­டப்­பட்ட ஒரு முழுமை பெற்ற நூலாகும்.
இந்­நூலில் ஒவ்­வொரு தலைப்­பிலும் ஆய்வுக் கட்­டு­ரைகள் சமர்ப்­பித்­துள்ள ஆய்­வா­ளர்கள் பின்வரு­மாறு.
1. Dr. (Prof.) T.B.H. Abeysingha.
2. Dr. (Prof.) C.R. De Silva.
3. Dr. (Chair) K.M.De Silva.
4. Dr. (Mrs.) Lorna Devaraja
5. Dr. (Prof.)Karl Gooneesrdena
6. Dr. (Prof.) K. Indrapala
7. Dr. (Prof.)Kiribamune
8. Dr. (Prof.)D.A. Kotalawela
9. Dr. (Prof.) Vijaya Samaraweera
10. Dr. S. W. R. De A. Samarasingam
11. Dr. (Prof.) B.A. Husainmiya.
12. Mr. K.D.G. Wimalaratna
13. Dr. A.C.L. Ameer Ali
14. Mr. Dawood Fazal.
15. Mr. H.M.Z. Farooque
16. Dr. Maruf A. Mohammed.
17. Barister-at-law Moosajee
போன்­ற­வர்­க­ளாகும்.

இலங்கை பல்­க­லைக்­க­ழ­கங்கள், வெளி­நாட்டு பல்­க­லைக்­க­ழ­கங்­களில் அக்­கா­ல­கட்­டத்தில் வர­லாற்றுத் துறையில் பேரா­சி­ரி­யர்­க­ளாக கட­மை­யாற்­றிய இவர்­களின் கல்வித் தகை­மை­க­ளையும், வர­லாற்று துறையில் கொண்ட ஈடு­பாட்­டையும் நாம் ஆய்வு செய்யும் போது, இலங்கை வாழ் மூவின மக்­களைப் பற்றி வர­லாறு எழு­து­வ­தற்கு வேறு யாரும் தேவை­யில்லை.

இவர்­களே அதற்­கு­ரி­ய­வர்கள் என சான்றுபடுத்­து­ம­ள­வுக்கு, வர­லாற்றுத் துறை பேரா­சி­ரி­யர்­க­ளையும், ஆய்­வா­ளர்­க­ளையும் ஒரு­மு­கப்­ப­டுத்தி ஆய்வு செய்து, இந்­நூலை கோர்வை செய்து வெளி­யிட்­டதன் மூலம் கலா­நிதி, “கலா­நிதி சுக்ரி அவர்கள் இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றை நூலாக வெளி­யி­டு­வதில் பூரண வெற்றி பெற்­றுள்ளார்” என்று சொல்­லலாம்.

இலங்கை முஸ்­லிம்­களின் அக்­கால கட்ட கல்வித் துறை செயல்­பா­டு­களை நோக்கும் போது, வேறு யாரும் இவ்­வா­றான அடைவை பெற்­றி­ருக்க முடி­யாது. இவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தற்கு, மிகவும் அதி­க­ள­வி­லான நிதி வச­தி­களும், மற்றும் பல்­வேறு துறைசார் ஆத­ரவும் பங்­க­ளிப்பும் தேவை­யாகும்.

கலா­நிதி சுக்ரி அவர்­க­ளோடு அப்­போது ஒன்­றித்து செயற்­பட்ட மர்ஹும் நளீம் ஹாஜியார் அவர்கள், இவ்­வா­றான தாராள நிதி வசதி மற்றும் பங்­க­ளிப்­பு­களை அப்­போது பூர­ண­மாக வழங்­கி­யமை, வல்ல அல்­லாஹ்வின் பேரருள் என்­றுதான் சொல்ல வேண்டும்.

எது எப்­ப­டியோ, கலா­நிதி சுக்ரி அவர்­களின் எண்­ணக்­கரு, நளீம் ஹாஜியார் போன்ற தாராள தன்­மை­யு­டையவர்­களின் பங்­க­ளிப்­பினால், இலங்கை முஸ்­லிம்­களின் வாழ்வில் என்றும் மறக்க முடி­யாத இந்த அரும் பொக்­கிஷம் Muslims of Sri Lanka -Avenues to Antiquity ( இலங்கை முஸ்­லிம்கள் – மரபை காணும் வழிகள்) நூல் எமக்கு இன்று கிடைத்­துள்­ளது என்று நாம் கூறலாம்.

இரண்­டா­வது வர­லாற்று சாதனை
கலா­நிதி சுக்ரி அவர்­க­ளினால் இலங்கை முஸ்­லிம்­களின் மறு­ம­லர்ச்­சிக்­காக செயல்­ப­டுத்­தப்­பட்ட மற்­றொரு வர­லாற்று சாத­னைதான், நளீம் ஹாஜி­யாரின் எண்­ணக்­க­ருவில் உரு­வாகி, கலா­நிதி சுக்ரி அவர்­க­ளினால் செயல்­ப­டுத்­தப்­பட்ட “இலங்கை முஸ்லிம் மறு­ம­லர்ச்சி இயக்கம்” ஆகும். கலா­நிதி மர்ஹும் சுக்ரி அவர்கள் தனியே நின்று ஓரிரு விட­யத்தில் மாத்­திரம் கவனம் செலுத்தி தனது பணியை சுருக்கிவிட­வில்லை. மாறாக, சமூகப் பணி­களில் பல்­வேறு தரு­ணங்­களில் தன்னை ஈடு­ப­டுத்தி, அவற்றின் ஊடாக பாரிய அளவில் தனது பங்­க­ளிப்பை நல்கியுள்­ளார்கள்.
பல்­க­லைக்­க­ழ­கங்­களில் கல்வி கற்கும் ஏழை முஸ்லிம் மாண­வர்­களின் பிரச்­சி­னைகள், கல்­வியை தொடர்­வதில் அவர்கள் எதிர்­நோக்கும் இடை­யூ­றுகள் என்­பன பற்றி 1980ம் ஆண்­ட­ளவில் மிகவும் ஆழ­மாக சிந்­தித்­தவர் மர்ஹும் நளீம் ஹாஜியார் அவர்­க­ளாகும்.
ஒருநாள் இரவு கலா­நிதி சுக்ரி அவர்­களை தூக்­கத்தில் இருக்கும் போது தொலை­பே­சியில் அழைத்த நளீம் ஹாஜியார் அவர்கள் “இலங்கை முஸ்லிம் சமூகம் கல்­வியில் மிகவும் பிற்­போக்­காக இருப்­பது எனக்கு மிகவும் கவ­லையைத் தரு­கி­றது. பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு செல்லும் முஸ்லிம் மாண­வர்கள் கல்­வியைத் தொடர வச­தி­யின்றி, அவர்­க­ளது கல்­வியை இடை­ந­டுவில் நிறுத்தி விடு­கி­றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் எங்­க­ளது சமூ­கத்தின் எதிர்­காலம் எப்­படி அமையக் கூடும் என எனக்கு கவ­லை­யாக உள்­ளது. இதற்கு ஏதா­வது நல்ல ஒரு திட்­டத்தை வகுத்து, செயற்­ப­டுத்த வேண்டும்’’ என வேண்டிக் கொண்டார்.
உண்­மையில் இலங்கை முஸ்­லிம்­களின் கல்வி நிலை, குறிப்­பாக பல்­க­லைக்­க­ழக பிர­வே­சமும் அதை தொடர்­வதில் உள்ள பிரச்­சி­னை­களும் மிகவும் மோச­மான நிலையில் அப்­போது இருந்­தது. இலங்­கையில் இருக்கும் ஏனைய சமூ­கங்கள் கல்­வியில், குறிப்­பாக பல்­க­லைக்­க­ழக பிர­வேசத்தில் அதி உயர்ந்த நிலையில் இருந்த அக்­கால கட்­டத்தில் முஸ்லிம் மாண­வர்­களின் பல்­க­லைக்­க­ழக பிர­வேசம் பெரும் வீழ்ச்­சியை கண்­டி­ருந்­தது என்­பதை பின்­வரும் தரவுகள் எமக்கு தெளி­வு­ப­டுத்­து­கின்­றன.

1942ல் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு அனு­ம­திக்­கப்­பட்ட மொத்தம் 904 மாண­வர்­களில் 25 மாண­வர்­களே (2.7%) முஸ்லிம் மாண­வர்­க­ளாகும். அதேபோல் 1958ல் பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெற்ற மொத்தம் 2950 மாண­வர்­களில் 72 மாண­வர்­களே (2.6%) முஸ்லிம் மாண­வர்­க­ளாகும். 1965ல் முஸ்லிம் மாண­வர்­களின் பல்­க­லைக்­க­ழக பிர­வேசம் 2.0% வீத­மா­கவே காணப்­பட்­டது.

இவ்­வா­றான பல்­க­லைக்­க­ழக அனு­மதி, முஸ்­லிம்­களின் இன விகி­தா­சாரத்­தை­விட (அப்­போது 5.0%) பின்­தங்­கிய நிலையில் இருந்­தமை மட்­டு­மன்றி, பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெற்ற ஏழை முஸ்லிம் மாண­வர்கள் தமது கல்­வியைத் தொடர போதிய நிதி வசதி இல்­லாமல், அல்­ல­லு­று­வதை கண்­டுதான் மர்ஹும் நளீம் ஹாஜியார், சுக்ரி அவர்­க­ளிடம் இதற்கு ஒரு வழியை காணு­மாறு அன்று வேண்டிக் கொண்­டார்கள்.

கலா­நிதி சுக்ரி அவர்­களும் மர்ஹும் நளீம் ஹாஜியார் இரு­வ­ரி­னதும் அரும் முயற்­சியால் 1980ம் ஆண்டில் ஆரம்­பிக்­கப்­பட்­டதே “இலங்கை முஸ்லிம் மறு­ம­லர்ச்சி இயக்­கமா”கும்.
இவ்­வி­யக்கம் தோன்றி, புலமைப் பரிசில் வழங்­குதல், பாட விதா­னங்­களில் உயர் தேர்ச்சி அடை­யச்­செய்தல், செய்தித் தாள் வெளியிடுதல் போன்ற ஏனைய சமூகப் பணிகளில் ஈடுபாடு காட்டியது. அதுமாத்திரமன்றி, இவ்வியக்கத்தின் மூலம் இக்ரஹ் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றும், முஸ்லிம்களுக்கென தொடங்கி வைக்கப்பட்டது. ஜித்தாவிலுள்ள இக்ரஹ் நலன்புரி நிறுவனத்துக்கும் இலங்கை இக்ரஹ் தொழில்நுட்ப கல்லூரிக்கும் இடையே பாலமாக இருந்து செயல் பட்ட கலாநிதி சுக்ரி அவர்கள், அவரது மரணம் வரையிலும் அதன் பொது நிலையப் பொறுப்பாளராக (Custodian) கடமையாற்றியமை முஸ்லிம் சமூகத்தால் என்றும் மறக்க முடியாத விடயமாகும்.

இதன்படி நோக்கும் போது ” இலங்கை முஸ்லிம்களின் உயர் கல்வி வரலாற்றில் “இலங்கை முஸ்லிம் கல்வி மறுமலர்ச்சி இயக்கம்” தோன்றியதன் பின்னர், குறிப்பாக 1987ஆம் ஆண்டு முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவு வீதம் 8.75 வீதமாக அதிகரித்தது. இவ்வளர்ச்சி இதுவரை முஸ்லிம்களின் உயர் கல்வியில் ஈட்டப்பட்ட உயர் மட்ட சாதனை எனக் கருதப்படுகிறது.

மர்ஹும், கலாநிதி சுக்ரி அவர்களின் அறிவும், ஆற்றலும், புலமையும், பன்மொழி விருத்தியும், சமூக செயற்பாடுகளும், ஒழுக்க விழுமியங்களும் இலங்கை முஸ்லிம்களின் மத்தியில் அதி உயர்வான அம்சங்களாக, சமூக வெற்றிக்கான வழிகாட்டிகளாக மதிக்கப்பட்டாலும், நான் இங்கு விபரித்த இரண்டு சாதனைகளும், இலங்கை முஸ்லிம்களின் கல்வி, வரலாறு, சமூகப் பாதுகாப்பு என்பவற்றில் அதிக தாக்கம் செலுத்திய சாதனைகளாக வரலாறு பதிவு செய்யும். இன்ஷா அல்லாஹ். வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவர்க்கம் கிடைக்க நாமனைவரும் துஆ செய்வோம்.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.