2025 ஹஜ் யாத்திரை: வெற்றிகரமாக ஆரம்பம்

0 66

அரபாவிலிருந்து
றிப்தி அலி

“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக்
இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக்க வல் முல்க் லா ஷரீக லக்”

இந்த அழ­கிய தல்­பி­யா­வுடன் இஸ்­லாத்தின் ஐந்­தா­வதும் இறு­தி­யு­மான ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக உல­க­ளா­விய முஸ்­லிம்கள் இன்று (05) வியா­ழக்­கி­ழமை அரபா மைதா­னத்தில் ஒன்­று­ கூ­டு­கின்­றனர்.

இஸ்­லா­மிய நாட்­காட்­டியில் மிகச் சிறந்த நாட்­களில் ஒன்­றாக துல்ஹஜ் மாதத்தின் 9ஆவது நாள் காணப்­ப­டு­கின்­றது. இதனை அரபா தினம் என்று அழைப்பர்.
இத்­தி­னத்தில் அரபா மைதா­னத்தில் தரித்தல் என்­பது ஹஜ் கட­மை­களில் பிர­தா­ன­மான ஒன்­றாகும். ஹஜ்­ஜுக்­காக வந்த சம­யத்தில் நோய் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­மை­யினால் குறித்த தினத்தில் இந்த மைதா­னத்தில் தரிக்க முடி­யாத ஹாஜி­களை விசேட உலங்கு வானூர்­தியில் சவூதி அர­சாங்கம் அழைத்து வரு­வதும் வழ­மை­யாகும்.

அரபா பேருரை
இத்­தி­னத்தில் அரபா மைதா­னத்­தி­லுள்ள நமீரா பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்ள இந்த வருட அரபா பேரு­ரை­யினை அஷ்ஷெய்க் கலா­நிதி சாலிஹ் பின் ஹுமைதி நிகழ்த்தவுள்ளார்.

புனித ஹரம் ஷரீ­பி­லுள்ள ஒன்­பது பேஷ் இமாம்­களில் ஒரு­வ­ரான இவர், 2002ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை­யான காலப் பகு­தியில் சவூதி அரே­பி­யாவின் மஜ்­லிஸில் ஷூராவின் சபா­நா­ய­க­ரா­கவும் பணி­யாற்­றி­யுள்ளார்.

அரபு மொழியில் இடம்­பெறும் இந்த உரை ஆங்­கிலம், உருது, பிரெஞ்சு, ஹிந்தி, தமிழ், பேர்­சியன் என சுமார் 30க்கு மேற்­பட்ட மொழி­க­ளுக்கு மொழி­பெ­யர்க்­கப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­ டத்­தக்­கது.

15 இலட்சம் பேர் பங்கேற்பு
இந்த வருடம் புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­காக சுமார் 15 இலட்­சத்­துக்கு மேற்­பட்ட முஸ்­லிம்கள் சவூதி அரே­பி­யா­விற்கு வந்­தி­றங்­கி­யுள்­ளனர். இவர்கள் அனை­வரும் இன்று மாலை வரை அரபா மைதா­னத்தில் தரிக்­க­வுள்­ளனர்.

அரபா மைதானப் பிர­தே­சத்தில் தற்­போது அதிக வெப்ப நிலை நில­வு­கின்ற கார­ணத்­தினால் அரபா தினத்­தன்று காலை 10 மணி முதல் பிற்­பகல் 4 மணி வரை­யான காலப் பகு­தியில் ஹாஜிகள் அனை­வரும் கூடா­ரங்­க­ளுக்­குள்­ளேயே இருக்­கு­மாறு சவூதி அரே­பிய அர­சாங்­கத்­தினால் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அதிக வெப்பநிலை
அதே­வேளை, உயர் வெப்ப நிலை கார­ண­மாக நோய்­க­ளுக்­குள்­ளா­கின்ற ஹாஜி­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக 40 அரச நிறு­வ­னங்­களைச் சேர்ந்த 250,000 பேர் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, நாளை (06) வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை சுபஹ் தொழுகை முதல் ஞாயிற்­றுக்­கி­ழமை (08) நண்­பகல் லுஹர் தொழுகை வரை இந்த பல இலட்­சக்­க­னக்­கான ஹாஜிகள் மினாவில் தங்­கி­யி­ருந்து மூன்று ஜம­ராத்­க­ளுக்கு தலா 49 கற்­களை எறி­ய­வுள்­ளனர்.

இந்த மூன்று நாட்­களும் மினாவில் தற்­கா­லி­க­மாக அமைக்­கப்­ப­டு­கின்ற கூடா­ரங்­க­ளி­லேயே அனைத்து ஹாஜி­களும் தங்­கு­வது வழ­மை­யாகும். இதனால், உல­க­ளா­விய ரீதியில் மிகப் பெரிய கூடார நகரம்- மினா என்று அழைக்­கப்­ப­டு­கிறது.
இங்கு சவூதி அரே­பி­யாவின் பல நிறு­வ­னங்­க­ளினால் அதி சொகுசு கூடா­ரங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன.

இலங்கை யாத்திரிகர்களுக்கு திருப்திகரமான வசதிகள்
கடந்த காலங்­களில் இலங்கை ஹாஜிகள் மினா கூடா­ரங்­களில் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கி­யி­ருந்­தனர். இதனை தவிர்க்கும் நோக்கில் சவூதி அரே­பி­யாவின் றியா­தி­லுள்ள இலங்கை தூது­வ­ரா­லயம், ஜித்­தா­வி­லுள்ள கொன்­சி­யூலர் ஜெனரல் அலு­வ­லகம், அரச ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஆகி­யன இணைந்து பல நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளன.

இவர்­க­ளுக்கு தேவை­யான ஆலோ­ச­னை­க­ளையும் உத­வி­க­ளையும் மக்­கா­வி­லுள்ள இலங்­கை­யினை பிறப்­பி­ட­மாகக் கொண்ட சவூதிப் பிர­ஜை­யான அஷ்ஷெய்க் சாதீக் ஹாஜியார் வழங்கி வரு­கின்றார்.

இந்த வருடம் இலங்­கை­யி­லி­ருந்து வந்­துள்ள 3,534 ஹாஜி­களும் B தர கூடா­ரங்­க­ளி­லேயே அர­பா­விலும் மினாவில் தங்­க­வைக்­கப்­ப­டு­கின்­றனர். இலங்கை ஹஜ் வர­லாற்றில் முதற் தட­வை­யாக அனைத்து ஹாஜி­க­ளுக்கும் ஒரே தர கூடா­ரத்தில் தங்க வைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

அத்­துடன் ‘அல் பைத்’ எனும் சவூதியின் தனியார் நிறு­வ­னத்­தி­னா­லேயே இலங்­கையைச் சேர்ந்த அனைத்து ஹாஜி­க­ளுக்­கு­மான ஹஜ் சேவைகள் வழங்­கப்­ப­டு­கின்­றது. கடந்த காலங்­களில் இலங்கை ஹாஜி­க­ளுக்கு பல்­வேறு நிறு­வ­னங்­க­ளினால் பல்­வேறு தரத்­தி­லான சேவைகள் வழங்­கப்­பட்­ட­மை­யினால் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கி­யமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. இவற்­றினை தவிர்க்கும் முக­மா­கவே அனைத்து இலங்கை ஹாஜி­க­ளுக்கும் ஒரே தரத்­தி­லான சேவை அரபா மற்றும் மினா ஆகிய இடங்­களில் வழங்­கப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இலங்கை ஹஜ் தூதுக் குழு விஜயம்
மினா மற்றும் அரபா ஆகிய இடங்­களில் இலங்கை ஹாஜி­க­ளுக்­காக தயார்­ப­டுத்­தப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த கூடா­ரங்­களை இலங்கை ஹஜ் தூதுக் குழு­வினர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (01) நேர­டி­யாக விஜயம் செய்து பார்­வை­யிட்­டனர்.

இந்த மினா கூடா­ரத்­திற்குள் கடந்த 03ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை இரவு இலங்கை ஹாஜிகள் அனை­வரும் அழைத்துச் செல்­லப்­பட்­டனர். இக்­கூ­டா­ரங்கள் மிகவும் சிறப்­பாக அமையப் பெற்­றுள்­ள­தாக ஹஜ் முகவர் நிறு­வன உரி­மை­யா­ளர்கள் தெரி­வித்­தனர்.
அத்­துடன் இலங்கை ஹாஜி­க­ளுக்­கான இறுதிக் கட்ட ஏற்­பா­டுகள் தொடர்பில் இலங்கை ஹஜ் தூதுக் குழுவின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் ஹஜ் முகவர் நிறு­வன பிர­தி­நி­தி­களும் இடையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற சந்­திப்பின் போது பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் விரி­வாகக் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளன.

சம்மாந்துறை யாத்திரிகர் மரணம்
இதே­வேளை, ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­காக சம்­மாந்­து­றை­யி­லி­ருந்து சென்ற 65 வய­தான ஆதம்­பாவா அச்­சி­மு­ஹம்மத் கடந்த 2ஆம் திகதி திங்­கட்­கி­ழமை மதீ­னாவில் காலா­மானர்.

சம்­மாந்­துறை வலயக் கல்வி அலு­வ­ல­கத்தில் சமா­தான கல்வி உத்­தி­யோ­கத்­த­ராக கட­மை­யாற்றி ஓய்­வு­பெற்ற இவர், சம்­மாந்­துறை பிர­தேச சபையின் முன்னாள் உப தவி­சா­ள­ரு­மாவார்.

ஆறு பிள்­ளை­களின் தந்­தை­யான இவர், தனது மனை­வி­யுடன் ஹஜ் கட­மைக்­காக சென்ற சம­யத்­தி­லேயே கால­மானார். இவ­ரு­டைய ஜனாஸா மதீ­னா­வி­லுள்ள ஜன்­னதுல் பக்­கியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

இந்த வருடம் புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்ற வரு­கின்ற ஹாஜி­களின் நலன்­க­ருதி பல்­வேறு நிகழ்ச்சித் திட்­டங்­களை சவூதி அரே­பிய அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

குறிப்­பாக ஹஜ் விசா இன்றி எவரும் மக்கா, அரபா, முஸ்தலிபா மற்றும் மினா­விற்குள் நுழைய முடி­யாது என்ற கண்­டிப்­பான உத்­த­ரவும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. பல இடங்­களில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற திடீர் சோத­னையின் போது சவூதி அர­சாங்­கத்­தினால் ஹாஜி­க­ளுக்­காக வழங்­கப்­பட்ட ‘நுஸுக்’ எனும் அடை­யாள அட்டை பரி­சோ­திக்­கப்­ப­டு­கின்­றது.

ஹஜ் விசா­விற்­காக சேக­ரிக்­கப்­பட்ட அனைத்து தக­வல்­களும் டிஜிட்டல் மயப்­ப­டுத்­தப்­பட்டு நுஸுக் அடை­யாள அட்­டையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்த அடை­யாள அட்­டை­யில்­லா­த­வர்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டால் அவர்­க­ளுக்கு எதி­ரா­கவும், அவர்­களை அழைத்து வந்­த­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும் கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என சவூதி அர­சாங்கம் ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்­தது.

இதற்கு மேல­தி­க­மாக ஹாஜி­களின் நலன்­புரி விட­யத்தில் சவூதி அர­சாங்­கமும் அந்­நாட்டு மக்­களும் அதிக அக்­கறை செலுத்தி வரு­கின்­றனர். ஹாஜி­க­ளுக்குத் தேவை­யான பல வச­திகள் இல­வ­ச­மாக வழங்­கப்­பட்டு வரு­வதை நேர­டி­யாக அவ­தா­னிக்க முடிந்­தது.

மன்னரின் விருந்தினர்கள்
இதே­வேளை, புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­காக சுமார் 2,443 பேர், இரண்டு புனித ஸ்தலங்­களின் பாது­கா­வ­லரும் சவூதி அரே­பிய மன்­ன­ரு­மான சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதின் விருந்­தி­னர்­க­ளாக அழைக்­கப்­பட்­டுள்­ளனர்.
இவர்­களில் ஆயிரம் பேர் பலஸ்­தீ­னத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவார். ஏனையோர் 100 நாடு­க­ளி­லி­ருந்து அழைக்­கப்­பட்­டுள்­ளனர். இதில் மாற்றுத் திற­னா­ளி­களும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளனர்.

மன்­னரின் விருந்­தி­ன­ராக ஹஜ் கட­மையை நிறை­வேற்ற 20 இலங்­கை­யர்­க­ளுக்கு இந்த வருடம் வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்­தா­னியின் சிபா­ரி­சுக்­க­மை­யவே இவர்­க­ளுக்­கான இந்த வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

பலஸ்தீனர்களுக்கும் வாய்ப்பு
அதே­வேளை, பலஸ்­தீன தியா­கி­க­ளுக்­காக அவர்­க­ளது குடும்­பத்­தி­னர்கள் மன்­னரின் விருந்­தினர் திட்­டத்தின் கீழ் இந்த வருடம் ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­கின்­ற­னர்.
சவூதி அரே­பி­யாவின் முடிக்­கு­ரிய இள­வ­ர­சரும் பிர­த­ம­ரு­மான முஹம்மத் பின் சல்­மானின் வழி­காட்­டலில் இஸ்­லா­மிய விவ­கார, தஃவா மற்றும் வழி­காட்டல் அமைச்சர் அஷ்ஷெய்க் கலா­நிதி அப்துல் லதீப் பின் அப்துல் அஸீஸ் அல் ஆல்­ஷெய்கின் தலை­மையில் சவூதி அரே­பி­யாவின் இஸ்­லா­மிய விவ­கார, தஃவா மற்றும் வழி­காட்டல் அமைச்­சினால் மன்­னரின் ஹஜ் விருந்­தா­ளிகள் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.
மன்­னரின் விருந்­தா­ளிகள் ஹஜ் மற்றும் உம்ரா கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்கு மேல­தி­க­மாக மக்கா நக­ரி­லுள்ள பல வர­லாற்று சிறப்பு மிக்க இடங்­க­ளுக்கும் அழைத்துச் செல்­லப்­பட்­டனர்.

கஃபா­வினை பேர்த்­தி­யுள்ள கறுப்பு நிற கிஸ்வா துணி தயா­ரிக்கும் இடம் மற்றும் ஹிரா குகைக்கு அரு­கி­லுள்ள வஹி கண்­காட்­சி­யகம் ஆகி­யன முக்கிய இடங்களாகும். இது போன்று மதீனாவிலும் வரலாற்று சிறப்பு மிக்க பல இடங்களுக்கும் மன்னரின் விருத்தினர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

மன்னரின் ஹஜ் விருந்தினர் நிகழ்ச்சித் திட்டத்தினைப் போன்று உம்ரா நிகழ்ச்சித் திட்டமும் கடந்த 2024ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் வருடாந்தம் 1,000 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

ஹஜ் ஆய்வரங்கு
ஹஜ் கடமைக்கு சமாந்தராக 49ஆவது ஹஜ் ஆய்வரங்கும் சவூதி அரேபிய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் கலாநிதி தௌபீக் அல் ராபியாவின் சிறப்புரையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வரங்கில் பல நாட்டு இளவரசர்கள், அமைச்சர்கள், கல்வியியலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதன்­போது ஹஜ் தொடர்­பான பல்­வேறு தலைப்­புக்­களில் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த வருட ஹஜ் கட­மை­யினை வெற்­றி­க­ர­மாக நிறை­வு­செய்ய சவூதி அரே­பிய அர­சாங்கம் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

இதற்கு தேவை­யான ஒத்­து­ழைப்­புக்­களை அனைத்து ஹாஜி­களும் வழங்­கு­வ­துடன் இதற்­காக பிரார்த்­திக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.