ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யும் நோக்கம் தற்போது கிடையாது

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய

0 40

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்­சையை இரத்துச் செய்யும் நோக்கம் தற்­போது கிடை­யாது. இருப்­பினும் இந்த பரீட்­சையால் மாண­வர்­க­ளுக்கு ஏற்­படும் அழுத்­தங்­களை குறைப்­ப­தற்­கான மாற்­றுத்­திட்­டங்கள் 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­களில் அமுல்­ப­டுத்­தப்­படும் என்று கல்வி அமைச்­சரும், பிர­த­ம­ரு­மான கலா­நிதி ஹரிணி அம­ர­சூ­ரிய தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று நடை­பெற்ற அமர்வின் போது ஐக்­கிய மக்கள் சக்­தியின் மாத்­தளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரோஹிணி கவி­ரத்ன முன்­வைத்த கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கையில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரை­யாற்­றி­ய­தா­வது,

கல்வி மறு­சீ­ர­மைப்­புக்­கான நட­வ­டிக்­கைகள் சிறந்த முறையில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. ஐந்தாம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையை இரத்துச் செய்­வ­தற்­கான தீர்­மானம் தற்­போ­தைய சூழ்­நி­லையில் எடுக்­கப்­ப­ட­வில்லை. ஏனெனில் முழு­மை­யான கல்வி மறு­சீ­ர­மைப்­புக்கும் தற்­போது அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

ஐந்தாம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யினால் மாண­வர்­க­ளுக்கு ஏற்­படும் அழுத்­தங்­களை குறைப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்­கை­ககள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. அந்த கொள்கைத் திட்­டங்கள் 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­களில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.
அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்கள் சேவை விவ­காரம் நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு நீதி­மன்­றத்­துக்கு நகர்த்தல் பத்­திரம் ஒன்றை தாக்கல் செய்­வ­தற்கு அமைச்­ச­ர­வையில் கொள்கை ரீதியில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

நீதி­மன்­றத்தின் தீர்ப்பு கிடைக்கும் வரையில் அரச நிர்­வாக கட்­ட­மைப்பின் ஊடாக எவ்­வித தீர்­மா­னங்­க­ளையும் எடுக்க முடி­யாது.

ஆசி­ரியர் கல்­வி­யியல் கல்­லூ­ரி­களை பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளாக தர­மு­யர்த்த வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் நாங்­களும் உள்ளோம். ஆசி­ரி­யர்­களும் பட்டம் பெற வேண்டும். தேவையான பௌதீக மற்றும் மானிட வளங்களை வழங்காமல் பெயரளவில் மாத்திரம் தரமுயர்த்த முடியாது.

ஆகவே எதிர்வரும் காலப்பகுதிகளில் கட்டம் கட்டமாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.