தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கு முரணாக கால அவகாசம் வழங்கியது ஏன்?

சந்தேகங்கள் எழுவதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

0 40

(எம்.மனோ­சித்ரா)
கொழும்பு மாந­க­ர­சபை மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவு செய்­வ­தற்­கான தினம் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த விட­யத்தில் அர­சாங்கம் கூறிய எதுவும் செல்­லு­ப­டி­யா­க­வில்லை. எவ்­வா­றி­ருப்­பினும் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் அறி­விப்­பிற்கு முர­ணாக இரு வார கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளமை சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

கொழும்­பி­லுள்ள ஐக்­கிய மக்கள் சக்தி அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் இதனைத் தெரி­வித்த அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
கொழும்பு மாந­க­ர­சபை மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவு செய்­வ­தற்­கான தினம் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதற்­க­மைய எதிர்­வரும் 16ஆம் திகதி இதற்­கான வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அர­சாங்கம் கூறி­யது எதுவும் இங்கு செல்­லு­ப­டி­யா­க­வில்லை. 50 சத­வீதம் அல்­லது அதற்கும் அதிக வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ள முடி­யாத சபை­களில் வாக்­கெ­டுப்பின் மூல­மா­கவே பத­வி­க­ளுக்­கான நிய­ம­னங்கள் தெரிவு இடம்­பெறும் என்­ப­தையே நாம் ஆரம்­பத்­தி­லி­ருந்து கூறிக் கொண்­டி­ருக்­கின்றோம்.

கொழும்பு மாந­க­ர­ ச­பையில் ஜன­நா­யக ரீதி­யாக ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான சகல நட­வ­டிக்­கை­க­ளையும் ஐக்­கிய மக்கள் சக்தி முன்­னெ­டுத்து வரு­கி­றது. அதற்­க­மைய எமது வேட்­பா­ளரை மேய­ராக நிய­மிக்க முடியும் என்று நம்­பு­கின்றோம். எவ்­வா­றி­ருப்­பினும் சதித்­திட்­டங்கள் மூலம் இந்த முயற்­சி­களை முறி­ய­டிப்­ப­தற்கு அர­சாங்கம் முயற்­சித்து வரு­கி­றது. ஜனா­தி­பதி மீண்டும் சில குழுக்­களை சந்­தித்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் கிடைத்­துள்­ளன.

எவ்­வா­றி­ருப்­பினும் இது 16ஆம் திகதி வரை எதற்­காக காலம் தாழ்த்­தப்­பட்­டது என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது. தேர்தல் ஆணைக்­குழு வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யிட்ட பின்னர் பெரும்­பான்மை அற்ற சபை­களில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு ஒரு வாரம் மாத்­தி­ரமே கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது. அவ்­வா­றி­ருக்­கையில் எதற்­காக 16ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்­பட்­டது என்­பது சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. இதற்­குள்ளும் அர­சியல் தலை­யீடு காணப்­ப­டு­கி­றதா என்ற கேள்­வியும் எழு­கி­றது.

மேயர் ஐக்­கிய மக்கள் சக்­தியின் சார்­பிலும், பிரதி மேயர் ஐக்­கிய தேசிய கட்சியின் சார்பிலும் நியமிக்கப்படுவர். அரசாங்கம் ஏனைய விடயங்களில் செயற்படுவதைப் போன்று முகநூல் ஊடாக இந்த பதவிகளுக்கான நியமனங்களை வழங்க முடியாது. அதேபோன்று ஜனாதிபதி குறிப்பிட்டதைப் போன்று சட்ட விரோதமாக செயற்படவும் முடியாது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.