அரபா நாளின் நோன்பும் அதன் தினமும் பற்­றிய கருத்து வேறு­பாடுகள் – ஒரு பார்வை

0 82

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி)

அரபா நாளில் நோன்­பி­ருப்­பது சுன்­னத்தா இல்­லையா என்ற ஒரு கருத்து வேறு­பாடு உண்டு. இதனை யாரும் மறுப்­ப­தற்கு இல்லை. ஆனால் தனிப்­பட்ட முறையில் என்னைப் பொறுத்­த­வ­ரையில் அந்த நாளில் நோன்பு நோற்­பது தான் சிறந்­தது என்ற கருத்தை ஏற்­றுக்­கொள்ள முடி­கி­றது.

ஆனால்,நோன்பு நோற்கத் தேவை­யில்லை என்று யாரும் கூறினால் அவர்­களை யாரும் குறை கூற முடி­யாது. ஏனென்றால் இது இமாம்­க­ளுக்கு மத்­தியில் இரு கருத்­துக்­க­ளுக்கு இடம்­பா­டான விட­ய­மாகும்.

அடுத்­த­தாக, அரபா தினம் எது என்­பதைப் பொறுத்த வரை­யிலும் சட்ட அறி­ஞர்­க­ளுக்கு மத்­தியில் கருத்து வேறு­பாடு நில­வு­கி­றது.

மக்கா சென்­றுள்ள ஹஜ்­ஜா­ஜி­க­ளுக்­கான ஒன்­ப­தா­வது நாளான அவர்­க­ளது அரபா நாளைத் தான் உலகின் எல்லாப் பகு­தி­க­ளிலும் இருக்கும் முஸ்­லிம்கள் தமக்­கான அரபா நாளாக கணிக்க வேண்டும்; அந்த நாளில் தான் அவர்கள் அரபா நோன்பை நோற்க வேண்டும் என்ற ஒரு கருத்து உள்­ளது.

சவூதி அரே­பி­யாவில் இயங்கும் அறி­வு­பூர்­வ­மான ஆய்­வு­க­ளுக்கும் ஃபத்­வா­வுக்­கு­மான நிரந்­த­ர­மான குழு, பத்­வா­வுக்­கான எகிப்தின் நிலையம் போன்ற நிறு­வ­னங்­களும், பிர­பல அறி­ஞர்­க­ளான ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் பாஸ், ஷெய்க் ஹுசாம் அஃபானா, ஷெய்க் சுலைமான் பின் மாஜித் உள்­ளிட்ட இன்னும் பலரும் இக்­க­ருத்தில் இருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்கு மாற்­ற­மான கருத்துக் கொண்­டி­ருப்­ப­வர்­களும் சட்ட அறி­ஞர்­க­ளுக்கு மத்­தியில் இருக்­கின்­றனர். அதா­வது உலகின் வெவ்­வேறு பகு­தி­களில் வித்­தி­யா­ச­மான நாட்­களில் துல்­ஹிஜ்ஜா மாதத்­திற்­கான பிறை தென்­பட்­டி­ருக்­கலாம். எனவே ஒவ்­வொரு நாட்­டிலும் இருப்போர் தமது பிர­தே­சத்தின் படி­யான ஒன்­ப­தா­வது நாளையே அரபா தின­மாக கருத வேண்டும் என்றும் அந்த நாளில் தான் அவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்றும் அந்த சட்ட அறி­ஞர்கள் கூறு­கின்­றனர்.

ஐரோப்­பிய ஃபத்வா பேர­வையும், ஃபத்வா மையமும் போன்ற நிறு­வ­னங்­களும் முஹம்­மது பின் சாலிஹ் அல்­உ­தைமீன், ஷெய்க் அப்­துல்லாஹ் பின் ஜப்ரின், கலா­நிதி ஹானி பின் அப்­துல்லாஹ் அல் ஜுபைர், பேரா­சி­ரியர் அஹ்மத் அல்­ஹஜ்ஜி அல்­குர்தி மற்றும் பேரா­சி­ரியர் டாக்டர் காலித் அல் முஷைகீஹ் போன்ற இன்னும் பல அறி­ஞர்­களும் இந்தக் கருத்தை கூறி­யி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இஸ்­லா­மிய சட்ட மரபில் இதில் மாத்­தி­ர­மன்றி இன்னும் பல விட­யங்­களில் இவ்­வா­றான கருத்து வித்­தி­யா­சங்கள் தொடர்ந்து இருந்து வரு­கின்­றன. அல்­லாஹ்வும் ரசூலும் இவற்றில் திட்­ட­வட்­ட­மான முடி­வு­களை தராத வரைக்கும் நாம் திட்­ட­வட்­ட­மாக எத­னையும் கூறு­வதை முற்றும் முழு­தாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கருத்து முரண்­பா­டுகள் இருப்­பது இஸ்­லா­மிய சட்ட மரபின் செழு­மை­யையும் விரிந்த தன்­மை­யையும் காட்­டுமே தவிர அது முஸ்லிம் சமூ­கத்தின் முரண்­பாட்­டுக்­கான வழி­க­ளாக இருக்கக் கூடாது.

“ஓர் ஆட்­சி­யாளர் ஆட்சி செய்யும் போது அவர் ஒரு விட­யத்தில் இஜ்­திஹாத் செய்து சரி­யான முடிவைப் பெற்றால் அவ­ருக்கு இரண்டு கூலிகள் கிடைக்கும். அவர் ஆட்சி செய்யும் போது இஹ்­திஹாத் செய்து பின்பு பிழை செய்தால் அவ­ருக்கு ஒரு கூலி கிடைக்கும்” (புஹாரீ-7352) என்­பது ஹதீ­ஸாகும்.

இஜ்திஹாத் என்றால் ஒரு குறிப்­பிட்ட விடயம் தொடர்­பாக சேக­ரிக்க வேண்­டிய சகல அறி­வு­க­ளையும் தேடிப் பெற்றுக் கொள்ளும் ஒருவர் தனது உச்­ச­கட்ட ஆராய்ச்சித் திறனை பிர­யோ­கித்து பெறு­கின்ற முடி­வாகும். அவ­ரது உச்­ச­கட்ட முயற்­சிக்கு இந்த கூலி கிடைக்­கி­றது.

எனவே ஒரு விவ­கா­ரத்தில் பல அபிப்­பி­ரா­யங்கள் நிலவும் பொழுது அவற்றில் இஜ்­திஹாத் மூலம் பெற்ற ஏதா­வது ஒரு கருத்தை ஒருவர் பின்­பற்­று­கின்ற பொழுது அதற்­காக அவ­ருக்கு நன்மை வழங்­கப்­படும்.மாறாக அவர் பிழை செய்­த­தாகக் கூற முடி­யாது என்ற இந்த இஸ்­லாத்தின் நிலைப்­பாடு அற்­பு­த­மான ஒன்­றாகும். சிந்­தனை சுதந்­தி­ரத்­திற்கு இஸ்லாம் வழங்­கிய உயர்ந்த கட்ட கண்­ணி­ய­மு­மாகும்.

உண்­மையில் வித்­தி­யா­ச­மான கருத்­துக்கள் அல்­லாஹ்வின் அருள்கள் தான். இஸ்­லாத்தின் இலகு தன்­மைக்கும் விட்டுக் கொடுக்கும் இயல்­புக்­கு­மான ஆதா­ரங்­க­ளாக அவை காணப்­ப­டு­கின்­றன.

ஆனால் கருத்து முரண்­பா­டு­களை வைத்து சமூகம் பிள­வு­ப­டு­வதை அனு­ம­திக்க முடி­யாது. ஒரு விவ­கா­ரத்தில் நிலவும் இரண்டு கருத்தில் ஏதா­வது ஒரு கருத்தை ஏற்று செயல்­ப­டு­வதில் எந்தத் தவறும் இருக்க முடி­யாது. இதில் எவரும் பிடி­வா­த­மாக இருக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. அனை­வ­ருக்கும் அல்­லாஹ் கூலி கொடுக்க போது­மா­னவன்.
நாம் அதிக நேரம் விவா­திக்க வேண்­டிய, அதிகம் கரி­சனை காட்ட வேண்­டிய, முன்­னு­ரிமை வழங்க வேண்­டிய பல விட­யங்கள் சமூ­கத்தில் இருக்­கின்­றன. எனவே இது­போன்ற விட­யங்­க­ளுக்­காக எமது கால நேரத்­தையும் வளங்­க­ளையும் செல­வ­ழிப்­பது முறை­யல்ல.
இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் வியா­ழக்­கி­ழமை அரபா நோன்பு பிடிப்­ப­வர்கள் பிடிக்­கட்டும். வெள்­ளிக்­கி­ழமை பிடிக்க விரும்­பு­ப­வர்கள் பிடிக்­கட்டும். யாரும் எவ­ரையும் குறை சொல்ல வேண்டிய தேவையில்லை.

அல்லாஹ்வே எல்லாவற்றையும் அறிந்தவன். அல்லாஹ்வே எல்லோருக்கும் கூலி கொடுக்கப் போதுமானவன்.

யா அல்லாஹ் இம்முறை அரபா நோன்பை நோற்று அதன் மூலம் கிடைக்கின்ற முழுமையான பலன்களை எமக்கு நசீபாக்குவாயாக!

பலஸ்தீன பூமியிலே அல்லல்படும் எமது உறவுகளுடைய கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் நீக்கி அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை கொடுப்பாயாக!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.