ஹஜ் கடமைக்காக இவ்வருடம் 2 மில்லியன் யாத்திரிகர்கள் மக்காவில் ஒன்றுகூடியுள்ளனர்

0 30

(எம்.ஐ.அப்துல் நஸார்)
சவூதி அதி­கா­ரிகள் பாது­காப்­பான மற்றும் ஒழுங்­க­மைப்­பு­ட­னான ஹஜ் கடமையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்ள நிலையில், சுமார் 2 மில்­லி­ய­ மக்கள் கடு­மை­யான பாலை­வன வெப்­பத்தைத் தாங்­கிக்­கொண்டு புனித மக்­கா­வில் ஒன்றுகூடியுள்ளனர்.

இந்த வாரம் வெப்­ப­நிலை 40 பாகை செல்­சியஸ் (104 பாகை பரனைட்) ஐத் தாண்டி உயரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த வருடம் ஏற்­பட்ட துர­திஷ்­ட­வ­ச­மான சம்­பவம் மீண்டும் நிக­ழாமல் தடுப்­ப­தற்­காக, (1,300 க்கும் மேற்­பட்டோர் வெப்பம் கார­ண­மாக இறந்­தனர், இவர்­களுள் பெரும்­பா­லா­ன­வர்கள் முறை­யாகப் பதிவு செய்­யாது ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­காக மக்­கா­வினுள் நுழைந்­த­வர்­க­ளாவர்) வெப்­பத்தைத் தணிக்கும் கட­மையில் ஈடு­ப­டு­வ­தற்­காக சவூதி அரே­பியா 250,000 அதி­கா­ரி­க­ளையும் 40 நிறு­வ­னங்­க­ளையும் ஈடு­ப­டுத்­தி­யுள்­ளது.

அதி­கா­ரிகள் நிழல் வல­யங்­களை 50,000 சதுர மீட்­ட­ருக்கு விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளனர், 400க்கும் மேற்­பட்ட குளி­ரூட்டும் பிரி­வு­க­ளையும் நிறு­வி­யுள்­ளனர். அத்­துடன் புனித நகரம் முழு­வதும் வைத்­தியப் பணி­யா­ளர்கள் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இஸ்­லாத்தின் ஐந்து தூண்­களில் ஒன்­றான ஹஜ், அதை மேற்­கொள்ள உடல் ரீதி­யா­கவும் நிதி ரீதி­யா­கவும் திறன் கொண்ட முஸ்­லிம்கள் கட்­டா­ய­மாக நிறை­வேற்ற வேண்­டிய கட­மை­யாகும். கடு­மை­யான வெப்பம் மற்றும் இறுக்­க­மான பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் இருந்­த­போ­திலும், புனித பய­ணத்தில் பங்­கேற்கக் கிடைத்­த­மைக்கு யாத்­திரி­கர்கள் மகிழ்ச்­சி­யையும் நன்­றி­யையும் தெரி­வித்­தனர். ‘இது உண்­மையில் அல்­லாஹ்வின் அரு­ளாகும்’ என பிலிப்­பைன்ஸைச் சேர்ந்த யாத்­திரி­க­ரான அப்துல் மஜித் அதி தெரி­வித்தார்.

அதி­கப்­ப­டி­யான மக்கள் மக்­கா­வினுள் நுழை­வதைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக, சவூதி அரே­பிய அதி­கா­ரிகள் ட்ரோன்கள், செயற்கை நுண்­ண­றிவு மூல­மான கண்­கா­ணிப்பு மற்றும் குறுஞ்­செய்தி எச்­ச­ரிக்­கை­களைப் பயன்­ப­டுத்தி பதிவு செய்­யாத யாத்­திரி­கர்கள் மீது பெரிய அள­வி­லான நட­வ­டிக்­கை­யினை ஆரம்­பித்­துள்­ளனர். செல்­லு­ப­டி­யாகும் ஹஜ் அனு­மதி இல்­லாமல் மக்­கா­வினுள் நுழை­ப­வர்கள் நாடு­க­டத்­தப்­ப­டுதல், கடு­மை­யான அப­ரா­தங்கள் அல்­லது சவூதி அரே­பி­யா­விற்குள் நுழை­வ­தற்கு 10 ஆண்­டுகள் தடை விதிக்­கப்­ப­டலாம்.

சென­கலைச் சேர்ந்த 52 வய­தான மரி­யமா உட்­பட பல யாத்­திரிகர்­க­ளுக்கு, ஹஜ் ஒரு வாழ்நாள் கனவு நன­வா­கி­யுள்­ளதை இந்­த­முறை யாத்­திரை குறிக்­கின்­றது. ‘நான் அதைப் பற்றி கனவு கண்டேன், இங்கு வர­வேண்டும் என்றே ஒவ்­வொரு முறையும் யோசித்தேன்,’ என அவர் கூறினார். சவூதி அரேபியா ஹஜ் மற்றும் உம்ராவிலிருந்து ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான வருமானத்தை ஈட்டுகிறது, அதே நேரத்தில் இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் என்ற வகையில் சவூதி அரேபியாவின் மத மற்றும் அரசியல் அந்தஸ்தையும் வலுப்படுத்துகிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.