பலஸ்தீனில் நிகழும் இன அழிப்பை தமிழர்களும் எதிர்க்கின்றனர்

இஸ்ரேலின் செயற்பாட்டை எதிர்க்கும் கடமை எமக்கு உண்டு என்கிறார் கஜேந்திரகுமார் பொன்­னம்­பலம்

0 30

(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ராக முன்னெடுக்கப்படும் இன­வ­ழிப்­புக்கு எதி­ரான நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்­களும் இருக்­கின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தெரி­வித்தார்.

இஸ்ரேல் அர­சாங்கம் பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்கும் இன­வ­ழிப்பை எதிர்க்க வேண்­டிய கடமை நீதி நியாயத்தை விரும்பும் எந்தவொரு இனத்திற்கும் மனிதர்களுக்கும் இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்­டத்தின் கீழான ஒழுங்­கு­வி­திகள் மீதான விவா­தத்தில் உரை­யாற்­று­கையில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரை­யாற்­றி­ய­தா­வது, சபையில் எனக்கு முன்னர் உரை­யாற்­றிய உறுப்­பினர் ஒருவர், இந்த அர­சாங்கம் நாட்டின் முஸ்லிம் மக்­க­ளு­டனும், பலஸ்­தீன மக்­க­ளு­டனும் உறு­தி­யாக இருப்­ப­தாக கூறினார். இவ்­வி­டத்தில் நான் ஒரு­வி­ட­யத்தை சுட்­டிக்­காட்­டு­கின்றேன். அதா­வது தமிழ் மக்­களும் பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ரான இன­வ­ழிப்­புக்கு எதி­ராக அவர்­க­ளுடன் ஒன்­றாக இருக்­கின்றனர் என்­ப­தனை கூறு­கின்றோம்.

இதனை கூறு­வதால் நாங்கள் யூதர்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்ல. அவர்­க­ளுக்கு எதி­ரா­கவும் இனப்­ப­டு­கொலை நடந்­துள்­ளது. அவர்­க­ளுக்கும் நியாயம், நீதி மற்றும் பாது­காப்பு அவ­சி­ய­மாகும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்து கிடை­யாது.

ஆனால் யூதர்கள் என்ற பெயரில் இன்று இஸ்ரேல் அர­சாங்கம் பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்கும் இன­வ­ழிப்பை எதிர்க்க வேண்­டிய கடமை நீதி நியாயத்தை விரும்பும் எந்தவொரு இனத்திற்கும் மனிதர்களுக்கும் இருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்டுகின்றேன் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.