தவ­ற­விடும் பயம் (Fear of Missing Out).

0 55

கேட்­பதே கிடைக்கும்
ஒருவர் அதி­க­மாக பார்க்க விரும்­பு­கின்ற உள்­ள­டக்­கங்கள் ஆபத்­தா­ன­வை­யாக இருந்தால், உதா­ர­ணத்­திற்கு தற்­கொலை தொடர்­பான, அல்­லது தம்மைத் தாமே துன்­பு­றுத்திக் கொள்­ளுதல் தொடர்­பான வீடி­யோக்­களை ஒருவர் அதிகம் பார்­வை­யிட்டால் டிக் டாக் நிறு­வனம் அத்­த­கைய உள்­ள­டக்­கங்­க­ளையே அவ­ருக்கு பெற்றுக் கொடுக்­கி­றது. அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் குறித்த நபர் தவ­றான தீர்­மா­னங்­களை மேற்­கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு. சிறு­வர்கள் ஆரோக்­கி­ய­மான விட­யங்­களை பார்­வை­யிட்டால் ஆரோக்­கி­ய­மான விட­யங்­களை பெற்றுக் கொள்­வார்கள். ஆபத்­தான உள்­ள­டக்­கங்­களை பார்­வை­யிட்டால் டிக் டாக் போன்ற சமூக வலைத்­தள நிறு­வ­னங்கள் ஆபத்­தான உள்­ள­டக்­கங்­களை கொண்டு சேர்க்­கின்­றன. இது சிறு­வர்­களை பாதிக்­கின்ற ஒரு விட­ய­மாகும்.

சிறிய வயதில் ஒருவர் சமூக வலை­த்தளத்­திற்குள் பிர­வே­சிக்­கின்ற பொழுது அவ­ரு­டைய வளர்ச்­சி­யோடு ஒட்­டி­ய­தாக அவரில் ஏற்­ப­டு­கின்ற சிந்­தனை மற்றும் நடத்தை மாற்­றங்­க­ளையும் சமூக வலைத்­த­ளங்கள் மிக நுணுக்­க­மாக அவ­தா­னித்து வரு­கின்­றன. அவர்­களின் நடத்தை மாற்­றத்­திற்கு ஏற்ப சிறு­வர்கள் மேற்­கொள்ளும் கொள்­வ­னவு தீர்­மா­னங்­க­ளையும் அவை நுணுக்­க­மாக பதிவு செய்­கின்­றன.

பிறக்­காத குழந்­தைக்கும் பாதிப்பு
Veronica Barassi (2020) எழு­திய சைல்ட் டேட்டா சிட்­டிசன் (child data citizen) ஒரு ஆபத்­தான தக­வலை வெளிப்­ப­டுத்தி இருக்­கி­றது. அதா­வது, சில சமூக வலைத்­த­ளங்கள் குறித்த சில நபர்­களின் பயன்­பாட்டின் கார­ண­மாக குழந்­தைகள் பிறப்­ப­தற்கு முன்­ப­தா­கவே அக் குழந்­தை­களின் எதிர்­காலம் எவ்­வாறு அமையப் போகி­றது என்­பது பற்­றிய தக­வல்­க­ளையும் திரட்டி விடு­வ­தாக அவர் குறிப்­பி­டு­கிறார். பிறப்­ப­தற்கு முன்­ப­தா­கவே சிறு­வர்கள் வர்த்­தகப் பண்­டங்­க­ளாக மாற்­றப்­ப­டு­கி­றார்கள் என்­பது அவ­ரு­டைய அவ­தா­னிப்பு. தந்தை அல்­லது தாயின் சமூக ஊடகப் பாவனை, கர்ப்ப காலத்தில் அவர்கள் உள்­வாங்கிக் கொள்­கின்ற சமூக ஊடக தக­வல்கள், அவர்கள் பார்­வை­யி­டு­கின்ற வீடி­யோக்கள், சக நண்­பர்­க­ளுடன் அவர்கள் பரி­மா­று­கின்ற தக­வல்கள் என்­ப­ன­வற்­றி­லி­ருந்து ஊடகத் தளங்கள் இத்­த­கைய தக­வல்­களை திரட்டிக் கொள்­வ­தாக அவர் குறிப்­பி­டு­கிறார்.

சில­போது, தாய்­மார்கள் தமது கர்ப்ப காலங்­களில் இணை­ய­த­ளத்­திலும் சமூக தளங்­க­ளிலும் ஆரோக்­கிய குறிப்­பு­க­ளையும் மருத்­துவ உள்­ள­டக்­கங்­க­ளையும் பெறு­வ­துண்டு. தமது உடலில் ஏற்­ப­டு­கின்ற பருவ மாற்­றங்­களை பதி­வேற்றம் செய்து அது தொடர்­பான ஆலோ­சனை குறிப்­பு­களை பெற்றுக் கொள்­வதும் உண்டு. இது எமது சமூ­கத்தில் மிக சர்வ சாதா­ர­ண­மாக நடை­பெ­று­கின்ற ஒரு விடயம். கர்ப்ப காலத்தில் பயன்­ப­டுத்­து­வ­தற்கு என்றே சிலர் தனி­யான கைய­டக்கப் பிர­யோ­கங்­களை வைத்­தி­ருக்­கி­றார்கள். இவ்­வாறு, பெற்றோர் அல்­லது குழந்தை பரா­ம­ரிப்­பா­ளர்கள் இணை­ய­த­ளத்­துக்கு வழங்­கு­கின்ற தக­வல்­களின் மூலம் ஒரு குழந்­தையின் பால் நிலை, அந்த குழந்தை சார்­பாக என்ன பொருட்கள் கொள்­வ­னவு செய்­யப்­பட உள்­ளன, அந்த குழந்­தையின் மீது உள்ள அன்­பினால் எத்­த­கைய பொருட்­களை பெற்றோர் அதிகம் தேடிப் பார்க்­கின்­றார்கள் போன்ற விட­யங்­களை எல்லாம் சமூக ஊடக அல்­கோ­ரிதம் கணித்துக் கொள்­கி­றது. எனவே, பெற்றோர் தமது இணை­ய­தள பயன்­பாட்டின் கார­ண­மாக கருவில் இருக்­கின்ற குழந்தை தொடர்­பான தக­வல்­க­ளையும் வர்த்­தக உல­கிற்கு வழங்கி விடு­கி­றார்கள்.
ஹாவட் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சட்­டத்­துறை பேரா­சி­ரியர் Leah Plunkett “இணை­ய­தள கரு­வி­களின் ஈர்த்­தெ­டுக்­கின்ற தன்மை பெற்றோர் தம்மை அறி­யா­மலே தமது பிள்­ளை­களின் தக­வல்­களை தாராள மன­தோடு பெற்றுக் கொடுக்க செய்­கின்­றது’’ எனக் குறிப்­பிட்­டுள்ளார்.என­வேதான், பெற்­றோரும் சிறு­வர்­களும் இணைய மற்றும் சமூக வலைத்­தள தொழில்­நுட்­பத்தின் ஈர்ப்பு சக்தி பற்றி அறிந்து வைத்­தி­ருப்­பது முக்­கியம் எனப்­ப­டு­கி­றது.

சில ஈர்த்­தி­ழுக்கும் உத்­திகள்
இது­வரை தொழில்­நுட்­பத்தின் ஈர்த்­தெ­டுக்­கின்ற வடி­வ­மைப்பு என்றால் என்ன என்­பது பற்றி விரி­வாக நோக்­கினோம்.
இனி சிறு­வர்­க­ளையும் முதி­ய­வர்­க­ளையும் ஈர்த்து இருப்­ப­தற்­காக தொழில்­நுட்­பங்கள் எத்­த­கைய உத்­தி­களை பயன்­ப­டுத்­து­கின்­றன என்­பதை தொகுத்து நோக்­கலாம்.

1. தவ­ற­விடும் பயம்
(Fear of Missing Out).
தவ­ற­விடும் பயம் என்­பது சமூக ஊட­கத்தை பயன்­ப­டுத்­து­கின்ற ஒருவர் ஏதா­வது ஒரு முக்­கி­ய­மான விட­யத்தை தவற விட்டு விட்­டோமோ, அதனால் தமக்­கான சமூக அங்­கீ­காரம் குறைந்­து­விட்­டதோ என்ற அச்­சத்தை தோற்­று­விப்­பதாகும். தான் பதி­வேற்றம் செய்த ஒரு விட­யத்­திற்கு அதிக லைக் மற்றும் கமெண்ட்ஸ் கிடைக்க வேண்டும் என்ற எதிர்­பார்ப்பு இயல்­பா­கவே எம்­மிடம் இருப்­ப­துண்டு. நமது பதி­வு­க­ளுக்கு சக நண்­பர்­க­ளி­டமும் புதி­ய­வர்­க­ளி­டமும் இருந்து அதிக பின்னூட்­டல்கள் கிடைக்க வேண்டும் என்ற எண்­ணமும் அவ்­வாறு தான்.

தவ­ற­விடும் பயம் என்­பது இணை­ய­தள பாவ­னைக்கு ஒருவர் அடி­மை­யாக இருப்­பதை எடுத்­துக்­காட்டும் அறி­கு­றி­யாகும். இது, ஒருவர் தனது இலத்­தி­ர­னியில் கரு­வி­யி­லி­ருந்து அல்­லது சமூக வலைத்­த­ளத்­தி­லி­ருந்து பிரிந்து இருக்க முடி­யாத உள­வியல் நெருக்­க­டியை குறிக்­கி­றது. எப்­போதும் இணை­ய­த­ளத்­தையும் சமூக ஊட­கங்­களில் நடை­பெ­று­கின்ற சம்­ப­வங்­க­ளையும் பார்­வை­யிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உள­வியல் உந்­து­தலை நாம் இவ்­வாறு குறிப்­பி­டலாம். வகுப்பில் இருந்­தாலும் தமது சமூக ஊடக கணக்­கு­களில் ஏதா­வது இடம்­பெற்று விட்­டதோ என்ற எண்ணம் ஒரு­வித அச்ச உணர்வை தோற்­று­விக்கும். அடிக்­கடி இலத்­தி­ர­னியல் கரு­வி­களை கையில் எடுத்து பார்­வை­யிட வேண்டும் என்­பது போல தோன்றும். வகுப்பில் மறை­வாக வைத்­தி­ருந்த கைய­டக்கத் தொலை­பே­சியை ஆசி­ரி­ய­ருக்கு அல்­லது ஆசி­ரி­யைக்குத் தெரி­யாமல் மறை­மு­க­மாக ஒருவர் பார்­வை­யி­டு­வது தவ­ற­விடும் பயத்தின் வெளிப்­பா­டாகும். ஒரு­வ­ரு­டைய கல்வி, சமூக மற்றும் பொரு­ளா­தார நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்­டாலும் கூட அடிக்­கடி இலத்­தி­ரனியல் கரு­வியினை கையில் எடுத்து தனது வலைத்­த­ளங்­களில் என்ன நடை­பெ­று­கின்­றது என்­பதை தேடிப் பார்க்கத் தோன்­று­வது தவ­ற­விடும் பயத்தின் மற்றும் ஒரு வெளிப்­பா­டாகும். ஒரு­வ­ருக்கு தவ­ற­விடும் பயம் ஏற்­ப­டு­கி­றது என்றால் அவர் தன்­னு­டைய சுய கட்­டுப்­பாட்டை மீறி இணை­ய­த­ளத்தை பயன்­ப­டுத்­து­கிறார் என்­பதே அர்த்தம். தனக்குத் தெரி­யாமல் சமூக வலைத்­த­ளத்தில் ஏதோ ஒன்று நடந்து விட்­டது, சமூக வலைத்­த­ளத்தில் இடம்­பெ­று­கின்ற உரை­யாடல் ஒன்றில் தனது கருத்து இடம் பெற­வில்லை, யாரோ ஒருவர் தனக்கு குறுஞ்­செய்­தியை அனுப்பி இருப்பார், தான் பதி­விட்ட கவிதை சமூக வலைத்­த­ளத்தில் ஒரு பெரிய பேசு பொரு­ளாக மாறி இருக்க வேண்டும் என பல வழி­களில் இந்த தவ­ற­விடும் பயம் ஏற்­ப­டலாம்.

Altuwairiqi et al. (2019) ஆகியோர் மேற்­கொண்ட ஆய்வு இந்த தவ­ற­விடும் பயம் ஒரு­வரில் தூக்­க­மின்மை, அச்சம், வாழ்க்கைத் தேர்ச்­சிகள் குறை­வ­டைதல், உணர்வு சார் மன அழுத்தம், அன்­றாட உணர்­வு­களை முகாமை செய்ய முடி­யாமல், தனிப்­பட்ட உறவு நிலையில் சிக்­கல்கள் ஏற்­ப­டுதல் போன்­ற­வற்றை தோற்­று­விக்க முடியும் என்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. Abel et al. (2016) ஆகியோர் மேற்­கொண்ட ஆய்வு சமூக ஊட­கத்தை பயன்­ப­டுத்­து­கின்ற ஒருவரிடம் ஏற்­ப­டு­கின்றது. இது தவ­ற­விடும் பயம் பதக்­க­ளிப்­பி­னையும் பெறு­ம­தி­யான ஒன்றை இழந்­து­விட்ட உணர்­வி­னையும் ஏற்­ப­டுத்­து­வ­தாக குறிப்­பி­டு­கி­றது. அத்­தோடு, தவ­ற­விடும் பயத்தின் கார­ண­மாக இணை­ய­த­ளத்தை அல்­லது சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­வர்கள் தொடர்ந்தும் அதிலே ஈடு­பாடு காட்டும் ஆர்­வத்தை பெறு­கி­றார்கள். இதனால் ஏனைய சமூக நட­வ­டிக்­கைகளில் இருந்து அவர்­க­ளது கவனம் திசை திருப்பப்படு­கி­றது. Przybylski et al. (2013) ஆகியோர் ஒரு சுவா­ர­சி­ய­மான விட­யத்தை பதிவு செய்­கின்­றனர். அதா­வது, சமூக ஊட­கத்தை அள­வுக்­க­திகம் பயன்­ப­டுத்­து­கின்ற சிலர் தாம் விரும்­பு­கின்ற நடி­கர்கள், நடி­கைகள், விளை­யாட்டு வீரர்கள், பிர­பலங்கள், சமூகத் தலை­வர்கள், சமூ­கத்தில் தாக்கம் செலுத்­து­கின்­ற­வர்கள் போன்­றோரின் வாழ்க்­கையில் ஏதா­வது மாற்றம் நிகழ்ந்துவிட்­டதோ என்ற அச்­சத்­திலும் அடிக்­கடி இலத்­தி­ர­னியல் கரு­வி­களை கையில் எடுத்து சமூக ஊட­கங்­க­ளுக்குள் பிரவேசிக்க முற்படுகின்றனர்.

அண்மையில் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் மனைவி ஸைரா பானு, தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார் என்ற செய்தி இணையதளங்களில் வைரலாக பரவிய போது அது ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் ரசிகர்களையும் பாதித்தது. அப்போது ஒருவர் “ எந்த ஒரு விடயத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை. நல்ல மனிதரான ஏ ஆர் ரஹ்மானின் வாழ்வில் இத்தகைய ஒரு சம்பவம் இடம்பெற்று இருக்கக் கூடாது. அவருடைய மனைவி அவரை உண்மையில் விவாகரத்து செய்யவில்லை என்றே என் மனம் எண்ணுகிறது. எனினும் அடுத்த கட்டமாக ஏதாவது ஒரு திகில் மாற்றம் அவர்களுடைய விடயத்தில் நடந்து விடுமோ என்ற எண்ணத்தால் அடிக்கடி youtube தளத்துக்குச் சென்று வீடியோக்களை பார்வையிட தோன்றுகிறது’’ என ஒருவர் குறிப்பிட்டார். இது தவறவிடும் பயத்தின் மற்றுமொரு வெளிப்பாடாகும்.

(தொடரும்…)

  • Vidivelli

Leave A Reply

Your email address will not be published.