மெல்ல மெல்ல வெளிக்கிளம்பும் இனவாத பூதம்

0 51

எஸ்.என்.எம்.சுஹைல்

இலங்கை என்­பது பல இனங்­களும், பல மதங்­களும், பல கலாச்­சா­ரங்­களும் இணைந்து வாழும் ஓர் அழ­கான நாடாகும். எனினும், அர­சியல், வியா­பார மற்றும் பல்­வேறு சுய இலா­பங்­க­ளுக்­காக அவ்­வப்­போது இன,மத­வா­தங்கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்டு இலங்­கையின் பன்­மைத்­துவம் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­ப­டு­கின்­றது.
நூற்­றாண்­டு­க­ளுக்கும் மேலாக அரங்­கேறும் இந்த கசப்­பான சம்­ப­வங்கள் நாட்டின் அமை­தியை கெடுத்து வரு­கி­ன்றன. குறிப்­பாக 30 வரு­ட ­கால உள்­நாட்டு யுத்தம், இனக்­க­ல­வ­ரத்தின் விளைவு, அந்த வடு மறை­வ­தற்குள் நாட்டில் முஸ்­லிம்கள் மீது பேரி­ன­வாதம் பாயத்­தொ­டங்­கி­யது. குறிப்­பாக பொது­ப­ல­சேனா அமைப்பு, சிங்­ஹல ராவய, ராவணா பலய மற்றும் அவ்­வ­மைப்­புகளைச் சார்ந்த இன்னும் பல குழுக்கள் கடந்த ஒன்­றரை தசாப்­த­கா­ல­மாக நாட்டில் அமை­திக்கு பங்கம் விளை­வித்து வரு­கின்­றன.

அர­க­லய மக்கள் எழுச்சிப் போராட்டம் பேரி­ன­வா­தத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் என எதிர்­பார்க்­கப்­பட்ட போதிலும், அதற்கு பின்னரும் ஆங்­காங்கே பேரி­ன­வாதம் தலை­தூக்­கத்தான் செய்­தது. நாட்டில் புதி­ய­தொரு அர­சியல் மாற்றம் நிகழ்ந்­துள்­ள ­நி­லையில், பேரி­ன­வா­தத்­திற்கு மீளவும் எழும்­பவே முடி­யாது என முஸ்­லிம்­களும் ஏனைய சிறு­பான்­மை­யி­னரும் நம்­பிக்கை வைத்­தனர். எனினும், அதனை சவா­லுக்கு உட்­ப­டுத்தும் வகையில் கடந்த சில வாரங்­க­ளாக பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஊட­கங்­களில் தெரி­விக்கும் கருத்­துகள் அமைந்­துள்­ளன.

ஏறா­வூரில் சில முஸ்லிம் குழுக்கள் தீவி­ர­வாத செயல்­களில் ஈடு­பட்­டுள்­ள­தாக ஊட­கங்­க­ளிடம் கூறி­யுள்ள ஞான­சார தேரர், ஜும்மா தொழு­கையின் போது ஆபத்­தான கருத்­துகள் கொண்ட துண்­டுப்­பி­ர­சு­ரங்கள் பகி­ரப்­பட்­ட­தா­கவும் குற்றம் சாட்­டினார். எனினும், அவரின் குற்­றச்­சாட்­டு­களை ஏறாவூர் ஜம்­இய்­யதுல் உலமா கிளை முற்­றாக மறுத்­துள்­ளது. அத்­துடன், இவ்­வா­றான அபத்­த­மான பேச்­சுகள் சமூக அமை­திக்கு களங்கம் ஏற்­ப­டுத்தும் என்றும், மக்களிடையே வெறுப்பு விதைப்­ப­தற்­கான முயற்­சிகள் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இத­னி­டையே, தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தின் பிர­தி­ய­மைச்­ச­ராக பதவி வகிக்கும் முனீர் முளப்பர் மீதும் பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்ளார். ‘முனீர் உள்­ளிட்ட சிலர், தீவிர சிந்­த­னை­களை பரப்பும் அமைப்­பு­க­ளுடன் தொடர்­பு­டை­யவர்கள் எனவும், இதனால் நாடு ஆபத்தில் உள்­ள­தா­கவும் தேரர் கூறினார். இந்த குற்­றச்­சாட்­டு­களை, பிரதி அமைச்சர் மற்றும் ஆளும், எதி­ரணி உறுப்­பி­னர்கள் மறுத்­துள்­ளனர்.

துண்­டுப்­பி­ர­சுர குற்­றச்­சாட்டு
சில வாரங்­க­ளுக்கு முன்பு ஏறாவூர் பள்­ளி­வா­ச­லொன்றில் தனக்கு மரண அச்­சு­றுத்தல் விடுக்கும் துண்­டு­ப் பி­ர­சு­ரங்கள் விநி­யோ­கிக்­கப்­பட்­ட­தாக பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­திருந்தார்.
அத்­துடன், ‘‘ சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுடன் தொடர்­பு­டைய இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் இலங்­கையில் பர­வு­வது குறித்து சமீ­பத்தில் தான் தக­வல்­களை வெளி­யிட்­டதை தொடர்ந்தே மரண அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ருக்கு இது குறித்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்ளேன். நாட்டில் தீவி­ர­வாத நட­வ­டிக்­கைகள் மற்றும் மத­ப­தற்றம் ஆபத்­தான விதத்தில் அதி­க­ரித்­துள்­ளதை இது வெளிப்­ப­டுத்­து­கின்­றது.

ஏறா­வூரின் பாரம்­ப­ரிய முஸ்லிம் சமூ­கத்­தினர் தீவி­ர­வாத ஒடுக்­கு­முறை கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள், எனது உத­வியை கோரி­யுள்­ளனர். அத்­துடன், தங்கள் மத்­தியில் உள்ள தீவி­ர­வாத சக்­திகள் குறித்து அவர்கள் தக­வல்­களை வழங்­கி­யுள்­ள­துடன் இவற்றை பகி­ரங்­கப்­ப­டுத்­து­மாறு கோரி­யுள்­ளனர்.

‘லிபியா கடாபி குழு’ என்ற குழு­வினர் வட்ஸ்அப் மூலம் அச்­சு­றுத்தும் செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளனர், தீவி­ர­வாத கொள்­கை­களை எதிர்க்கும் நபர்­களின் பெயர்­களை வெளி­யிட்­டுள்­ளனர் என ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார்.

ஏறாவூர் உலமா சபை மறுப்பு
ஞான­சார தேரரின் இந்த குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் ஏறாவூர் கிளை­யினால் மறுப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
இது தொடர்­பாக ஏறாவூர் ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைவர் அஷ்ஷெய்க் அல்­ஹாபிழ் ஏ.எல்.சாஜித் ஹுஸைன் (பாகவி) வெளி­யிட்­டி­ருக்கும் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கடந்த 20.05. 2025 திங்­கட்­கி­ழமை பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நடாத்­திய ஊடக சந்­திப்பின் போது, எமது ஏறாவூர் பிர­தே­சத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­பட்ட சம்­ப­வங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்­களில் துண்­டுப்­பி­ர­சுரம் வெளி­யீடு, நாட்டின் சட்­டங்­க­ளுக்கு முர­ணான கடந்த கால நிகழ்­வுகள், “லிபியா கடாபி” எனும் பெய­ரி­லான அமைப்பின் தோற்றம், அடிப்­ப­டை­வாத குழுக்­களின் செயற்­பா­டுகள் உள்­ளிட்ட பல குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தி­ருந்தார். அவரால் முன்­வைக்­கப்­பட்ட தக­வல்கள் யாவும் உண்­மைக்குப் புறம்­பா­னவை. இவ்­வா­றான நிகழ்­வுகள், சமூக விரோதச் செயல்கள், மார்க்க வரம்பு மீறல்கள், நாட்டின் சட்­டத்­திற்கு எதி­ரான அடிப்­ப­டை­வாத குழுச் செயற்­பா­டுகள் எமது பிர­தே­சத்தில் எங்கும் இடம்­பெ­ற­வில்லை.

 

இலங்கை ஒரு பன்முகச் சமூகமாகும். அதனை சிதைக்கும் செயற்பாடுகள் மீண்டும் மெல்ல மெல்ல தலைதூக்குவதாக உணர முடிகிறது. அவ்வப்போது சிலர் தங்கள் சுயநலன்களுக்காக இன, மத ரீதியிலான வெறுப்பு பிரசாரங்களில் ஈடுபடுவது கவலையை ஏற்படுத்துகிறது.

எம­தூரில் சூபிஸ அமைப்பு என்ற பெய­ரிலோ, லிபியா கடாபி என்ற பெய­ரிலோ எந்த அமைப்பும் தோற்றம் பெற­வில்லை. எந்த ஜும்ஆ பள்­ளி­வா­யல்­க­ளிலும் “ஆப்தீன் காஸிம் மற்றும் ஞான­சார தேரர் ஆகியோரை கல்­லெ­றிந்து கொலை செய்­யுங்கள்” எனும் தவ­றான துண்­டுப்­பி­ர­சு­ரங்கள் பகி­ரப்­ப­ட­வில்லை. எம­தூரின் தலை­மைத்­துவ சபை­யான அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா ஏறாவூர் கிளை இதனை உறு­திப்­ப­டுத்­து­கின்­றது.
மேற்­படி கல­கொட அத்த ஞான­சார தேரர் மூலம் முன் வைக்­கப்­பட்ட உண்­மைக்குப் புறம்­பான தக­வல்கள் எம­தூரின் ஒற்­று­மை­யையும் சமூக ஐக்­கி­யத்தை சீர்­கு­லைப்­ப­துடன் நாட்டில் இன முரண்­பாட்டை ஏற்­ப­டுத்­த­வல்­லது. இதனால் எமது பிர­தே­சத்தின் தனித்­துவம், மக்­களின் உணர்­வுகள், சமய ரீதி­யான அன்­றாட செயற்­பா­டுகள் தாக்­க­முற்­றி­ருப்­ப­துடன், எமது நாட்டில் மீண்­டு­மொரு தடவை இன முரண்­பாட்டை ஏற்­ப­டுத்தும் நோக்கில் ஞான­சார தேர­ரினால் வெளி­யி­டப்­பட்ட இவ்­வ­றிக்­கை­யினை வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், குறித்த குற்றச்சாட்டானது எமது பிர­தே­சத்தைச் சேர்ந்த பள்­ளி­வாயல் பரி­பா­லன சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட முரண்­பா­டு­களின் எதி­ரொ­லி­யாக பகை தீர்க்கும் வன்ம உணர்­வுடன் புனை­யப்­பட்ட ஒன்­றாகும். எமது பிர­தே­சத்­திற்கு இழுக்கை ஏற்­ப­டுத்­திய சகோ­த­ரர்­களின் இந்­நா­ச­கார நட­வ­டிக்கை கண்­டிக்­கத்­தக்­க­து. சில மாதங்­க­ளுக்கு முன்னர் யூ டியூப் சமூக வலைத்­த­ளத்தில் குறித்த பள்­ளி­வா­சலின் உறுப்­பி­னர்கள் பலரை போதை விற்­ப­னையில் ஈடு­பட்­ட­தா­கவும், ஆயு­தங்கள் வைத்­தி­ருப்­ப­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்டு, மிக இழி­வாக அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்தியிருந்­தமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வா­றான ஊகங்கள், முறை­யான விசா­ர­ணைகள் இன்றி வெளி­யி­டப்­படும் கருத்துப் பரி­மாற்­றங்கள் நாட்டில் ஐக்­கியம், சமுக புரிந்­து­ணர்வு, ஒரு சமூ­கத்தின் மார்க்க விழு­மி­யங்கள் மீதான அப­கீர்த்­தி­யையும் சந்­தே­கங்­க­ளையும் ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளாகும் எனவும் ஏறாவூர் ஜம்­இய்­யதுல் உலமா வெளி­யிட்ட அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பிர­தி­ய­மைச்சர் முனீர் முளப்பர் மீதான குற்றச்சாட்டுக்கள்
ஏறாவூர் பள்­ளி­வாசல் மீது குற்­றச்­சாட்­டுகள் ஞான­சார தேரரால் முன்­வைக்­கப்­பட்டு அதற்கு மறுப்பு வெளி­யிட்­டப்­பட்­டி­ருக்கும் நிலையில், ஞான­சார தேரர் தேசிய ஒரு­மைப்­பாட்டு பிர­தி­ய­மைச்சர் முனீர் முளப்பர் தொடர்­பிலும் வெறுப்பு பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றார்.

‘தற்­போ­தைய அர­சாங்­கத்தில் பிரதி அமைச்­ச­ராக கட­மை­யாற்றி வரும் முனீர் முளப்பர் இஸ்­லா­மிய கடும்­போக்­கு­வா­தத்தை ஊக்­கு­விக்கும் நபர்’ என பொது­பல சேனா இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் கல­கொ­டத்தே ஞான­சார தேரர் குற்றம் சுமத்­தி­யுள்­ள­துடன், உயிர்த்த ஞாயிறு தற்­கொலைத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய சூத்­தி­ர­தா­ரிகள் அர­சாங்­கத்­துடன் இருப்­ப­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

இஸ்­லா­மிய கடும்­போக்­கு­வாத கொள்­கை­யு­டைய பலர் ஆளும் கட்­சிக்குள் அடைக்­கலம் புகுந்­துள்­ளனர். நிட்­டம்­புவ பகு­தியில் தன்வீர் அக­ட­மியின் பொறுப்­பா­ள­ராக முனீர் கட­மை­யாற்றி வரு­கிறார், கட­வு­ளுக்­காக உயிர்த்­தானம் செய்ய வேண்­டு­மென வலி­யு­றுத்தும் குழு­வொன்றை முனீர் வழி­ந­டத்­து­கின்றார். நல்­லாட்சி அர­சாங்­கத்தை விடவும் இந்த அர­சாங்கத்தில் இஸ்­லா­மிய கடும்­போக்­கு­வாத நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்­து­வதில் மெத்­தனப் போக்­கு பின்­பற்­றப்­ப­டு­கின்­றது என்றும் ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார்.

முனீர் முளப்பர் மறுப்பு
பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை உரை­யாற்­றிய பிர­தி­ய­மைச்சர் முனீர் முளப்பர், ஞான­சார தேரரின் கருத்­துகள் பொய்­யா­னவை, அவை அர­சியல் நோக்­க­மு­டை­யவை என சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

‘தேரர் ஒருவர் என்­னைப்­பற்றி பொய்க் குற்­றச்­சாட்­டு­களை தெரி­வித்து வந்­தி­ருக்­கிறார். திஹாரி பிர­தே­சத்தில் இருக்கும் ஒரு கல்வி நிறு­வ­னத்தின் பொறுப்­பு­தாரி என தெரி­வித்­தி­ருக்­கிறார். நான் திஹாரி பிர­தே­சத்­துக்கு குடி­வந்து தற்­போது 10 வரு­டங்கள் ஆகின்­றன. அதற்கு முன்­பி­ருந்தே குறித்த கல்வி நிறு­வனம் இருந்து வரு­கி­றது. குறைந்­த­பட்சம் அந்த நிறு­வ­னத்தின் பணிப்­பாளர் சபையில் இருப்­ப­வர்­க­ளைக்­கூட எனக்கு தெரி­யாது. அந்த தேர­ருக்கு தகவல் வழங்­கு­ப­வர்கள் பிழை­யான தக­வல்­களை இருக்­கி­றார்கள் என பிர­தி­ய­மைச்சர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அத்­துடன், ‘நாங்கள் அடிப்­ப­டை­வா­தி­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என்ற குற்­றச்­சாட்­டையும் தெரி­வித்­தி­ருந்தார். ஆனால் இந்த நாட்டில் இருக்கும் பெளத்த, இந்து, கிறிஸ்­தவ மதத்­த­லை­வர்­க­ளுடன் எங்­க­ளுக்கு நெருங்­கிய தொடர்பு இருப்­பதை அந்த மதத்­த­லை­வர்­க­ளுக்கு தெரியும். நாங்கள் ஒரு­போதும் அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்­காக கதைத்­த­வர்கள் அல்லர். மாறாக இந்த நாட்டின் அமை­திக்­காக கதைத்­த­வர்கள். எங்கள் மீது குற்­றச்­சாட்டை முன்வைப்­ப­வர்கள் அன்று இந்த நாட்டில் தீ மூட்­டும்­போது, நாங்­கள்தான் நாடு­ பூ­ரா­கவும் சென்று நாட்டில் தேசிய ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்த பாடு­பட்டோம் என்­பதை நினை­வு­ப­டுத்த விரும்­பு­கிறோம் என்றார் பிர­தி­ய­மைச்சர்.

மேலும் ஆளும் கட்சி பாரா­ளு­மன்­ற­ உ­றுப்­பினர் துஷாரி ஜய­சிங்க உரை­யாற்­று­கையில், ‘எமது பிரதி அமைச்சர் ஒருவர் தொடர்பில் ஞான­சார தேரர் மக்­களை கோப­மூட்டும் வகையில் இன­வாத அடிப்­ப­டையில் கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கிறார். ஆனால் எங்­களில் யாரும் அடிப்­ப­டை­வா­திகள் இல்லை. நாங்கள் மிகவும் முற்­போக்­கான பய­ணத்தை மேற்­கொண்டு செல்­கிறோம் என்­பதை தெரி­வித்­துக்­கொள்­கிறோம்.

ஞான­சார தேரர் இதற்கு முன்னர் இவ்­வா­றான இன­வாத கருத்­துக்­களை தெரி­வித்து பேரு­வளை, தர்­கா­நகர், கண்டி திகன பிர­தே­சங்­களில் ஏற்­பட்ட கல­வ­ரத்­தினால் மக்கள் எதிர்­கொண்ட துன்­பங்கள் தொடர்பில் தற்­போது மக்கள் எங்­க­ளுடன் கதைக்­கின்­றனர். அவ­ருக்கு எதி­ராக நீதி­மன்­றத்தில் வழக்கு விசா­ர­ணைகள் இடம்­பெ­றும்­போது மக்கள் வீதிக்­கி­றங்கி பாரிய பிரச்­சினை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். அவ்­வாறான சந்­தர்ப்­பங்­களில் அவ­ரையும் நீதி­மன்­றத்­துக்கு அழைத்துவராமல், சிறைச்­சா­லையில் இருந்­து­கொண்டு, நிகழ்­நிலை ஊடாக வழக்கு விசா­ர­ணை­களை மேற்­கொள்ள தற்­போது சட்­டத்தில் திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது என்றும் துஷாரி ஜய­சிங்க குறிப்­பிட்டார்.

இத­னி­டையே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் உது­மா­லெப்பை உரை­யாற்­று­கையில், தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் தொடர்பில் அண்மையில் இனவாதிகள் பேசிய விடயங்களை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. இனவாதம் பேசுபவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது யாராக இருந்தாலும் பரவாயில்லை. இனவாதத்தை இல்லாதொழிப்பதென தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதில் முன்னேற்றம் காணப்படுகிறதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.

இலங்கை ஒரு பன்முகச் சமூகமாகும். அதனை சிதைக்கும் செயற்பாடுகள் மீண்டும் மெல்ல மெல்ல தலைதூக்குவதாக உணர முடிகிறது. அவ்வப்போது சிலர் தங்கள் சுயநலன்களுக்காக இன, மத ரீதியிலான வெறுப்பு பிரசாரங்களில் ஈடுபடுவது கவலையை ஏற்படுத்துகிறது.

பொதுபலசேனா போன்ற அமைப்புகள் வெளிப்படையாக முஸ்லிம்களை இலக்குவைத்து இனவாத கருத்துகளையும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். இது நாட்டின் அமைதியை குலைப்பதாகவே அமைந்துள்ளது.

இப்படியான சூழ்நிலையில், உண்மைத் தகவல்களை முன்னிறுத்தி, சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்திற்கும், ஊடகங்களுக்குமான ஒரு கடமையாகும். அதற்கும் மேலாக, ஒவ்வொரு பொது மகனும் தான் எதிர்பார்க்கும் சமூக நீதிக்காகப் பேசத் தொடங்க வேண்டும். அதாவது, இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இடமில்லாத, உரிமையும், சமத்துவமும் நிரம்பிய இலங்கையை உருவாக்குவதே நம் அனைவரது பொறுப்பாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.