ஞான­சார தேரர் எனக்கு எதி­ராக தெரி­வித்­துள்ள குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ரணை நடத்துக

பிரதியமைச்சர் முனீர் முளப்பர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

0 58

(எம்.ஆர்.எம்.வசீம்)
கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஊடக சந்­திப்­பொன்றை நடத்தி தனக்கு எதி­ராக தெரி­வித்­துள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விரி­வான விசா­ரணை மேற்­கொண்டு சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்டும் என தேசிய ஒரு­மைப்­பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரி­வித்­துள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபர் பிரி­யந்த வீர­சூ­ரி­ய­வுக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
கடந்த 20ஆம் திகதி கல­கொட அத்தே ஞான­சார தேர­ரினால் நடத்­தப்­பட்ட பொது­பல சேனாவின் ஊடக சந்­திப்­பின்­போது முனீர் முளப்பர் ஆகிய என்­னைப்­பற்றி உண்­மைக்கு புறம்­பான அறி­விப்­பொன்றை மேற்­கொண்டு ஊட­கங்கள் ஊடாக அவ­தூறு பரப்பி இருப்­பது அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

ஊட­கங்­களில் வெளி­யி­டப்­பட்ட அவ­ம­திப்பு அறிக்­கையின் காணொ­ளியை இத்துடன் இணைத்துள்ளேன்.

தேரர் குறிப்பிட்டுள்ளதைப் போல, நிட்­டம்­புவ திஹாரி பிர­தே­சத்தில் அமைந்­துள்ள தன்வீர் நிறு­வனம், ஜமாஅதே இஸ்லாம் மற்றும் இஹ்வான் முஸ்லிம் ஆகிய அமைப்­பு­க­ளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதே­நேரம் கட­வு­ளுக்­காக மக்­களைக் கொல்­ப­வ­ரா­கவோ அல்­லது அதை ஆத­ரிப்­ப­வ­ரா­கவோ நான் ஒரு­போதும் இருந்­த­தில்லை, மேலும் இந்தக் குற்­றச்­சாட்­டுகள் அனைத்­தையும் நான் கடு­மை­யாக மறுக்­கிறேன்.

மேலே பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்ள தேரரின் குற்­றச்­சாட்டின் உண்மைத் தன்மை குறித்து விரி­வான மற்றும் வெளிப்­ப­டை­யான விசா­ர­ணையை நடத்தி, தேவை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கவும், மக்கள் பிர­தி­நி­தி­யான என்னைப் பற்­றிய தவ­றான சித்தரிப்பை சமூ­கத்தில் ஏற்­ப­டுத்தி எனது நற்­பெ­ய­ருக்கு களங்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சித்­த­மைக்­காக குறித்த தேரர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கிறேன்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.