இலங்கை–பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹினிதும செயலாளராக முஜிபுர் தெரிவு

0 42

பத்­தா­வது பாரா­ளு­மன்­றத்தின் இலங்கை – பலஸ்­தீன பாரா­ளு­மன்ற நட்­பு­றவு சங்­கத்தின் தலை­வ­ராக புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் கலா­நிதி ஹினி­தும சுனில் செனெ­வியும் செய­லா­ள­ராக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹுமான் ஆகி­யோரும் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இலங்கை – பலஸ்­தீன பாரா­ளு­மன்ற நட்­பு­ற­வுச்­சங்­கத்தை மீள ஸ்தாபிப்­ப­தற்­கான கூட்டம் சபா­நா­யகர் (வைத்­தியர்) ஜகத் விக்­கி­ர­ம­ரத்ன தலை­மையில் கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெற்­ற­போதே இத்­தெ­ரி­வுகள் இடம்­பெற்­றன.
இலங்­கைக்­கான பலஸ்­தீனத் தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல் அவர்­களும் இதில் கௌரவ விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்டார். இதில் பிரதி சபா­நா­யகர் (வைத்­தியர்) ரிஸ்வி சாலி மற்றும் அமைச்­சர்கள், பிர­தி­ய­மைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற செய­லாளர் நாயகம் குஷானி ரேஹா­ண­தீர உள்­ளிட்ட பலரும் கலந்­து­கொண்­டனர்.

இதன்­போது, பகி­ரப்­பட்ட மதிப்­புகள் மற்றும் பரஸ்­பர மரி­யா­தையின் அடிப்­ப­டையில் கட்­ட­மைக்­கப்­பட்ட இலங்­கைக்கும் பலஸ்­தீ­னத்­திற்கும் இடை­யி­லான ஆழ­மாக வேரூன்­றிய நட்பை இரு தரப்­பி­னரும் எடுத்­து­ரைத்­தனர். பலஸ்­தீன நலன் மற்றும் பலஸ்­தீன மக்­களின் உரி­மை­க­ளுக்­கான இலங்­கையின் நீண்­ட­கால ஆத­ரவு இதன்­போது சுட்­டிக்­காட்­டப்­பட்­ட­துடன் பல ஆண்­டு­க­ளாக இலங்கை மக்கள் பலஸ்­தீன மக்­க­ளுடன் தொடர்ந்து ஒரு­மைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தி வரு­வது இங்கு குறிப்­பி­டப்­பட்­டது.

2015 ஆம் ஆண்டு முதன்­மு­தலில் ஸ்தாபிக்­கப்­பட்ட இலங்கை பலஸ்­தீன பாரா­ளு­மன்ற நட்­பு­றவு சங்கம், இரு பாரா­ளு­மன்­றங்­க­ளுக்­கி­டையில் கலந்­து­ரை­யாடல் மற்றும் ஒத்­து­ழைப்பை வளர்ப்­பதில் முக்­கிய பங்கு வகித்­துள்­ளது என்­பது இங்கு தெரி­விக்­கப்­பட்­டது. அத்­துடன், பாரா­ளு­மன்ற இரா­ஜ­தந்­தி­ரத்தை வலுப்­ப­டுத்­துதல், பரஸ்­பர புரி­தலை ஊக்­கு­வித்தல் மற்றும் கலாசாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் உறவுகளை வலுப்படுத்தல் என்பவற்றுக்கு மீள ஸ்தாபிக்கப்பட்ட நட்புறவுச் சங்கம் புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டைக் ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.