உள்ளூர் அதிகாரத்தை கைப்பற்ற தொடரும் அரசியல் போராட்டம்!

0 68

எஸ்.என்.எம்.சுஹைல்

இலங்­கை­யி­லுள்ள 339 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்கள் கடந்த மே 6 ஆம் திகதி முடி­வ­டைந்­துள்ள நிலையில் இது­வரை பெரும்­பா­லான உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் அதி­கா­ரங்­களை யார் பெறப்­போ­கின்­றனர் என்ற தெளி­வற்ற நிலைமை காணப்­ப­டு­கின்­றது. தேர்தல் முறையில் இருக்கும் ஒரு பாத­க­மான நிலை இது­வாக இருந்­தாலும் சிறு­பான்­மை­யினர் மற்றும் சிறு கட்­சி­க­ளுக்கு இது­வொரு சாத­க­மான அர­சியல் காப்­பீ­டா­கவே கருத முடியும்.

இந்­நி­லையில், எதிர்­வரும் ஜூன் மாதம் 2 ஆம் திக­தி­யன்று சபையை நிறுவ வேண்­டி­யி­ருக்­கி­றது. சபை­களில் பெரும்­பான்மை பலத்­துடன் இருக்கும் கட்­சி­க­ளுக்கு ஆட்­சி­ய­மைப்­பதில் சிக்கல் இருக்­காது. எனினும், அதிக ஆச­னங்கள் அல்­லது வாக்­கு­களை எடுத்த கட்­சிகள் சபை­களில் ஆட்­சியை கைப்­பற்­று­வ­தற்­கான பெரும்­பான்­மையை நிரூக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

எது எப்­ப­டியோ தொடரும் இந்த அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான போராட்­டத்தில் பேரம் பேசல்­க­ளுக்கு பஞ்சம் இல்லை. இலங்­கையின் ஆளும் அர­சாங்­க­மான தேசிய மக்கள் சக்­தியின் வீராப்பு இன்று குறை­வ­டைந்­தி­ருக்­கி­றது என்றே சொல்ல வேண்டும். தேர்­த­லுக்கு முன்பு அவர்கள் தனித்தே ஆட்­சி­ய­மைப்போம் என கூறி­ய­வர்கள் இன்று சுயேட்சைக் குழுக்கள் மற்றும் சிறு­கட்­சி­களின் ஆத­ரவை நாடும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. அவர்­களின் ஆணவப் பேச்­சுகள் குறைந்து இன்று சிறு கட்­சி­க­ளிடம் மண்­டி­யிடும் நிலைமை தோன்­றி­யி­ருக்­கி­றது.

குறிப்­பாக கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் பாரா­ளு­மன்ற பொதுத்­தேர்­த­லிலும் முஸ்லிம் பிர­தே­சங்­களில் தேசிய மக்கள் கட்­சிக்கு இருந்த செல்­வாக்கு இந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் வெகு­வாக குறை­வ­டைந்­துள்­ளது. முஸ்லிம் மக்­களை பெரும்­பான்­மை­யாக கொண்­டுள்ள கிழக்கு மாகா­ணத்­திலும் அதற்கு வெளியில் முசலி, அக்­கு­றணை, கம்­பளை, பேரு­வளை, களுத்­துறை, மாபோ­ல-­வத்­தளை மற்றும் கொழும்பு மாந­க­ரிலும் தேசிய மக்கள் சக்­திக்கு வாக்குச் சரிவு ஏற்­பட்­டுள்­ள­துடன் தோல்­வியை தழுவும் நிலையும் ஏற்­பட்­டுள்­ளது. ஆனாலும், மாவ­னெல்லை மற்றும் புத்­தளம் நக­ரிலும் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்­தி­யுள்­ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்
உள்­ளூ­ராட்சி தேர்­தலில் அதிக ஆச­னங்­களை வென்­றுள்ள முஸ்லிம் தரப்­பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் திகழ்­கி­றது. அதன்படி முஸ்லிம் காங்கிரஸே முஸ்லிம் சமூகத்தின் ஆளும் கட்சி என்பதை இந்த தீர்தல் நிரூபித்துள்ளது. ஆறு சபை­களில் வெற்­றி­பெற்­றுள்­ள­துடன் நேர­டி­யாக 116 ஆச­னங்­களை வென்­றுள்­ளது. அத்­துடன், ஐக்­கிய தேசியக் கூட்­ட­ணியின் தராசு சின்னம் மற்றும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் தொலை­பேசி சின்னம் என்­ப­வற்­றிலும் போட்­டி­யிட்டு 200 வரை­யி­லான ஆச­னங்­களை அக்­கட்சி பெற்­றுள்­ளது. பெரும்­பாலும் பட்­டியல் மூல­மான ஆச­னங்­க­ளையே அக்­கட்சி வென்­றுள்­ள­மை­யினால் அவற்றை சுழற்சி அடிப்­ப­டையில் வட்­டா­ரங்­களில் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டைந்­தாலும் அதிக ஆச­னங்­களை பெற்­ற­வர்­க­ளுக்கு வழங்க கட்சி தீர்­மா­னித்­துள்­ள­தாக அக்­கட்­சியின் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நிஸாம் காரி­யப்பர் கூறினார்.

குறிப்­பாக தேர்­தலில் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடல் நடத்தி சுமு­க­மாக இந்த தீர்­மா­னத்­திற்கு வர முடிந்­ததாக கட்­சியின் செய­லாளர், பட்­டியல் ஆசன பங்­கீடு இன்­றோடு நிறை­வுக்கு வரு­கின்­றது எனவும் குறிப்­பிட்டார்.

இத­னி­டையே, எதிர்­வரும் ஞாயிறு மற்றும் திங்கட் கிழ­மை­களில் கட்­சியின் தலைமை அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு மற்றும் திரு­கோ­ண­மலை மாவட்­டங்­க­ளுக்கு விஜயம் செய்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி சபை­களை கைப்­பற்­று­வது குறித்­த­தான பேச்­சு­வார்த்­தை­களை இற்­றைப்­ப­டுத்­த­வுள்­ள­தா­கவும் நிஸாம் காரி­யப்பர் எம்.பி. தெரி­வித்தார்.
‘வடக்கு கிழக்கு மாக­ாணத்­தி­லுள்ள பல உள்­ளூ­ராட்சி சபை­க­ளிலும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் இணைந்து அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்ளும் சந்­தர்ப்­பங்கள் அதி­க­மா­கவே இருக்­கின்­றது. அவர்­க­ளு­டனும் இரண்டாம் கட்ட பேச்­சு­வார்த்­தை­களை நாம் முன்­னெ­டுக்­க­வுள்ளோம்’.

இத­னி­டையே, ‘கொழும்பு மாந­கர சபை மற்றும் களுத்­துறை மாந­கர சபை என்­ப­வற்றில் ஐக்­கிய மக்கள் சக்­தி­யுடன் இணைந்து ஆட்­சியை கைப்­பற்றும் சாத்­தியம் அதிகம் இருக்­கி­றது. கட்­சியின் உயர் மட்­டத்தில் இதற்­கான பேச்­சு­வாத்­தை­ககள் இடம்­பெற்­றுள்­ளன. எனினும், தேசிய மக்கள் சக்தி எங்­க­ளோடு எந்­த­வொரு உத்­தி­யோ­க­பூர்வ பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் ஈடு­ப­ட­வில்லை. எமது கட்­சியின் கீழ் மட்­டங்­க­ளுடன் அக்­கட்­சியின் கீழ்­மட்­டத்­தினர் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற முறையில் ஆத­ரவு கோரி­வ­ரு­கின்­றனர். எவ்­வா­றா­யினும் அக்­கட்­சியின் உயர்­மட்டம் எமது கட்­சி­யுடன் பேச்­சு­களை நடத்­து­மாயின் தேசிய மக்கள் சக்­திக்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான ஆத­ரவு வழங்­கு­வது குறித்தும் நாம் பரி­சீ­லிப்­ப­தற்கு தயா­ரா­கவே இருக்­கின்றோம்’ என்றும் மு.கா. செய­லாளர் குறிப்­பிட்டார்.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ்
அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பட்­டியல் வேட்­பா­ளர்கள் தெரிவு 70 வீதம் பூர்த்­தி­ய­டைந்­துள்­ள­தாக அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. நாம் அதிக ஆச­னங்­களை பெற்­றுக்­கொண்ட உள்­ளூ­ராட்சி சபைகள் மற்றும் கூட்­ட­ணிகள் மூலம் அதி­கா­ரத்தை பெற்றுக் கொள்ள வாய்ப்­புகள் இருக்கும் இடங்­களில் நாம் பிற கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டுள்ளோம். குறிப்­பாக ஐக்­கிய மக்கள் சக்­தி­யுடன் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றுள்­ளன. இது­த­விர, இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி மற்றும் ஜன­நா­யக தமிழ் தேசியக் கூட்­ட­ணி­யு­டனும் பேசி­யுள்ளோம் எனவும் அ.இ.ம.கா. தலைவர் குறிப்­பிட்டார்.

தேசிய காங்­கிரஸ்
தேசிய காங்­கி­ர­ஸா­னது அக்­க­ரைப்­பற்று மாந­கர சபை­யிலும் அக்­க­ரைப்­பற்று பிர­தேச சபை­யிலும் அறு­திப்­பெ­ரும்­பான்­மையை பெற்­றுள்­ளது. அந்த சபை­களில் ஆட்­சி­ய­மைப்­பதில் பாரிய இழு­பறி நிலை இல்­லாமை அவர்­க­ளுக்கு பெரிய சிக்­க­லாக அமை­யாது. எனினும், அக்­கட்சி அட்­டாளைச் சேனை, இறக்­காமம் மற்றும் சம்­மாந்­துறை ஆகிய பிர­தேச சபை­களில் கிடைத்த ஆச­னங்கள் பகிர்வு மற்றும் ஆட்சி அமைக்கும் தரப்­பி­ன­ருக்கு ஆத­ர­வ­ளிப்­பது குறித்தான் பேச்­சுகள் இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

ஐக்­கிய மக்கள் சக்தி
நாடு ­மு­ழு­வ­தி­லு­முள்ள உள்­ளூ­ராட்சி சபை­களில் முஸ்லிம் வாக்­கா­ளர்கள் அதி­க­மாக உள்ள வட்­டா­ரங்­களில் பொது­வாக ஐக்­கிய மக்கள் சக்­தியின் வேட்­பா­ளர்­களே வெற்­றி­பெற்­றி­ருக்­கின்­றனர். குறிப்­பாக கண்டி மாவட்­டத்தை எடுத்­துக்­கொண்டால் அக்­கட்சி வெற்­றி­பெற்ற வட்­டா­ரங்­களில் பெரும்­பா­லா­னவை முஸ்லிம் வாக்­கா­ளர்­களை அதி­க­மாகக் கொண்ட வட்­டா­ரங்­க­ளாகும். இந்­நி­லமை, ஏனைய மாவட்­டங்­க­ளிலும் காணப்­ப­டு­கின்­றது.
திரு­கோ­ண­மலை:
கிழக்கு மாகா­ணத்தில் குறிப்­பாக திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள முஸ்லிம் பிர­தே­சங்­களில் ஐக்­கிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்­தி­யுள்­ளது. இந்­நி­லையில், கிண்­ணியா நக­ர­சபை, கிண்­ணியா பிர­தேச சபை மற்றும் குச்­ச­வெளி, மூதூர், கந்­தளாய் மற்றும் தம்­ப­லகாம் பிர­தேச சபையில் ஆட்­சி­ய­மைப்­பது தொடர்பில் பல்­வேறு கட்­சி­க­ளுடன் முதற்­கட்ட பேச்­சுகள் இடம்­பெற்­றுள்­ள­தாக ஐக்­கிய மக்கள் சக்­தியின் உதவிச் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இம்ரான் மகரூப் தெரி­வித்தார்.
குறிப்­பாக, இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ், நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி மற்று ஜன­நா­யக தமிழ் தேசிய கூட்­டணி என்­ப­வற்­றுடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டி­ருக்­கிறோம். பெரும்­பாலும் எல்­லாத் ­த­ரப்­பி­ன­ரு­ட­னான பேசு­வார்­தை­களும் சாத­க­மா­ன­தா­கவே அமைந்­தி­ருக்­கி­றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­சுடன் இது­வரை பேச்­சுகள் இடம்­பெ­ற­வில்லை. அவர்கள் எம்­முடன் பேச்சு நடத்­தினால், அவர்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வது குறித்தும் ஆராய்ந்து பார்த்து தீர்­மானம் எடுக்க முடியும். நீண்­ட­கா­ல­மாக இந்த பிர­தே­சத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆளு­கைக்கு கீழ் அதி­க­மான சபைகள் இருந்­துள்­ளன. இம்­முறை அவர்­க­ளுக்கு பாரிய சரிவு ஏற்­பட்­டுள்­ளது.
கொழும்பு:
கொழும்பு மாந­கர சபையில் எதிர்க் கட்­சி­க­ளுடன் இணைந்து அதி­கா­ரத்தை பெறு­வ­தற்கு ஐக்­கிய மக்கள் சக்தி முயற்­சித்து வரு­வ­தாக கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அக்­கட்­சியின் பிரதிச் செய­லா­ள­ரு­மான முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.
ஐக்­கிய தேசியக் கட்சி எமது கட்­சிக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக ஏற்­க­னவே அறி­வித்­துள்­ளது. அத்­தோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி உள்­ளிட்ட ஏனைய எதிர்க்­கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தை­களில் தாம் ஈடு­பட்டு வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

கண்டி:
அக்­கு­றணை பிர­தேச சபையில் ஐக்­கிய மக்கள் சக்தி ஆட்­சி­ய­மைப்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது என அக்­கட்­சியின் உதவித் தவி­சாளர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.
எமக்கு அக்­கு­றணை பிர­தேச சபையில் ஆட்­சி­ய­மைக்க இன்னும் மூன்று ஆச­னங்­களே அவ­சி­ய­மா­கின்­றன. ஏற்­க­னவே, ஐக்­கிய தேசியக் கட்சி எமக்­கான ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. அத்­துடன், சுயா­தீன குழுக்கள் மற்றும் பிற அர­சியல் கட்­சி­களின் ஆத­ரவும் எமக்கு கிடைத்­துள்­ள­தாக தெரி­வித்த ஹலீம், கண்டி மாவட்ட முஸ்­லிம்கள் தேசிய மக்கள் சக்­திக்கு தகுந்த பாடம் புகட்­டி­யுள்­ளனர் எனவும் குறிப்­பிட்டார்.

நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி
நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி நடு­நி­லை வகிக்க எதிர்­பார்ப்­ப­தாக அக்­கட்­சியின் தேசிய அமைப்­பாளர் எம்.பி.முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.
நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணிக்கு இம்­முறை நாடு­மு­ழு­வ­து­மாக 11 ஆச­னங்­களே கிடைத்­துள்­ளன. நாம் அனைத்து சபை­க­ளிலும் தனித்து இயங்­கு­வ­தற்கே எதிர்­பார்க்­கிறோம். வாக்­கெ­டுப்­பின்­போது சுயா­தீ­ன­மாக இயங்­கு­வது குறித்து அவ­தானம் செலுத்தி வரு­கின்றோம். எனினும் புத்­தளம் மாந­கர சபை விட­யத்தில் மாற்று நிலைப்­பாடு இருக்­கின்­றது. எனவே, இது விட­ய­மாக இன்றோ நாளையோ கட்­சியின் உயர்­குழு கூடி தீர்­மா­ன­மொன்றை எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பு
கொழும்பு மாந­கர சபையின் மேயரை நிய­மிப்­ப­தற்­கான வாக்­கெ­டுப்பில் ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பு யாருக்கு ஆத­ர­வ­ளிப்­பது என்­பதை தீர்­மா­னிக்கும் முக்­கி­ய­மான கலந்­து­ரை­யா­ட­லுக்­காக ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பின் தலை­மைத்­துவ சபையும், உச்ச பீடமும் இன்று கூட­வுள்­ள­தாக ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பின் பொதுச் செய­லா­ளர் ஐ.ஏ.கலீலுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

அண்மையில், ஜனா­தி­பதி அனுர குமார திசா­நா­யக்கவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினோம். அத்­துடன் கொழும்பு மாந­கர முன்னாள் மேயர் திரு­மதி ரோஸி சேன­நா­யக்கவுடனும் நாங்கள் கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம். முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அழைப்பின் பேரில், முன்னாள் அமைச்சர் சாகல ரத்­நா­யக்க வையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினோம். அது­போன்று நாடா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மா­னு­டனும் நாங்கள் கலந்­து­ரை­யா­டினோம். இனி விரைவில் தீர்மானத்தை அறிவிப்போம் என்றார்.

ஐக்­கிய தேசியக் கட்சி
ஐக்­கிய தேசியக் கட்சி பிள­வு­பட்ட பிறகு இம்­முறை முஸ்லிம் பிர­தே­சங்­களில் ஓர­ளவு ஆத­ரவு இருப்­பதை இந்த தேர்தல் உறுதி செய்­துள்­ள­தாக அக்­கட்­சியின் அக்­கு­றணை பிர­தேச அமைப்­பா­ளரும் முன்னாள் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான ஜெ.ஜெனு­லாப்தீன் (லாபிர் ஹாஜியார்) குறிப்­பிட்டார்.

கட்­சிக்கு இம்­முறை 381 ஆச­னங்­களே கிடைத்­துள்­ளன. வட்­டாரம் மூல­மாக எமக்கு நேர­டி­யான முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வங்­களும் கிடைத்­துள்­ளன. குறிப்­பாக கொழும்பு மாந­கரில் இரண்டு வட்­டா­ரங்கள் வெல்­லப்­பட்­டுள்­ளன. அவை இரண்­டிலும் முஸ்லிம் வேட்­பா­ளர்­களே போட்­டி­யிட்­டி­ருந்­தனர். ஏனைய முஸ்லிம் பிர­தே­சங்­க­ளி­லுள்ள வேட்­பா­ளர்­களும் அதிக வாக்­கு­களை பெற்­றி­ருக்­கின்­றனர். பட்­டியல் மூலம் கிடைத்த ஆச­னங்­களை வட்­டா­ரங்­களில் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டைந்­தாலும் அவர்கள் பெற்ற வாக்கு விகி­தா­சார அடிப்­ப­டையில் ஆச­னங்கள் பகிர்­ந்து கொடுப்­ப­தற்கு கட்சி தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. இதன்­படி நாட்டின் பல பகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக முஸ்லிம் உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் எனவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தி
தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்ற உள்ளூராட்சி சபைகளில் தாமே ஆட்சியமைப்போம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை பெற்றுள்ள சபைகளில் ஆட்சியமைக்கும் உரிமையை இலகுவாக பெற்றுள்ளது. எனினும், சில பிரதேசங்களில் சுயாதீனக் குழுக்கள் மற்றும் சிறிய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்காக சுயாதீனமாக உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட தரப்பினர்களுடனும் சிறிய கட்சிளுடன் அக்கட்சியின் பெலவத்தை தலைமையகத்தில் நேற்று முன்தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு உட்பட இன்னும் சில சிறுபான்மை தரப்புகளும் கலந்துகொண்டிருந்தன.

எது எவ்வாறிருப்பினும் இந்த கலப்பு முறை தேர்தலானது பெரிய கட்சிகளுக்கு ஒரு பொறியையே வைத்துள்ளது. பன்மைத்துவமுள்ள இந்நாட்டில் எந்த தரப்பையும் புறந்தள்ளி செயற்பட முடியாத அளவிற்கு இந்த தேர்தல் முறை அமைந்திருப்பது சிறுபான்மையினருக்கும் சிறு சமூகக் குழுக்களுக்கும் சாதகமானது என்றே குறிப்பிட முடியும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.